India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤பொன்முடியை அமைச்சராக நியமிக்க ஆளுநர் மறுத்ததை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது ➤அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது ➤ மார்ச் 31ஆம் தேதி அனைத்து வங்கிகளும் செயல்படும். ➤அதிமுகவுடன் வருகிற சட்டப்பேரவை தேர்தலிலும் கூட்டணி தொடரும் என பிரேமலதா அறிவிப்பு ➤ ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் விருப்பம்
ரவிச்சந்திரன் அஷ்வின் தான் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் என கேப்டன் ரோஹித் ஷர்மா புகழாரம் சூட்டியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “அஷ்வின் நிறைய பிரஷர்களை தாங்கி கொள்கிறார். ஒரு போட்டியில் அவர் சரியாக விக்கெட் எடுக்கவில்லை என்றால் உடனே அவர் சரியில்லை என்று சொல்வார்கள். அவரும் சக மனிதன் தானே. அவரால் முடிந்த அனைத்து உத்திகளையும் செயல்படுத்துகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்தால் எனக்கும், ரசிகர்களுக்கும் போர் அடித்து விடும் என நடிகை அனுபமா கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “3 ஆண்டுகளாக நான் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். ஒரு நடிகைக்கு எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்து பாராட்டு பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும். கதாபாத்திரங்கள் பிடித்து இருந்தால் கவர்ச்சியாக நடிக்கவும் தயார்” எனத் தெரிவித்துள்ளார்.
100 அவதூறுகளை வைத்தாலும் என்னை பின்னோக்கி தள்ள முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,
அரசின் அனைத்து திட்டங்களும் அடித்தட்டு மக்கள் வரை சென்று சேர்ந்துள்ளது. நடுத்தர வகுப்பினரை மேம்படுத்த இந்த பத்து வருடத்தில் அதிகபட்ச முயற்சியை அரசு எடுத்துள்ளது. அந்த பணிகளை தொடர்ந்து செய்ய மக்கள் மீண்டும் எங்களை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
பொன்முடியை மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதனால் மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என தமிழக அரசு பரிந்துரைத்ததை ஆளுநர் ரவி நிராகரித்ததால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மார்ச் 27ஆம் தேதி துலாம் ராசியில் சந்திர பகவான் சஞ்சரிக்க உள்ளார். ஏற்கெனவே, அங்கு புதன் பகவானும் உள்ளதால் கடகம், துலாம், மகரம், மீன ராசியினர் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகின்றனர். குறிப்பாக வீடு, வாகனம், ஆபரணங்கள் வாங்கும் யோகம், தொழில் முனைவோருக்கு தேடி வரும் வாய்ப்பு, மனதில் உள்ள சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை அமைவது என பல்வேறு சுப பலன்களை மேற்கண்ட ராசியினர் அனுபவிக்க உள்ளனர்.
ஈஷா யோகா நிறுவனர் ஜக்கி வாசுதேவிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார். மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 17ஆம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ள அவரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட பிரதமர் மோடி, விரைவில் நலம் பெற வேண்டும் என ஆறுதல் தெரிவித்தார்.
அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை இபிஎஸ் அறிவித்தார். இந்நிலையில், நாளை காலை இரண்டாவது கட்டமாக 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக 33 தொகுதிகளில் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வரும் நடிகர் அஜித், தற்போது நண்பர்களுடன் பைக் ரைடு சென்றுள்ளார். படப்பிடிப்புக்கு நடுவே பிரேக் விடப்பட்டுள்ளதால், நடிகர் ஆரவ் உள்பட தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு பைக் ரைடுக்கு கிளம்பியுள்ளார். இது குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியான நிலையில், தற்போது நண்பர்களுடன் காட்டுக்குள் சமைத்து சாப்பிடும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் தில்ஷான் மதுஷங்க் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில், தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். தற்போது காயம் முழுமையாக குணமாகாததால், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்தும் வெளியேறுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க வீரர் குவேனா மபாகா (19) அணியில் இணைந்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.