India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶மார்ச் – 25 | பங்குனி – 12
▶கிழமை: திங்கள் | திதி: பிரதமை
▶நல்ல நேரம்: காலை 09.30 – 10.30 வரை, மாலை 04.30 – 05.30 வரை
▶கெளரி நேரம்: காலை 01.30 – 02.30 வரை, மாலை 07.30 – 08.30 வரை
▶ராகு காலம்: காலை 07.30 – 09.00 வரை
▶எமகண்டம்: காலை 10.30 – 12.00 வரை
▶குளிகை: நண்பகல் 01.30 – 03.00 வரை
▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்
5ஆது வேட்பாளர் பட்டியலை தேசிய பாஜக தலைமை சற்றுமுன் வெளியிட்டது. அதன்படி, உ.பி மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் மேனகா காந்தி களமிறங்கவுள்ளார். மேனகாவுக்கு சீட் கொடுத்துள்ள பாஜக தலைமை, அவரது மகன் வருண் காந்திக்கு சீட் தரவில்லையாம். அவர் சிட்டிங் எம்.பி.,யாக இருக்கும் பிலிபிட்டில் ஜிதின் பிரசாதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக பாஜக தலைமையை வருண் விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணியை முதலில் உறுதிசெய்த கட்சி புரட்சி பாரதம். பாமகவுடன் பேச்சுவார்த்தையில் இபிஎஸ் ஈடுபட்டபோதே, அவரை அழைத்து வட மாவட்டத்தில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் ஒன்றையும் பு.பா.க தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி நடத்தினார். ஆனால், கூட்டணி குறித்து பேச மரியாதைக்காகக் கூட அவரை அதிமுக தரப்பு அழைக்கவில்லையாம். இதனால், ஜெகன் தீராத மனவருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 5 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. சென்னையில் CSK, பஞ்சாபில் PK, கொல்கத்தாவில் KKR, ராஜஸ்தானில் RR & அகமதாபாத்தில் GT என அந்த ஐந்து போட்டிகளிலும் சொந்த மாநிலங்களில் உள்ள மைதானங்களில் ஆடிய அணிகள் தான் வாகை சூடியுள்ளன. இன்று பெங்களூருவில் நடைபெறும் RCB, PK அணிகளுக்கு இடையேயான ஆட்டத்திலும் இந்நிலை தொடருமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி, கிட்னியை தூய்மைப்படுத்த மல்லி மாதுளை ஜூஸை பருகலாம் என்று சித்த மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். கைப்பிடி அளவு கொத்தமல்லிக் கீரையுடன் ஒரு மாதுளம் பழம், பெரிய நெல்லிக்காய், எலுமிச்சைச் சாறு சேர்த்து ஜூஸ் செய்து பருகலாம். இந்த ஜூஸை காலை வெறும் வயிற்றில் 45 நாள்கள் குடித்தால் போதும், ரத்தம் சுத்தமாவதுடன் கிட்னியில் உள்ள தொற்று & நச்சு அனைத்தும் வெளியேறிவிடுமாம்.
தென்காசி தொகுதியில், தாமரைக்கும் உதயசூரியனுக்கும் இடையே மட்டும் தான் போட்டி நிலவுவதாக தமமுக தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “யார் என்னைப் பற்றி என்ன கூறினாலும், அவர்களுக்கு பதில் சொல்ல மாட்டேன். பிரதமர் மோடியின் சாதனைகளை கூறி பிரசாரம் செய்வேன். எனக்கு பிடித்த சின்னம் தாமரை. இந்திய பிரதமர் சின்னம் தாமரை. அதனால் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறேன்” எனத் தெரிவித்தார்.
‘முண்டாசுபட்டி’ இயக்குநர் ராம்குமார், நடிகர் விஷ்ணு விஷால் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இப்படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வருவதாக பேசப்படுகிறது. அனேகமாக இந்தப் படம் அவர்களின் கூட்டணியில் வெளியான முதல் படமான முண்டாசுப்பட்டியின் 2ஆம் பாகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த 2014 இல் வெளியான ‘முண்டாசுப்பட்டி’ படம் விமர்சன ரீதியாக மட்டுமில்லாது வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
பணம் இருக்கும்போது கிரெடிட் கார்டு பில்லை கட்ட முடியவில்லையே என வருந்தும் வாடிக்கையாளர்களின் சிரமங்களை உணர்ந்து, மார்ச் 7 ஆம் தேதியன்று புதிய வசதியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, பணத்தை செலுத்தும் கடைசி DUE தேதியை, குறைந்தபட்சம் ஒருமுறை மாற்றிக்கொள்ள ஆர்.பி.ஐ அனுமதியளித்துள்ளது. இதனை ஐ.வி.ஆர்., இணைய வங்கி சேவை, செயலி உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் ஆக்டிவேட் செய்துகொள்ளலாம்.
2007 ஆம் ஆண்டு முதல் அடிமை வணிகத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் பன்னாட்டு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. *1807 – அடிமை வணிகம் பிரித்தானியாவில் தடை செய்யப்பட்டது. *1918 – பெலருஸில் மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது. *1926 – ஈழ எழுத்தாளர் டானியல் பிறந்த நாள். *1954 – முதல் வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை ஆர்.சி.ஏ நிறுவனம் வெளியிட்டது. *2014 – தமிழக மார்க்சிய திறனாய்வாளர் தி.க.சி மறைந்த நாள்.
KKR அணியில் தனது அதிரடியான பேட்டிங்கால் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் ரிங்கு சிங். அவர் தனது உரிமையாளரான ஷாருக்கானுடன் குடும்ப உறுப்பினர் சகிதம் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்ட்டா பதிவில், “என் இதயத்தை சிரிக்க வைப்பவர்” என்று குறிப்பிட்டுள்ளார். ரிங்கு சிங்கின் இந்தப் பதிவு அவரது ரசிகர்களை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
Sorry, no posts matched your criteria.