News January 20, 2026
BREAKING: விழுப்புரத்தில் கூண்டோடு கைது!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் இன்று (ஜன.20) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காலமுறை ஊதியம், ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் காவல்துறையினர் அனைவரையும் கூண்டோடு கைது செய்தனர். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் தொடரும் என கூறினார்கள்.
Similar News
News February 7, 2026
விழுப்புரம்: இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க
News February 7, 2026
உலக புற்றுநோய் தினம் தினத்தை முன்னிட்டு பேரணி!

இன்று (பிப்.07) விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில் தனியார் மருத்துவமனை சார்பில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர்
ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட சுகாதார அலுவலர் மரு. செந்தில் குமார் உட்பட பலர் உள்ளனர்.
News February 7, 2026
விழுப்புரத்தில் போலீஸ் வேலை கனவா..? DONT MISS

விழுப்புரம் மாவட்ட ஊர்காவல் படைக்கு ஆயுதப்படை மைதானத்தில் (14-02-2026) தேதியில் ஆள் சேர்ப்பு நடைபெற இருக்கிறது.
இதற்கு வேண்டிய தகுதிகள் :
1. பத்தாம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும்
2. 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்
3. ஆண்கள் 165 சென்டிமீட்டர் உயரம், பெண்கள் 155 சென்டிமீட்டர் உயரம் இருக்க வேண்டும்.
இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


