India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேர்தல் விதிகளால் வணிகர்களுக்கு பாதிப்பு தொடர்ந்தால் தமிழகம் முழுவதும் ஏப்.19 வரை கடையடைப்பு போராட்டம் நடக்கும் என வணிகர் சங்க பேரமைப்புதலைவர் விக்கிரமராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் நடைமுறையால் வணிகர்கள் அச்சுறுத்தப்படுவதாக அவர் வேதனை தெரிவித்தார். மேலும், தேர்தல் செலவினம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வணிகர்கள் எடுத்துச் செல்லும் ரொக்கத் தொகை உயர்த்தப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இந்தியாவில் உள்ள முஸ்லீம்களை 2ம் தர குடிமக்களாக்கும் இலக்குடனேயே சிஏஏ சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசுகையில், “மதத்தின் அடிப்படையில் குடியுரிமை என்பது, இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. முஸ்லீம்களின் குடியுரிமையை பறிக்கும் ஆயுதமே சிஏஏ சட்டம்” என்று தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு, பிரசாரம் உள்ளிட்ட பணிகளில் காங்கிரஸ் கட்சி மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏப்.6ஆம் தேதி வெளியிடப்படும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. மேலும், ஜெய்ப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல் ஆகியோர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான இறுதித்தேர்வு அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகையை ( பொதுவிடுமுறை) முன்னிட்டு, 4-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.10 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த அறிவியல், சமூக அறிவியல் தேர்வு, ஏப்.4 மற்றும் 6ஆம் தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஒருவாரம் கூடுதலாக கோடைவிடுமுறை கிடைக்கும்.
தேர்தல் பத்திரம் கணக்கில் உள்ளதால் அதனை ஊழலாக கருத முடியாது என பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். தேர்தல் பத்திரம் மூலம் அதிகாரப்பூர்வமாக அரசியல் கட்சிகள் பணம் பெற்றதால்தான் இத்தனை ஆண்டுகள் கழித்தும் அதை சரிபார்க்க முடிகிறது என்று கூறினார். மேலும், தேர்தல் பத்திரம் மூலம் அனைத்து கட்சிகளும் பணம் பெற்றுள்ளதாக கூறிய அவர், பாஜக மீது மட்டும் குற்றம் சுமத்துப்படுவதாக வேதனை தெரிவித்தார்.
நடப்பு ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி இதுவரை வெற்றி கணக்கை தொடங்கவில்லை. இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மிடில் ஆர்டர் பேட்டிங் மிகவும் மோசமாக இருப்பதே. இது ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றையை போட்டியிலும் எதிரொலித்தது. எனவே, அந்த அணி மிடில் ஆர்டர் பேட்டிங்கில் கவனம் செலுத்தினால் மட்டுமே அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி முடியும் என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
நடிகர் விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர், புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். சட்டம் ஒரு இருட்டறை உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ள அவர், குணச்சித்திர வேடங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். அதன்படி, புதுமுக இயக்குனர் நிதின் வேமுபதி இயக்கும் புதிய திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நடிக்கிறார். நாயை மையமாக வைத்து படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் பாலத்தை உடைத்துக் கொண்டு பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டரை கொண்டாடுவதற்காக போட்ஸ்வானாவில் இருந்து மொரியா சென்ற பேருந்து, பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் 45 பேரும் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் மே மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி அதிபர் பதவியிலிருந்து 2018இல் விலகிய அவருக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் 3 மாதங்களில் விடுதலையான ஜூமா, அண்மையில் புதிய கட்சி துவங்கியநிலையில், தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளர்களும், கூட்டணி கட்சி வேட்பாளர்களும் அதிகளவில் வெற்றி பெறுவார்கள் என்று இபிஎஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் பெயரில் 5 பேர் வேட்புமனு கொடுத்தது குறித்து நான் எப்படி கருத்து கூற முடியும் எனக் கூறிய அவர், மோடியிடம் நேரில் சரணாகதி; வெளியில் வீரவசனம் என்பதே திமுகவின் கொள்கை. அதிமுகவை வேண்டுமென்ற திமுகவினர் விமர்சிக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.
Sorry, no posts matched your criteria.