News January 20, 2026
BREAKING: விழுப்புரத்தில் கூண்டோடு கைது!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் இன்று (ஜன.20) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காலமுறை ஊதியம், ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் காவல்துறையினர் அனைவரையும் கூண்டோடு கைது செய்தனர். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் தொடரும் என கூறினார்கள்.
Similar News
News February 14, 2026
விழுப்புரம்: பெண் குழந்தைக்கு ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 14, 2026
திண்டிவனம் அருகே துடிதுடித்து பலி!

விழுப்புரம்: திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டை அடுத்த கல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ்(25). தனியார் கம்பெனி ஊழியரான இவர், கடந்த பிப்.11ஆம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென தடுமாறி விழுந்தவர், படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக அவரை அழைத்துச் சென்ற போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 14, 2026
விழுப்புரத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை!

கடலூர் அருகே பரவனூர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் த. கண்ணதாசன் இவரது மகள் விஷ்ணுபிரியாவுக்கும், விழுப்புரம் ஆசிரியர் நகரைச் சேர்ந்த விக்ரமனுக்கும் திருமணமாகி 11ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் விஷ்ணு பிரியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் மர்மம் இருப்பதாக விஷ்ணுபிரியா தந்தை விழுப்புரம் தாலுகாவில் நிலையத்தில் புகார் அளித்தார்.


