News April 9, 2024

இதை விட ஒரு மோசமான ஆட்சி இதற்கு முன் இருந்தது இல்லை

image

பாஜக ஆட்சியை விட மோசமான ஆட்சி இதுவரை இந்தியாவில் நடைபெற்றதில்லை என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்தது அவர் பரப்புரை செய்தார். அப்போது, “இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் விலைவாசி உயர்வு முன் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. இதை குறைக்க மோடி எதுவுமே செய்யவில்லை” என்று விமர்சித்தார். சிவகங்கையில் 1984இல் முதல்முறையாக போட்டியிட்டு அவர் எம்.பியானார்.

News April 9, 2024

தோனிக்கு சிலை வைக்கக்கோரி பேனருடன் வந்த ரசிகர்கள்

image

தோனிக்கு சிலை வைக்க வேண்டும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை – கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முன்னதாக ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு தோனியின் புகைப்படத்துடன் கூடிய பேனரை எடுத்துவந்த சிஎஸ்கே ரசிகர்கள், தோனிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

News April 9, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 09) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News April 9, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ தேர்தலுக்காக 10,214 சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு
➤ கமலிடம் மனநல சோதனை நடத்த வேண்டும் – அண்ணாமலை
➤ மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார்
➤ ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை
➤ விவாகரத்து கோரி நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா மனு
➤ தோனியை வீழ்த்துவது கடினம் – கம்பீர்

News April 9, 2024

மோடி பிரதமரானால் இந்திய வரைபடமே மாறிவிடும்

image

மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவின் வரைபடமே மாறும் என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகல பிரபாகர் கூறியுள்ளார். மோடி அரசு மீண்டும் தொடர்ந்தால் அதன் பிறகு இந்தியாவில் தேர்தல் நடக்காது என அச்சம் தெரிவித்த அவர், நாடு முழுவதும் லடாக் – மணிப்பூர் போன்ற சூழ்நிலை உருவாகும் என எச்சரித்துள்ளார். முன்னதாக SBI தேர்தல் பத்திர ஊழல் உலகளாவிய ஊழல் என பிரபாகர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News April 9, 2024

மத்திய அரசின் தலையீட்டால் மணிப்பூரில் முன்னேற்றம்

image

மத்திய மற்றும் மாநில அரசுகளின் தலையீட்டால் மணிப்பூர் சூழலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே வெடித்த மோதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது குறித்து தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர், “மணிப்பூரில் உள்ள முகாம்களில் வசிக்கும் மக்களுக்கான நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.

News April 8, 2024

இரவு உணவுக்கு பின் பழங்கள் சாப்பிடலாமா?

image

இரவு நேரங்களில் நாம் பழங்களை சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்து தூக்கத்தை சீர்குலைக்கும் வாய்ப்பை ஏற்படுத்த கூடும். இது தவிர சூரிய அஸ்தமனத்திற்கு பின் நமது வளர்சிதை மாற்றம் குறையும். கார்போ ஹைட்ரேட்டுகளை எளிதில் ஜீரணிக்க முடியாது. எனவே சூரியன் மறைந்த பிறகு பழங்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இதே போல, இரவு உணவுக்கு பின் டீ, காபி, குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்ப்பது நல்லது.

News April 8, 2024

அதிமுக, திமுகவுக்கு வாக்களித்தது போதும்

image

அதிமுகவுக்கும், திமுகவுக்கும் மாறி மாறி வாக்களித்தது போதுமென பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். தர்மபுரியில் பாமக வேட்பாளர் செளமியா அன்புமணியை ஆதரித்து வாக்கு சேகரித்த அவர், “எங்கே பெண்களுக்கு பிரச்னை என்றாலும், என்னை விட அவர் தான் முதலில் சென்று இருப்பார். 57 ஆண்டுகளுக்கு மேலாக திமுக, அதிமுகவுக்கு வாக்களித்தும் நமது வாழ்க்கை அப்படியே தான் இருக்கிறது. எந்த விடியலும் இல்லை” என்றார்.

News April 8, 2024

IPL: சென்னை அபார வெற்றி

image

KKR அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் CSK அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. 138 ரன்கள் இலக்கை துரத்தி ஆடிய CSK அணியில் ருதுராஜ் 67*, ரச்சின் 15, மிச்செல் 25, தூபே 28, தோனி 1* ரன்கள் அடித்தனர். இதையடுத்து CSK 17.4 ஓவரில் இலக்கை அடைந்து வெற்றிபெற்றது. அரோரா 2, நரைன் 1 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் நடப்பு தொடரில் CSK 3 ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

News April 8, 2024

முதல் கட்டத்தில் மோதும் 1,625 வேட்பாளர்கள்!

image

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரி உள்பட 102 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 1,625 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். இதில் 1,491 ஆண் வேட்பாளர்கள், 134 பெண் வேட்பாளர்கள் அடங்குவர்.

error: Content is protected !!