India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இளையராஜா பயோபிக் படத்தில் நிச்சயம் இருப்பேன் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “அருண் மாதேஷ்வரன் இந்த படத்தை இயக்குகிறார் என கேள்விபட்டவுடனே அவரிடம் பேசினேன். யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு உனக்கு வந்துள்ளது எனக் கூறினேன். மிகச் சிறந்த படமாக இது வரும். தனுஷ் தனது மிகச் சிறப்பான நடிப்பின் மூலம் இந்த படத்தை வேறு பரிமாணத்திற்கு எடுத்து செல்வார்” எனக் கூறினார்.
மறைந்த மதிமுக எம்.பி கணேசமூர்த்தியின் உடல் கோவையில் இருந்து ஈரோடு கொண்டு செல்லப்படுகிறது. விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற அவர், கோவையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். 50% உயிர்பிழைக்க வாய்ப்புள்ளதாக அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்த வைகோ கூறியிருந்தார். எனினும், திடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் பிரதான கட்சிகள் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை முறையாக தரவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக 3 பெண் வேட்பாளர்களையும், 33 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக 1 பெண் வேட்பாளரையும், 24 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக 3 பெண் வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது. இதில் எந்த கட்சியுமே 33% ஒதுக்கீட்டை பெண்களுக்கு தரவில்லை என்பதே வருத்தமான உண்மையாகும்.
புனித வெள்ளி, வார விடுமுறையையொட்டி இன்று முதல் மார்ச் 30 வரை சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மார்ச் 28ல் 505, மார்ச் 29ல்300, மார்ச் 30ல் 345 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, பெங்களூருவுக்கு மார்ச் 28,29,30ல் 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தலுடன், விளவங்கோடு இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் முடிந்தது. மக்களவைத் தேர்தலுக்கு 1,749 மனுக்கள், இடைத்தேர்தலுக்கு 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் இன்று பரிசீலிக்கப்படவுள்ளன.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் & டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் RR 14 முறையும், DC 13 முறையும் வென்றுள்ளன. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் RR, DC அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? என்று இங்கே குறிப்பிடவும்.
*படிக்காதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவதே எங்கள் இலக்கு – சீமான்
*தற்கொலைக்கு முயன்ற மதிமுக எம்.பி., கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
*வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க ₹7.50 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு திட்டம்
*கடந்த அக். -டிச.வரை 22 லட்சம் இந்திய வீடியோக்களை யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளது
*ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி. சிந்து வெற்றி.
மதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான கணேசமூர்த்தி, அக்கட்சியின் பொருளாளராக பதவி வகித்தவர். 1993ல் திமுகவில் இருந்து வைகோ வெளியேறிய போது அவருக்கு ஆதரவு தெரிவித்த ஒன்பது மாவட்ட செயலாளர்களில் கணேசமூர்த்தியும் ஒருவர் ஆவார். மதிமுக தொடங்கியதில் இருந்து ஈரோடு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்த வந்த இவர், 1998, 2009, 2019ம் ஆண்டுகளில் மூன்று முறை மக்களவை உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.
செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமணத் தடையை போக்கும் மிக சிறப்பு வாய்ந்த தலமாக திருச்சிறுகுடி சூட்சுமபுரீஸ்வரர் கோயில் போற்றப்படுகிறது. இந்தத் தலத்துக்கு வந்து மங்களத் திருக்குளத்தில் நீராடி, அம்பாள் பூஜித்த சூட்சுமநாதருக்கு சிவப்பு நிற ஆடை அணிவித்து, சிவப்பு மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, துவரை சாதம் படைத்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்குவதோடு, சிறந்த வாழ்க்கைத்துணை அமையும் என்பது ஐதீகம்.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து, மாற்று கட்சியினரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், நேற்று நாகர்கோவிலில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் முன்னிலையில், பாஜக கவுன்சிலர்கள் 3 பேர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.