India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஐதராபாத்தில் நடைபெற்றுவரும் மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணி சிக்ஸர் மழை பொழிந்து வருகிறது. தற்போது வரை 12 ஓவர்கள் முடிவில் SRH 173/3 ரன்கள் எடுத்துள்ளது. இதில் 14 பவுண்டரிகளும், 12 சிக்ஸர்களும் விளாசப்பட்டுள்ளது. முதல் 10 ஓவர்கள் முடிவில் SRH அணி 148/2 ரன்கள் எடுத்திருந்தது. ஐபிஎல் வரலாற்றில் முதல் 10 ஓவர்களில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும்.
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி சுட்டெரித்தது. கோடை வெயில் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரித்து வருவதால் பகல் வேளையில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்த நிலையில், மதுரை, தருமபுரி, நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கரூர் (பரமத்தி), சேலத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் மும்பை-ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்து வரும் SRH அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக அந்த அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் ஒரே ஓவரில் 2 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 20 ரன்களை குவித்தார். SRH அணி இதுவரை 4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் யார் வெல்லுவாங்க? கமெண்ட் பண்ணுங்க.
மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அதிரடியாக ஆடிய ஐதராபாத் வீரர் டிராவிஸ் ஹெட் 18 பந்துகளில் அரை சதம் கடந்துள்ளார். அதிரடியாக ஆடிய இவர் 3 சிக்ஸர், 9 பவுண்டரி (1 ஹாட்ரிக் பவுண்டரி) அடித்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் குறைந்த பந்துகளில் (18) அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவரது அதிரடியால் SRH அணி 9 ஓவர்கள் முடிவில் 128/2 ரன்கள் குவித்துள்ளது.
ஓட்டு வாங்குவதற்காகவே கட்சித் தொண்டர்களை குடும்பம் என, முதல்வர் ஸ்டாலின் கூறிவருவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கன்னியாகுமரி தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில் அதிமுகவில் மட்டும்தான் ஜனநாயகம் உள்ளது எனக் கூறினார். மேலும், கட்சியையும், நிர்வாகிகளையும் குடும்பமாக பார்ப்பதாக கூறும் ஸ்டாலின், திமுக தலைவராக ஒரு தொண்டனை நியமிப்பாரா எனக் வினவியுள்ளார்.
பாஜகவால் சமூக நீதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். விருதுநகரில் பேசிய அவர், மத்தியில் ஆட்சிக்கு வந்தால் பட்டாசு தொழில், தொழிலாளர்களின் நலன் காக்கப்படும் என வாக்குறுதி அளித்த மோடி, அதனை தற்போது வரை நிறைவேற்றவில்லை எனக் கூறினார். மேலும், பட்டியலின மக்கள், சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என அனைவருக்கும் எதிரி பாஜக தான் என அவர் கடுமையாக விமர்சித்தார்.
புஸ்ஸி ஆனந்தின் சவகாசம் விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு நல்லதல்ல என எஸ்.ஏ.சந்திரசேகர் எச்சரித்துள்ளார். புஸ்ஸி ஆனந்தின் நாடகத்தை அறியாத விஜய், அவருக்கு பக்கபலமாக செயல்படுவதாக குறிப்பிட்ட SAC, இப்படிப்பட்டவருடன் விஜய் இருந்தால் நாளை அவரது எதிர்காலம் என்னவாகும் என்ற பயம் ஒரு தந்தையாக தனக்கு இருக்கிறது என வேதனை தெரிவித்தார். SAC-யின் இந்தக் கருத்து தவெக நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமலாக்கத்துறை காவலில் இருந்து விடுவிக்க உத்தரவிடக் கோரிய கெஜ்ரிவாலின் மனுவை டெல்லி ஐகோர்ட் நிராகரித்துள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது ED காவலில் உள்ளார். இந்த நிலையில், அமலாக்கத்துறை காவலில் இருந்து விலக்கு கோரிய அவரது மனுவை நிராகரித்த நீதிமன்றம், இது குறித்து ED பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்.3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
ஜெயலலிதா மகள் எனக் கூறிக்கொள்ளும் ஜெயலட்சுமி, மக்களவைத் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் எனக் கூறிக்கொண்டு வலம் வரும் ஜெயலட்சுமி, தேனி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும், இரட்டை இலையுடன் கூடிய ரோஜா சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் பத்திர விவகாரம் உலகளவிலான மிகப்பெரிய ஊழல் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் உருவெடுத்து வருவதாக குறிப்பிட்ட அவர், வரும் தேர்தலில் பாஜக அரசுக்கு இது மிகப்பெரிய தண்டனையாக அமையும் எனக் கருதுவதாக கூறியுள்ளார். மேலும், இந்த பிரச்னை மத்திய அரசைக் கடந்து மக்களிடம் அதிவேகமாக சென்றடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.