News April 8, 2024

சென்னை அதி வெப்பமாக இருப்பது ஏன்?

image

ஈரோட்டில் நேற்றைய வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ். சென்னையில் 39 டிகிரி மட்டுமே. ஆனால், ஈரோட்டை விட சென்னையில் இருப்போர் அதிக வெப்பத்தை உணர்கின்றனர். இதற்கு ஈரப்பதம்தான் காரணம். சென்னையில் எப்போதுமே ஈரப்பதம் அதிகம். உடல் வியர்வையை ஆவியாக விடாமல் இந்த ஈரப்பதம் தடுப்பதால் சென்னை மக்கள் அதீத வெப்பத்தை உணர்கின்றனர். எனவே, வெப்பநிலையையும் ஈரப்பதத்தையும் சேர்த்தே எப்போதும் கணக்கிட வேண்டும்.

Similar News

News December 5, 2025

Sports 360°: டேக்வாண்டோவில் இந்தியாவுக்கு வெண்கலம்

image

*SUPER CUP கால்பந்து இறுதிப்போட்டிக்கு எப்.சி.கோவா, ஈஸ்ட் பெங்கால் எப்.சி அணிகள் முன்னேற்றம் * ILT20-ல் MI எமிரேட்ஸை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் வீழ்த்தியது *U-21 டேக்வாண்டோ உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நிதேஷ் சிங் பிஸ்ட் வெண்கலம் வென்றார் *HCL ஸ்குவாஷ் தொடரின் ஃபைனலில் அனாஹத் சிங்-ஜோஷ்னா சின்னப்பா மோதல் *டி20 போட்டிகளில் சுனில் நரேன் 600-வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்

News December 5, 2025

BREAKING: செங்கோட்டையனின் அடுத்த சம்பவம்

image

புதுச்சேரியில் டிச.9-ல் பொதுக்கூட்டம் நடத்த தவெக அனுமதி கோரியுள்ள நிலையில், சென்னையில் உள்ள WAR ROOM-ல் செங்கோட்டையன் திடீர் ஆலோசனை நடத்தினார். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தில், இனி பொதுக்கூட்டமாகவே பரப்புரையை தொடரலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திமுக, அதிமுக முக்கிய புள்ளிகள் சிலரை தவெகவில் இணைப்பது குறித்தும் செங்கோட்டையன் ஆலோசித்துள்ளார்.

News December 5, 2025

சச்சரவை தவிர்க்கவே தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு: TN அரசு

image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை HC-ன் உத்தரவை எதிர்த்து SC-ல் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதில் 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றும் இடத்திற்கு பதிலாக வேறு இடத்தில் ஏற்ற கோருவதாகவும், அவ்விடம் தர்காவுக்கு 15 மீ தொலைவில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மதுரை HC உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும், தேவையற்ற சச்சரவை தவிர்க்கவே தீபம் ஏற்ற அனுமதி தரவில்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!