News March 27, 2025

2 நாள்களுக்கு ஜாக்கிரதையாக இருங்கள்..!

image

தமிழகத்தில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், வெப்ப பாதிப்பைத் தவிர்க்க பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் என பொதுச் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மீறி வெளியில் செல்வோர் குடிநீர், குடை ஆகியவற்றை எடுத்துச் செல்லுங்கள்.. SHARE IT

Similar News

News March 30, 2025

21ம் நூற்றாண்டில் பூகம்பத்தால் இதுவரை 6 லட்சம் பேர் மரணம்!

image

டிச. 26, 2004ல் இந்தோனேசியாவை தாக்கிய பூகம்பத்தால் 2.30 லட்சம் பேரும், ஜன. 12, 2010ல் ஹைட்டியைத் தாக்கிய பூகம்பத்தால் 3 லட்சம் பேரும் இறந்தனர். அதே போல, மே 12, 2008ல் சீனா மற்றும் அக்.8, 2005ல் காஷ்மீரில் தாக்கிய பூகம்பத்தால் தலா 87 ஆயிரம் பேரும் இறந்தனர். பிப். 6, 2023ல், துருக்கி மற்றும் சிரியாவில் 62 ஆயிரம் பேர் இறந்தனர். ஜன. 26ல் 2001குஜராத்தில் 20 ஆயிரம் பேரும் இறந்துள்ளனர்.

News March 30, 2025

பள்ளிகளுக்கு முன்கூட்டியே இறுதித் தேர்வு

image

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாகப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்.9ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகள், ஏப்.7 முதல் 17ஆம் தேதி வரை நடத்தப்பட்டு முன்கூட்டியே விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

News March 30, 2025

எம்புரானில் நீக்கப்பட உள்ள காட்சிகள்? என்னாச்சு..

image

மோகன்லாலின் எம்புரான் படம் வியாழக்கிழமை வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் குஜராத் கலவரம் போன்ற காட்சிகள் இடம்பெற்றதால் சர்ச்சை எழுந்தது. இதனால் படத்தில் இருந்து 17 காட்சிகளில் திருத்தம் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம். படத்தின் புதிய வெர்ஷன் ஏப்ரல் 2ஆம் தேதியில் இருந்து திரையிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

error: Content is protected !!