India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேர்தல் பத்திர நன்கொடை குறித்து திமுக மவுனமாக இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தேசிய அளவில் பாஜகவும், தமிழகத்தில் திமுகவும் தேர்தல் பத்திரம் மூலம் அதிக நன்கொடை பெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான லாட்டரி மார்டினிடம் இருந்து திமுக அதிக நன்கொடை பெற்றதாக கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து திமுக விளக்கம் அளிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவுள்ள மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாணவர்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாக பயன்படுத்தி, நம்பிக்கையோடு தேர்வு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்க தொண்டர்களோடு தொண்டராக துணை நிற்கவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததாக தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை பகுதி மக்கள் மேலும் வளர்ச்சி அடையவும், தொழில் வளர்ச்சியிலும் தொழில் நுட்ப வளர்ச்சியிலும் தென்சென்னை வீறுநடைபோடவும் ராஜினாமா செய்ததாகவும் அவர் கூறினார். மேலும், ஆளுநராக இருந்த தான் அக்காவாக திரும்பி வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்காக அச்சிடப்பட்ட போஸ்டரில் இந்திய தேசிய லீக்கின் தடா ரஹிம் புகைப்படமும் இடம்பெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர், 3 ஆண்டுகளாக திமுகவை எதிர்த்து வருகின்றேன். அதுமட்டுமல்ல, இந்திய தேசிய லீக் கட்சி அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், எனது போட்டோவை ஏன் பயன்படுத்த வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு எழுத உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இன்று (மார்ச் 25) முதல் மே 2ஆம் தேதி வரை நீட் பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 – மாலை 4.30 வரை நடைபெறும். குறைந்தபட்சம் 40 மாணவர்கள் ஒரு பயிற்சி மையத்தில் இடம்பெற வேண்டும் என கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை, நெல்லை மற்றும் விளவங்கோடு (இடைத்தேர்தல்) உள்ளிட்ட 3 இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்., இன்று அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்லையில் பாஜக சார்பில் நயினார் போட்டியிடுவதால், அவருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சரியான நபரை காங்., தேர்வு செய்துள்ளதாம். நெல்லையில் ஸ்டாலின் இன்று மாலை தேர்தல் பரப்புரையை மேற்கொள்வதால், அதற்குள் வேட்பாளர் பெயர் வெளியாக வாய்ப்புள்ளது.
ஜூன் மாதத்துக்கான திருப்பதி ஏழுமலையான் கோயிலின் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள், ஆன்லைனில் இன்று காலை தொடங்குகிறது. தரிசனத்துக்கு பலமணி நேரம் காத்திருப்பதைத் தவிர்க்க 3 மாதத்துக்கு முன்பே, டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன. அதன்படி, ஜூன் மாதத்துக்கான தரிசன முன்பதிவு, தேவஸ்தான இணையதளத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. மதியம் 3 மணிக்கு திருமலையில் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு தொடங்குகிறது.
முன்னாள் எம்.எல்.ஏ.வும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமாகா தலைவராகவும் இருந்த கதிர்வேல், அக்கட்சியில் இருந்து திடீரென்று விலகியுள்ளார். தூத்துக்குடியில் தமாகா சார்பில் விஜயசீலன் போட்டியிடும் நிலையில், அதிருப்தியடைந்த கதிர்வேல் கட்சியில் இருந்து விலகியுள்ளார். மேலும், பாஜக கூட்டணியில் சீட் வாங்கி அதனை அதிக விலைக்கு ஜி.கே.வாசன் விற்று வருகிறார் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக கொடி, சின்னத்தைப் பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. அதிமுக அடையாளங்களை பயன்படுத்த ஓபிஎஸ் தடை விதிக்கக் கோரி இபிஎஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, ஓபிஎஸ் அதிமுக சின்னம், கொடியை பயன்படுத்த தடை விதித்தார். இதை எதிர்த்து ஓபிஎஸ் தொடந்த வழக்கு, 2 நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வருகிறது.
திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்கள். தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தங்களது பரப்புரையை தொடங்கி உள்ளன. இந்நிலையில், வேட்புமனு தாக்கல் நாளை மறுநாளுடன் நிறைவடைய உள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளின்
வேட்பாளர்கள் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.