India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மாவட்டத்தின் மலை பகுதிகளிலும், தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் கனமழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்து லக்னோ அணி தடுமாறி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் டி காக் 12, கே.எல்.ராகுல் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் களமிறங்கிய ஸ்டாய்னிஸ் 5, ஹூடா 0 ரன்களில் ஆட்டமிழக்கவே LSG தடுமாறி வருகிறது. சிறப்பாக பந்துவீசிய இஷாந்த் ஷர்மா 3, அக்ஷர் படேல் 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
உலக அளவில் வேலைவாய்ப்பு தகவல்களை பகிரும் முன்னணி நிறுவனங்களில் Indeed இணையதளமும் ஒன்று. கடந்த ஆண்டு அந்த நிறுவனம் 2,200 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியது. இதையடுத்து தற்போது 1,000 ஊழியர்களை வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்துள்ளது. வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதால் 8% ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருப்பதாக அந்த நிறுவன தலைமை நிர்வாகி கிறிஸ் ஹைம்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
மும்பை அருகே நேற்று 100 அடி விளம்பர போர்டு, புழுதி புயல் மற்றும் மழையின் காரணமாக சரிந்தது. இதில் நேற்று 8 பலியான நிலையில் இன்று உயிரிழப்பு 14ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தோர் எண்ணிக்கையும் 74ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக விளம்பர போர்டு வைத்த ஈகோ மீடியா உரிமையாளர் பாவேஸ் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை, செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள அவரை தேடி வருகிறது.
பாஜக தன்னைக் கண்டு அஞ்சுவதாக டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அரியானா மாநிலம் குருஷேத்ராவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், மக்களவைத் தேர்தலுக்கு பிரசாரம் செய்யக் கூடாது என்பதற்காகவே கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதாக கூறினார். தன்னைக் கண்டு பாஜக அஞ்சுவதே இதற்கு காரணம் என்றும் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.
சூரியனில் நிகழ்ந்த மாற்றத்தை ஆதித்யா L1 விண்கலம் புகைப்படமாக எடுத்து அதனை பூமிக்கு அனுப்பியுள்ளது. சூரியனின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக, இஸ்ரோ சார்பில் கடந்த ஆண்டு ஆதித்யா L1 விண்கலம் அனுப்பப்பட்டது. இந்த விண்கலம், தனது பணியை சிறப்பாக செய்து வரும் சூழலில் மே 10-12 வரை சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை புகைப்படமாக எடுத்து அனுப்பியுள்ளது. இந்த தகவலை ISRO தனது X தளத்தில் பகிர்ந்துள்ளது.
லக்னோ அணிக்கு 209 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி. ஐபிஎல் தொடரின் 64ஆவது லீக் போட்டி டெல்லியில் நடைபெற்றது. டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய DC அதிரடியாக விளையாடியது. குறிப்பாக, அபிஷேக் 58, ஸ்டப்ஸ் 57, ஹோப் 38, பண்ட் 33 ரன்களை விளாசியதால் DC அணி 208/4 ரன்களை குவித்தது. LSG தரப்பில், நவீன் உல்-ஹக் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நாமக்கல் கோழிப் பண்ணைகளில், முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து, ஒரு முட்டை ₹5.65ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் எதிரொலியால் முட்டை விலை சரிவைக் கண்ட நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில், மொத்த கொள்முதல் விலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 70 காசுகள் முட்டை விலை உயர்ந்துள்ளது. சில்லறை விலையில் ஒரு முட்டை ₹6 முதல் ₹6.50 வரை விற்பனையாகிறது.
ஐபிஎல் புள்ளி பட்டியலில் 5ஆம் இடத்தில் உள்ள ஆர்சிபி அணி, வரும் 18ஆம் தேதி சிஎஸ்கே அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் 18.1 ஓவருக்குள் 18 ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி வென்றால்தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும். ஆர்சிபி வீரர் கோலியின் ஜெர்சி எண்ணும் 18. இதுபோல ஆர்சிபியை சுற்றிலும் 18ஆம் எண் அதிக முக்கியத்துவம் பெறுவது கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நடிகை கங்கனா ரனாவத், தனக்கு ₹91.50 கோடி சொத்துக்கள் இருப்பதாக பிரமாணப் பாத்திரத்தில் தெரிவித்துள்ளார். அதில், ₹3 கோடி மதிப்பில் 6 கிலோ தங்கம், 60 கிலோ வெள்ளி மற்றும் வைர நகைகள் இருப்பதாகவும், ₹28.73 கோடி அசையும் மற்றும் ₹62.92 கோடி அசையா சொத்துகள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ₹17.38 கோடி கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.