News April 18, 2024

நிர்மலா தேவி வழக்கில் ஐகோர்ட் கண்டனம்

image

பேராசிரியை நிர்மலா தேவிக்கு எதிரான வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்குச் சென்னை ஐகோர்ட் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளது. தவறாக வழிநடத்த முயற்சித்ததாக நிர்மலா தேவிக்கு எதிராக மாணவிகள் அளித்த புகார் மீது 6 ஆண்டாக எடுத்த நடவடிக்கை என்ன? என்றும், புகாரை விசாகா குழுவுக்கு அனுப்பாதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், ஜூன் 7க்குள் விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

News April 18, 2024

ஷில்பா ஷெட்டியின் பங்களா முடக்கம்

image

பிட் காயின் மோசடி வழக்கில் ஷில்பா ஷெட்டியின் பங்களாவை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. பிட்காயின் திட்டம் மூலம் ரூ.6,600 கோடி மோசடி நடந்தது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மும்பை ஜூஹூவில் உள்ள பங்களா, புனேவில் உள்ள பங்களா, ஷில்பா கணவர் ராஜ் குந்த்ரா பெயரில் உள்ள பங்குகள் ஆகியவற்றை முடக்கியுள்ளது.

News April 18, 2024

பாஜகவின் B-Team காங்கிரஸ்

image

காங்கிரசை பாஜகவின் B-Team என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பாஜகவை சித்தாந்த ரீதியிலோ, அரசியல் ரீதியிலோ எதிர்க்க காங்கிரஸ் விரும்பவில்லை என்றும், ஏனெனில் பாஜகவின் B-Teamஆக காங்கிரஸ் தன்னை மாற்றிக் கொண்டுள்ளது என்றும் குற்றம்சாட்டினார். கருத்து கணிப்புகள் குறித்த கேள்விக்கு, அவை புனையப்பட்டவை, பணம் கொடுத்து வெளியிடப்பட்டவை என்று அவர் கூறினார்.

News April 18, 2024

CSK அணியில் மாற்றம்

image

காயம் காரணமாக அணியில் இணையாமல் இருந்த CSK வீரர் டெவோன் கான்வே, ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலும் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக, இங்கி., வீரர் ரிச்சர்ட் கிளீசன் அணியில் இணைந்துள்ளார். அதேபோல், CSK அணியின் நட்சத்திர பவுலர் முஸ்தஃபிசுர், பஞ்சாபிற்கு எதிரான (மே 1) போட்டிக்குப் பிறகு அணியில் இருந்து விலகுகிறார். இந்த மாற்றம் அணியின் வெற்றியைப் பாதிக்குமா? எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

News April 18, 2024

‘Control Unit’ என்றால் என்ன?

image

‘Control Unit’ – வாக்குப்பதிவு இயந்திரத்தில் என்ன வாக்கு பதிவாகிறது என்பதை பதிவு செய்து அதனை ஒப்புகைச் சீட்டு இயந்திரத்திற்கு அனுப்பி நகலெடுக்க உத்தரவிடும்; அந்த நகல் கண்ணாடி வழியாக 7 நொடிகளுக்கு வாக்காளர்களுக்கு தெரிந்த பின் கத்தரிக்கப்பட்டு ஒப்புக்கை சீட்டு இயந்திரத்தில் விழும். இதைத்தொடர்ந்து ஒப்புகைச் சீட்டு இயந்திரம் அனுப்பும் பதிலை மீண்டும் ‘Control Unit’ பதிவு செய்து கொள்ளும்.

News April 18, 2024

நாளை OTT-இல் வெளியாகும் திரைப்படங்கள்

image

▶அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சைரன்’ (ஹாட்ஸ்டார்), ▶ஷெரிஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா நடித்த ‘ரணம்’ (அமேசான் பிரைம்), ▶ஆதித்யா சுஹாஸ் ஜம்பலே இயக்கத்தில் பிரியாமணி, யாமி கௌதம் நடித்துள்ள ‘ஆர்டிக்கிள் 370’ (ஜியோ சினிமா) ஆகிய திரைப்படங்கள் நாளை (ஏப். 19) OTT தளங்களில் வெளியாக உள்ளன.

News April 18, 2024

பிங்க் வாக்குச்சாவடியில் மகளிர் மட்டுமே

image

பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பிங்க் வாக்குச்சாவடி மையம் சென்னையிலுள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா ஒன்று அமைக்கப்படவுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் அலுவலர்கள், ஊழியர்கள், போலீசார் என அனைவரும் பெண்களாக மட்டுமே இருப்பார்கள். அனைவரும் பிங்க் வண்ண உடைகளை அணிந்து பணியாற்றுவர். கர்ப்பிணிகள், கைக்குழந்தை வைத்துள்ளவர்கள், முதியோருக்கு தனித்தனி வரிசை அமைக்கப்படவுள்ளது.

News April 18, 2024

“விழிப்புடன் இருங்க” ஸ்டாலின் மடல்

image

இத்தனை நாள் பாடுபட்டது பயன் தர, வாக்குப்பதிவு நாளன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும் என்று வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் கட்சியினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் வாக்குப்பதிவு முடியும் வரை விழிப்புடன் செயலாற்றினால்தான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும் என அறிவுறுத்தியுள்ளார்.

News April 18, 2024

இன்ஸ்டாகிராமில் இருந்து விலகிய யுவன் சங்கர் ராஜா

image

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கியுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். கடைசியாக அவர் பதிவிட்ட ஒரு போஸ்டுக்கு நிறைய பேர் தவறான மற்றும் ஆபாசமான கமென்ட்களைப் பதிவு செய்ததால், அவர் தனது கணக்கை முடக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. இன்ஸ்டாகிராமில் அவரது கணக்கைத் தேடும்போது வராததால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News April 18, 2024

வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும்

image

வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணிக்கு வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வாக்களிக்க ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதோர், 12 ஆவணங்களில் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம் என்றும், தேர்தல் ஆணையத்தின் செயலி மூலமாக, வாக்குப்பதிவு மையத்தை அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

error: Content is protected !!