News April 8, 2024
ஆவாரம்பூ சர்பத் செய்வது எப்படி?

நீரிழிவு நோயாளிகளுக்கு வரக்கூடிய பாத எரிச்சல், மயக்கம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய ஆற்றல் கொண்டது ஆவாரம்பூ. ஆவாரம்பூவை வைத்து உடலுக்கு நன்மை தரும் சர்பத் செய்வது எப்படி எனப் பார்க்கலாம். ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை, ஏலக்காய், இஞ்சி துண்டுகளை போட்டு, கரண்டியால் லேசாக நசுக்கிக் கொள்ளவும். பின்னர் அதில் ஆவாரம்பூ (ஊற வைத்தது) நீரை ஊற்றி, தேன் & சப்ஜா விதை சேர்த்தால் சுவையான சர்பத் ரெடி.
Similar News
News December 14, 2025
கரூரில் உயிரைக் பறித்த ‘மிஸ்டரி’ வாகனம்!

கரூர் மாவட்டம் நெரூர் வடபாகம் பெரிய காளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (60); இவர் கடந்த, 11ம் தேதி இரவு குப்புச்சிப்பா ளையம் பகுதியில், சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அடை யாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்த காமராஜ், நேற்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இது இதுகுறித்து காமராஜ் மகன் ஜோதிவாசன் (32) கொடுத்த புகார்படி, வாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 14, 2025
மனம் கொத்திப் பறவையாக மாறிய அனுபமா பரமேஸ்வரன்

சமீபத்தில் வெளியான ‘பைசன்’ படத்தில் தனது தேர்ந்த நடிப்பால் தமிழ் ரசிகர்கள் மனங்களில் அழுத்தமாக பதிந்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்நிலையில், தனது பார்வையாலேயே இதயங்களை கொள்ளை கொள்ளும் தேவதையாக வலம் வரும் அனுபமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகியுள்ளன. இளைஞர்களின் நெஞ்சங்களை கொத்தி செல்லும் அவரின் போட்டோஸை மேலே SWIPE செய்து கண்டு ரசியுங்கள்.
News December 14, 2025
விபத்துகளுக்கு மதுக்கடைகளே காரணம்: அண்ணாமலை

இந்தியாவிலேயே அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்படும் மாநிலமாக, தமிழகம் மாறியிருப்பது மத்திய அரசின் தகவலின்படி தெரிய வந்துள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார். பணம் சம்பாதிப்பதற்காக தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருக்கும் திமுக அரசின் அலட்சிய போக்கே, இதற்கு காரணம் எனவும் அவர் சாடியுள்ளார். போதைப் பொருள் விற்பனை, சாலை விபத்துகளை தடுக்க இயலாத திமுக அரசு தூக்கி எறியப்படும் என்றும் கூறியுள்ளார்.


