India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சீனாவின் தெற்கே ஜியாங்சி மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாக கடுமையான புயல் வீசி வருகிறது. இதுவரையில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நான்சங்க் நகரில் 60 வயது மூதாட்டி மற்றும் அவரது 11 வயது பேரன் குடியிருப்பில் இருந்தபோதே படுக்கை விரிப்போடு சேர்த்து ஜன்னல் வழியாக இழுத்து தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எந்த தேர்தலாக இருந்தாலும் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி ஒரு இடங்களைக்கூட வெல்ல முடியாமல் திணறி வருகிறது. நாம் தமிழர் கட்சியின் தொடர் தோல்விகள் குறித்து பேட்டி அளித்த சீமான், தோல்விகள்தான் வெற்றியின் தாய் என்றார். எளிதில் வென்றவனின் இதயம் மலரினும் மெலிதாக இருக்கும். ஆனால், தோற்று தோற்று வென்றவனின் இதயம் இரும்பை விட உறுதியாக இருக்கும் என தனக்கே உரித்தான நடையில் விளக்கினார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு பிறகு இந்தியா முழுமைக்கும் பிரபலமான இவர், சமீபத்தில் மனைவி மற்றும் மகளுடன் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள யானைகள் முகாமில் குட்டி யானையை ராம் சரண் குளிப்பாட்டும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவரது மனைவி உபாசனா, சிறந்த அனுபவம் வழங்கியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியுள்ளதாக அக்கட்சியின் ஊடகப்பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். பிரதமரின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த அவர், காங்கிரஸ் கட்சியின் உத்தரவாதம் காலத்தின் தேவை. இது நாட்டில் துன்பப்படும் மக்களின் குரல் என்றார். ஜூன் 4ஆம் தேதிக்கு பின்னர் மோடி நீண்ட விடுப்பில் செல்வார். இது மக்களின் உத்தரவாதம் என தெரிவித்தார்.
ரசம் தயார் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீர் சேர்த்தால் ருசியாக இருக்கும். கறிவேப்பிலையை அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும். வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால், சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும். தோசை சுடும்போது மாவில் சிறிது சர்க்கரையை சேர்த்தால் தோசை மொறுமொறுப்பாக வரும். கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருக்க சிறிதளவு உப்பை கலந்து வைக்கலாம்.
சுற்றுலாப் பயணிகள் காண விரும்பும் நட்சத்திரங்களின் கடல் என்ற இடம் மாலத்தீவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இங்கு இரவு நேரங்களில் விண்மீன்கள் வானில் இருந்து கீழே இறங்கி கடல் நீரில் மிதப்பது போன்ற காட்சி தோன்றும். இது பயோலுமினசென்ட் பிளாங்க்டன் எனப்படும் உயிரினங்களால் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த காட்சியை ஏப்ரல் – ஆக்டோபர் காலக்கட்டத்தில் காண முடியும்.
மக்களவைத் தேர்தலில் தென்னிந்தியா இந்த முறையும் பாஜகவுக்கு மரண அடி கொடுக்குமென முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், அதிமுக தான் முதன்மையான எதிரி. பாஜக சித்தாந்த எதிரி. அரசியலமைப்பை காப்பாற்றுவது, பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவது தான் தங்களது நோக்கம் என்றும், பிரதமராக மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது பாஜகவுக்கு கூட நல்லதல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் பதிரனா நாளைய போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக கடைசி போட்டியில் பதிரனா விளையாடவில்லை. அந்தப் போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்ததற்கு பதிரனா விளையாடாததே காரணம் என்று பேசப்பட்டது. இந்நிலையில், கொல்கத்தாவுக்கு எதிரான நாளைய போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என்று பவுலிங் பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்டின் தன்பாத் பகுதியில் 9 கிலோ கஞ்சா உள்பட 19 கிலோ போதைப்பொருள்களை 2018ஆம் ஆண்டு பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கில் பறிமுதல் செய்த போதைப்பொருள்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், பறிமுதல் செய்யப்பட்ட 9 கிலோ கஞ்சா உட்பட 19 கிலோ போதைப்பொருள்களையும் எலிகள் திண்றுவிட்டதாக போலீசார் பதில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
நடப்பு தேர்தலில் தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைக்காதது ஏன் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கியுள்ளார். தேசிய கட்சிகள் மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது தமிழகத்துக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்தால் ‘கூட்டணி தர்மம்’ என்ற பெயரில் ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக இபிஎஸ் ஆதங்கம் தெரிவித்துள்ளார். அதன் காரணமாகவே பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதாக அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.