News March 25, 2024

வங்கிகளுக்கு தொடர் விடுமுறை

image

நாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் தொடர்ச்சியாக 4 நாள்கள் மூடப்படுகிறது. புனித வெள்ளியையொட்டி (மார்ச் 29) விடுமுறை, சனிக்கிழமை (மார்ச் 30), ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) வங்கிகள் செயல்பட்டாலும், பரிவர்த்தனைகள் நடக்காது. திங்கட்கிழமை (ஏப்.1) வங்கிகள் செயல்பட்டாலும் இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக மக்களுக்கு சேவை கிடையாது. இதற்கேற்ப உங்கள் நிதி தேவையை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

News March 25, 2024

தண்ணீரை வீணாக்கிய 22 குடும்பங்களுக்கு அபராதம்

image

பெங்களூருவில் குடிநீரை வீணாக்கிய 22 குடும்பங்களுக்கு தலா ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், அத்தியாவசியமில்லாத பணிகளுக்கு காவிரி நீரை பயன்படுத்தக் கூடாதென எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை மீறி, காரை சுத்தம் செய்யவும், தோட்டத்திற்கும் குடிநீரை பயன்படுத்தியதாக வந்த புகாரை அடுத்து, ரூ.1.1 லட்சத்தை அபராதமாக குடிநீர் விநியோக வாரியம் வசூலித்துள்ளது.

News March 25, 2024

நடிகை டாப்ஸிக்கு ரகசிய திருமணம்?

image

‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை டாப்ஸி தனது காதலரான மத்தியாஸ் போவை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணம் மார்ச் 23ல் உதய்பூரில் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடந்ததாக கூறப்படுகிறது. இதில், பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டதாக தெரிகிறது. 10 ஆண்டுகளாக பேட்மிண்டன் வீரரான மத்தியாஸுடன் காதலில் உள்ளதாக டாப்ஸி ஏற்கெனவே கூறியிருந்தார்.

News March 25, 2024

தருமபுரியில் பாமக வெற்றி பெறாது

image

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் குடும்பமே வந்தாலும் தருமபுரியில் பாமக வெற்றி பெறாது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சூளுரைத்துள்ளார். வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டை வைத்து அதிமுக, பாமக கட்சிகள் வெற்றி பெற்றதாக கூறிய அவர், வரும் மக்களவைத் தேர்தலில் அது நடக்காது என்று தெரிவித்தார். 10.5% உள் ஒதுக்கீட்டை வைத்து வன்னிய மக்களை அதிமுக, பாமக கட்சிகள் ஏமாற்றியதாகவும் அவர் சாடினார்.

News March 25, 2024

முன்னணி கட்சிகளின் வேட்பு மனு தாக்கல்

image

தமிழகத்தில் இன்று பல்வேறு தொகுதிகளில் முன்னணி கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். மதுரையில் சு.வெங்கடேசன், வேலூரில் கதிர் ஆனந்த், ராமநாதபுரத்தில் ஓபிஎஸ், ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நாளை மறுநாளுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடையும் நிலையில், நல்ல நாளான இன்று அதிகளவில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்கின்றனர்.

News March 25, 2024

சந்திர கிரகணத்தால் இன்று கோயில்கள் நடை அடைப்பா?

image

சந்திரகிரகணம் இன்று நடைபெற்றாலும், கோயில் நடைகள் வழக்கம் போல திறக்கப்பட்டிருந்தன. ஹோலி மற்றும் பங்குனி உத்திரத்தன்று 100 ஆண்டுகளுக்கு பிறகு கிரகணம் காலை 10.23 மணி தொடங்கி மதியம் 3.02 மணி வரை நடைபெறுகிறது. வழக்கமாக கோயில் நடை அடைக்கப்பட்டு, கிரகணம் முடிந்ததும் சுத்தப்படுத்தப்பட்டு திறக்கப்படும். ஆனால் இம்முறை பகலில் ஏற்படுவதால் தோஷமில்லை என கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.

News March 25, 2024

அண்ணாமலையின் வலது கையை தூக்கினார் இபிஎஸ்

image

பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு மாநில செயலாளர், கோவை பெருங்கொட்ட பொறுப்பாளர் (கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர்) செல்வபிரபு, பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைத்து கொண்டார். அண்ணாமலைக்கு வலது கையாக செயல்பட்டு, அவருக்கு ஆதரவாக 12 மணி நேரத்திற்கு முன்பு வரை தீவிரமாக வாக்கு சேகரித்தவரை, இபிஎஸ்ஸின் வலது கையான எஸ்.பி.வேலுமணி ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளார்.

News March 25, 2024

ஜேபி நட்டா மனைவியின் ரூ.35 லட்சம் கார் திருட்டு

image

டெல்லியில் பாஜக தலைவர் ஜேபி நட்டாவின் மனைவிக்கு சொந்தமான ரூ.35 லட்சம் மதிப்பு கார் திருடப்பட்டுள்ளது. சர்வீசுக்கு விடப்பட்ட டோயோட்டா ஃபார்சூனர் காரை டிரைவர் கடந்த 19ஆம் தேதி எடுத்து வந்து வீட்டில் நிறுத்திவிட்டு சாப்பிட சென்றுள்ளார். அப்போது அந்த கார் திருடப்பட்டுள்ளது. கார் குருகிராம் நோக்கி எடுத்து செல்லப்பட்டதை சிசிடிவி மூலம் கண்டுபிடித்த போலீசார், அதை தேடி வருகின்றனர்.

News March 25, 2024

பம்பரம் சின்னம் கோரி வைகோ அவசர முறையீடு

image

பம்பரம் சின்னத்தை மதிமுகவுக்கு ஒதுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ அவசர மனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கல் முடிய 3 நாட்கள் மட்டுமே இருப்பதால், மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. திருச்சி தொகுதியில் மதிமுக சார்பாக வைகோ மகன் துரை வையாபுரி போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 25, 2024

1982இல் அறிமுகப்படுத்தப்பட்ட EVM

image

*EVM முதன் முதலில் 1982இல் கேரள தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டது. * 1998 முதல் நாடு முழுவதும் EVM பயன்படுத்தப்பட்டது. நோட்டாவுக்கு வாக்களிக்கும் முறை 2014இல் நடைமுறைக்கு வந்தது. *64 வேட்பாளர்கள் வரை தேர்தலில் போட்டியிட்டால் EVM இயந்திரம் மூலம் தேர்தல் நடத்தலாம். அதற்கு மேல் இருந்தால் EVM பயன்படுத்த முடியாது.*1989 தேர்தலில் இருந்து வாக்களிக்கும் வயது 21இல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டது.

error: Content is protected !!