India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஹர்திக் நேற்று அணியை சரியாக வழிநடத்தவில்லை என சில MI ஃபேன்ஸ் விமர்சிக்கின்றனர். அதேநேரம், பவுலிங்கில் 5 விக்கெட், பேட்டிங்கில் 16 பந்துகளில் 2 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 28 ரன்கள் என தனது பங்கை சரியாகவே செய்திருக்கிறார். ஆனாலும், டீம் தோற்று விட்டதை அவர் பொறுத்துக் கொள்ள முடியாமல், கண்ணீர்விட்ட காட்சி வைரலாகி வருகிறது. MI அணியின் தோல்விக்க்கு என்ன காரணம்?
உடல் ஆரோக்கியத்திற்கு தூக்கம் அவசியம் என்ற போதிலும், வேலை பளுவால் தூக்கம் பாதிக்கிறது. குறைவான தூக்கம் பக்கவாதம், மாரடைப்பு ஆகிய பிரச்னைக்கு வழிவகுக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, Week-endல் அதிக நேரம் தூங்குவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள் எனவும் அறிவுறுத்துகின்றனர். ஆகவே, இனி Weekendல் நைட் ஃபுல்லா ஊற் சுற்றுவதை குறைத்துக்கொண்டு, நல்லா தூங்கி மார்னிங் லேட்டாக எழுந்துக்கோங்க!
பாஜக தலைவர் பதவிக்கான ரேஸில் தான் இல்லை என அண்ணாமலை கூறிய பிறகு, அடுத்தது என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவருக்கு மத்தியில் இணையமைச்சர் பதவி வழங்கத் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால், நான் டெல்லி செல்ல மாட்டேன் தமிழகத்திலேயே இருப்பேன் என்றும் கூறியுள்ளார். இதனிடையே மோடி நாளை தமிழகம் வந்து சென்றபிறகு ரஜினி பாணியில் இமயமலைக்கு ஆன்மீக பயணம் செல்ல உள்ளாராம்.
‘ஜனநாயகன்’ ஷூட்டிங்கை மே 15ஆம் தேதிக்குள் முடிக்க இயக்குநர் எச்.வினோத் திட்டமிட்டுள்ளார். கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க தயாராகும் வினோத், அதையடுத்து பாடல் காட்சிகளை படமாக்க வெளிநாடு செல்ல முடிவு செய்துள்ளாராம். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்ததும், ஜூன் மாதம் முதல் விஜய் முழுநேர அரசியலில் ஈடுபடுகிறார். தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் சென்று மக்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய கடல்சார் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றும் கடல்சார் துறையை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 5 ஆம் தேதி கடல்சார் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1919ல் இதே நாளில் தான் இந்தியாவின் முதல் நீராவிக் கப்பல் எஸ்.எஸ்.லாயல்டி மும்பையில் இருந்து லண்டனுக்கு சென்றது. அதன் நினைவாக 1964 முதல் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
பாஜகவின் புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை; யாரையும் பரிந்துரையும் செய்யவில்லை என அண்ணாமலை கூறிவிட்டார். இதன் மூலம், நயினார் நாகேந்திரன்தான் புதிய தலைவர் என்றும், இதுதான் அதிமுகவின் விருப்பமும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நயினாருக்கு பதிலாக தனது ஆதரவாளரான கருப்பு முருகானந்தத்தை அண்ணாமலை பரிந்துரை செய்ததாக கூறப்பட்ட நிலையில், அதற்கு நேற்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பிரதமர் மோடி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் சூழலில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. 2018–2020 வரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம், நாகை மாவட்ட மீனவர்களின் 74 படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. அவற்றை கடலில் மூழ்கடிக்க இலங்கை முடிவு செய்திருப்பதாக வெளியான தகவல் தமிழக மீனவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் இதனை தடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
இன்று 2 ஐபிஎல் லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் சென்னை, டெல்லி அணிகள் மோதுகின்றன. ருதுராஜ் இல்லாததால் சென்னை அணியை தோனி வழிநடத்துவார் எனத் தகவல். தொடர் தோல்விகளில் இருந்து சென்னை மீளுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதேபோல், இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
பப்புவா நியூ கினியாவில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியுள்ளதால் பசிபிக் பெருங்கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடிக்கடி நிலநடுக்கங்களை சந்தித்து வரும் நாடுகள் பட்டியலில் பப்புவா நியூ கினியாவும் ஒன்று. அண்மையில் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
பிறமொழி படங்களின் இன்ஸ்பிரேஷனில் தமிழில் பல படங்கள் வந்துள்ளன. அவற்றில் முக்கியமான சிலவற்றை பார்ப்போம். *அவ்வை சண்முகி: 1993ல் வெளியான ஹாலிவுட் படமான Mrs. Doubtfire. *கஜினி: கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய Memento. *தீபாவளி: கொரிய படமான Moment to Remember. *விருதகிரி: 2008ல் வெளியான ஹாலிவுட் ஆக்ஷன் த்ரில்லர் படமான Taken. ஜிகர்தண்டா: கொரிய கேங்ஸ்டர் படமான Dirty Carnivel.
Sorry, no posts matched your criteria.