News May 31, 2024
பறவைக் காய்ச்சல்: மாநில அரசுகளுக்கு உத்தரவு

கோழி உள்ளிட்ட பறவைகளின் திடீர் மரணம் குறித்த தகவலை, மாநில அரசுகள் உடனே தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, ஜார்க்கண்டில் பறவைக் காய்ச்சல் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மனிதர்களும் பாதிக்கும் அபாயம் உள்ளதால், தடுப்பு மருந்துகள், PPE கருவிகளை தயார் நிலையில் வைக்கவும், பாதிக்கப்பட்ட பறவைகளின் மாதிரிகளை சோதனை செய்யவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News July 9, 2025
ஸ்மார்ட் போன்கள் விலை குறைய வாய்ப்பு!

4G, 5G ஸ்மார்ட் போன்களின் விலைகளை நிறுவனங்கள் குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. One Plus, iQOO, Leomi, Realme உள்ளிட்ட நிறுவனங்களில் பெருமளவு செல்போன்கள் தேங்கியுள்ளன. ரக்ஷா பந்தன், சுதந்திர தினம் தொடங்கி அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளதால் பண்டிகைகளுக்கு முன்பே கையிருப்பில் உள்ள செல்போன்களை சலுகையில் விற்பனை செய்துவிட நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உங்கள் பட்ஜெட் என்ன?
News July 9, 2025
பரந்தூர் விவகாரம்: நிலம் வழங்கியோருக்கு இழப்பீடு

பரந்தூர் விமான நிலையம் அமைக்க இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் 19 பேருக்கு இன்று இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் பரந்தூர், பொடவூர், நெல்வாய், வளத்தூர், அக்கம்மாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 19 பேர் நிலத்தை கொடுக்க ஒப்புக்கொண்டனர். அதன்படி 17 ஏக்கர் நிலம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
News July 9, 2025
13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இன்று (ஜூலை 9) இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதாவது, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தி.மலை, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல்லில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. வேலூர், திருப்பத்தூர், நீலகிரி, நெல்லையில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது.