India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பதவி ஆசை கூறி தன்னை பாஜகவில் சேர அழைப்பு விடுத்ததாக முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் கூறியுள்ளார். தென்காசி தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அவர், ‘இப்போதுதான் பலர் பாஜகவில் இணைகின்றனர். ஆனால், 2014இல் பெட்ரோலியம், துறைமுக துறைகளில் முக்கிய பொறுப்பு தருவதாகக் கூறி என்னை அழைத்தனர். ஆனால், இந்த மண்ணையும், மக்களையும் நேசித்ததால் நான் அங்கு செல்லவில்லை’ எனக் கூறியுள்ளார்.
விராட் கோலிக்கு கிரிக்கெட்டை தாண்டி, அவரது ஹேர் ஸ்டைலுக்கென தனி பாலோயர்கள் உண்டு. கோலியின் ஹேர் கட் புகைப்படங்களை பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆலிம் ஹக்கீம் அவ்வப்போது தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடுவார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வரும். இந்நிலையில், விராட் கோலி ஹேர் கட் செய்ய குறைந்தது ரூ.1 லட்சம் செலவிடுவதாக, ஆலிம் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
விப்ரோ தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து தியரி டெலாபோர்ட் ராஜினாமா செய்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக ஸ்ரீனிவாஸ் பாலியா நாளை பொறுப்பேற்கிறார். இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் தலைமை செயல் அதிகாரியாக இருந்த தியரி டெலாபோர்ட், 2022 – 23 நிதியாண்டில் ரூ.82 கோடி சம்பளம் வாங்கி கவனம் ஈர்த்தவர். இவரது பதவி காலத்தில் விப்ரோ பங்குகள் 117% ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட்டில் தோனி போல, அரசியலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நல்ல ஃபினிஷர் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கிண்டல் அடித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் பிரசாரம் செய்த அவர், ஊழலும், காங்கிரஸும் உடைக்க முடியாத கூட்டணி வைத்துள்ளதாக விமர்சித்தார். இந்திய அளவில் ஆதிக்கம் செலுத்திவந்த காங்கிரஸ் கட்சி, தற்போது ஒரு சில மாநிலங்களில் மட்டுமே ஆட்சி செய்து வருவதாகவும் கூறினார்.
தேசிய திறனறி தகுதித் தேர்வில் வெல்லும் மாணவர்களுக்கு மாதம் ₹1000 வழங்கப்படுகிறது. 8ம் வகுப்பில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 9-12ஆம் வகுப்பு வரை மொத்தம் ₹48000 வழங்கப்படும். மாதந்தோறும் 7ஆம் தேதி மாணவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் நிலையில், நாளை இந்தத் தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை, நாளை கிடைக்காவிட்டால் திங்கட்கிழமை வரவு வைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறைந்த திமுக MLA புகழேந்தி உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். உடல்நலக் குறைவால் திடீரென மயக்கமடைந்த அவருக்கு, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ராஜஸ்தான் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் சதம் அடித்து அசத்திய விராட் கோலி இந்த ஒரே போட்டியில் மேலும் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். நடப்பு தொடரில் சதம் அடித்த முதல் வீரர். 100+ பார்ட்னர்ஷிப்பில் அதிக முறை (28) பங்கேற்ற வீரர். ஐபிஎல் தொடர்களில் அதிக சதம் (8) அடித்த வீரர் என பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் கெயில் (6), பட்லர் (5) கோலிக்கு அடுத்த இடத்தில் உள்ளனர்.
அரசு ஊழியர்கள் திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டுமென தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுகொண்டுள்ளார். வில்லிவாக்கத்தில் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், ‘அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விழித்துக்கொள்ள வேண்டும். உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என ஸ்டாலின் சொல்வது ஏமாற்று வேலை. டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் போராடிய போது ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை’ என்றார்.
கெஜ்ரிவால் மட்டுமின்றி தமிழகம், தெலங்கானா என எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களையும் பாஜக கைது செய்யும் என ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் குற்றம்சாட்டியுள்ளார். அட்டூழியங்கள், அநீதிகள் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடுவதால் தான், எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்குகள் போடப்படுவதாக சாடிய அவர், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் பாஜகவில் இல்லையா என கேள்வி எழுப்பினார்.
ஜெய்ப்பூரில் நடைபெற்றுவரும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி 183/3 ரன்கள் விளாசியுள்ளது. அதிரடியாக ஆடிய விராட் கோலி 67 பந்துகளில் சதம் அடித்தார். டூபிளெசிஸ் (44), மேக்ஸ்வெல் (1) ரன்னில் ஆட்டமிழந்தனர். ராஜஸ்தான் தரப்பில் சாஹல் 2, பர்கர் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து ராஜஸ்தான் அணிக்கு 184 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.