News April 9, 2024

இதை விட ஒரு மோசமான ஆட்சி இதற்கு முன் இருந்தது இல்லை

image

பாஜக ஆட்சியை விட மோசமான ஆட்சி இதுவரை இந்தியாவில் நடைபெற்றதில்லை என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்தது அவர் பரப்புரை செய்தார். அப்போது, “இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் விலைவாசி உயர்வு முன் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. இதை குறைக்க மோடி எதுவுமே செய்யவில்லை” என்று விமர்சித்தார். சிவகங்கையில் 1984இல் முதல்முறையாக போட்டியிட்டு அவர் எம்.பியானார்.

Similar News

News December 10, 2025

திருப்பதியில் அடுத்த ஊழல்: Dupatta Scam!

image

திருப்பதியில் லட்டு கலப்படம், உண்டியல் பணம் திருட்டை தொடர்ந்து ‘துப்பட்டா ஸ்கேம்’ வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோயிலுக்கு வரும் VIP பக்தர்களுக்கு பட்டு துண்டு அணிவிக்கப்படுவது வழக்கம். ஆனால், இவை பட்டால் செய்யப்படாமல், Polyester-ஆல் செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2015- 2025 வரை இப்படி ஏமாற்றி, ₹54 கோடி வரை ஊழல் செய்ததாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இன்னும் திருப்பதியில் என்னென்ன ஊழலோ!

News December 10, 2025

PM பாதி நாள் ஊரிலேயே இருப்பதில்லை: பிரியங்கா

image

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் வேளையில், ராகுல் காந்தி ஜெர்மனி செல்கிறார் என தகவல் வெளியானதால், பாஜக அவரை விமர்சித்து வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்துக்கு வந்த பிரியங்கா காந்தியிடம் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், PM மோடி பாதி நாள்கள் வெளியூரில் தான் இருக்கிறார் எனவும், ஏன் அவரை நோக்கி இந்த கேள்வியை எழுப்புவதில்லை என்றும் பதிலளித்துள்ளார்.

News December 10, 2025

EPS உடன் செங்கோட்டையன்… கடைசி PHOTO

image

அதிமுகவின் முதல் பொதுக்குழுவை நடத்தி, எம்ஜிஆரிடம் பாராட்டை பெற்றவர் செங்கோட்டையன். 50 ஆண்டுகால அரசியலில் அவர் இல்லாமல் ஒரு அதிமுக பொதுக்குழு கூட இதுவரை நடந்ததே இல்லை. தற்போது கட்சி மாறிவிட்டதால், இன்று நடக்கும் பொதுக்குழுதான் அவர் இல்லாமல் நடக்கும் முதல் பொதுக்குழுக் கூட்டம். இந்நிலையில், EPS உடன் அவர் (KAS) கடைசியாக பங்கேற்ற பொதுக்குழுவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

error: Content is protected !!