India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகர் விஜய், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். படத்தில் நடித்த உதயநிதி, அரசியலுக்கு வந்து அமைச்சராகி விட்டார். முதல்வருக்கு அடுத்த அதிகாரமையமாக அவர் தற்போது உள்ளார். இதுபோல தன்னுடன் கல்லூரியில் படித்தவரும், தனக்கு பிறகு திரைத்துறைக்கு வந்தவருமான உதயநிதி ஸ்டாலின், அரசியலில் சாதித்து வருவதும் விஜய் அரசியல் கட்சியை தொடங்க ஒரு காரணமாக கூறப்படுகிறது.
திரைத்துறையில் சாதித்தவர்கள், அரசியலுக்கு வருவது இந்தியாவில் வழக்கமாக உள்ளது. இதற்கு கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, என்டிஆர், விஜயகாந்த் உள்ளிட்டோரை உதாரணமாக கூறலாம். ஏதேனும் ஒரு உத்வேகத்தாலோ, காரணத்தாலோ இந்த முடிவை அவர்கள் எடுத்திருக்கலாம். அந்த வரிசையில் விஜய்யும் இணைந்துள்ளார். அரசியலுக்கு வந்தததற்கு பல காரணம் ஊகமாக கூறப்பட்டாலும், உண்மையான காரணத்தை அவர் மட்டுமே அறிவார்.
தேமுதிகவின் நம்பிக்கைக்குரிய தொகுதியாக விஜய பிரபாகரன் போட்டியிடும் விருதுநகர் தொகுதி பார்க்கப்படுகிறது. மறைந்த விஜயகாந்தின் பூர்வீக ஊர் என்பதால், அங்கு விஜய பிரபாகரன் செல்லும் இடங்களில் எல்லாம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. மக்களிடையே உள்ள அனுதாப அலை, அதிமுகவினரின் முழு ஒத்துழைப்பு, பாஜக எதிர்ப்பு போன்ற காரணங்களால், விருதுநகரில் தேமுதிக வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், மகளிர் உரிமைத்தொகை ₹1000 இம்மாதம் வழங்கப்படுமா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இத்திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் இருப்பதால், இதுவரை வாங்கிக் கொண்டிருக்கும் பெண்களுக்கு ₹1000 வந்துவிடும்; புதியவர்களுக்கு வராது. இத்திட்டத்தில் விடுபட்டவர்களை இணைக்கும் வகையில் தேர்தல் முடிந்த உடன் சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடித்துள்ள ‘ரோமியோ’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி முதல் முறையாக ரொமான்டிக் ஹீரோவாக நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஜி.வி.பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘டியர்’, கார்த்தி, தமன்னா நடித்த ‘பையா’ ரீ-ரிலீஸ், ஃபகத் பாசில் நடித்துள்ள ‘ஆவேஷம்’, பிரணவ் மோகன்லால் நடித்துள்ள ‘வருஷங்களுக்கு ஷேஷம்’ ஆகிய படங்களும் திரைக்கு வந்துள்ளன.
ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், குஜராத் வீரர் ரஷீத் கானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அபாரமாக பந்துவீசிய அவர், 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டும் கொடுத்து ஜாஸ் பட்லர் விக்கெட்டை வீழ்த்தினார். அத்துடன், பேட்டிங்கிலும் 4 பவுண்டரிகள் விளாசிய அவர், 11 பந்துகளில் 24 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இது குஜராத் அணிக்கு கிடைத்த 3ஆவது வெற்றியாகும்.
தமிழகமெங்கும் தேர்தல் பறக்கும் படையால் கைப்பற்றப்படும் பணம் ஒருபக்கம், அதிரடியான வருமான வரித்துறை ரெய்டுகள் மறுபக்கம் என தேர்தல் களம் தீப்பிடிக்கிறது. சென்னை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் ஆளும் கட்சிப் பிரமுகர்கள், அரசு ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் தொடர்ச்சியாக சோதனை நடந்து வருகிறது. தேர்தல் நேர பணப்பட்டுவாடாவை தடுக்க மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனைகளில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தவெக தலைவரும், நடிகருமான விஜய், ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், புனித ரமலான் மாதத்தில் இறைவனை வேண்டி நோன்பிருந்து, அன்பு, கருணை, ஈகை, சகோதரத்துவம் உள்ளிட்ட உயரிய பண்புகளை உலகுக்கு எடுத்துக்கூறும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி முன்பு கைது செய்யப்பட்டார். பிறகு அவரது இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது பாஜக மீது டிடிவி வைத்த குற்றச்சாட்டுகள் ஏராளம். இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து அமமுக போட்டியிடுகிறது. இதை சுட்டிக்காட்டி, முந்தைய கசப்பை 2 கட்சிகளும் மறந்து விட்டனவா, அரசியலில் இதெல்லாம் சகஜமா என மக்கள் பேசி வருகின்றனர்.
லவ்வர் படத்தில் வரும் ஐஷு கதாபாத்திரத்தை விமர்சித்தவர்களுக்கு, நடிகை ரினி பதிலடி கொடுத்துள்ளார். தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், “படத்தில் வரும் கதாபாத்திரம் பிடிக்காததால், சில முட்டாள்கள் என்னை நேரடியாக திட்டுகிறார்கள். ஒரு நடிகையிடம் எப்படி இவர்களால் இழிவாக பேச முடிகிறது. கருத்துகளை அவமரியாதையுடன் காட்ட வேண்டிய அவசியமில்லை. கதாபாத்திரத்தை யாரும் சரியாக புரிந்துகொள்ளவில்லை” எனத் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.