News May 31, 2024
தரம் தாழ்ந்த பரப்புரையை மக்கள் ஏற்க மாட்டார்கள்

மோடி தன்னையே கடவுளாக பரப்புரை செய்து வருவதாக சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். மோடி, ராமரை இத்தனை வருடங்களாக கடவுளாக கும்பிட்டு வந்ததாக தெரிவித்த அவர், தற்போது பிரதமர் தன்னைத்தானே கடவுளாக கூறி வருவதாக விமர்சித்தார். இப்படி ஒரு தரம் தாழ்ந்த பரப்புரையை, இந்தியாவில் இதுவரை எந்த பிரதமரும் செய்யவில்லை என்றும், இதை இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறினார்.
Similar News
News July 8, 2025
டெக்சாஸை மூழ்கடித்த பெரு வெள்ளம்… 104 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் தொடர் மழையால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி 104 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கெர் கவுண்ட்டியில் மட்டும் சுமார் 84 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 32 பேரின் நிலை குறித்து தகவல் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. பலரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
News July 8, 2025
இரவு 10 மணிக்கு என்ன நடக்கப் போகிறது?

இந்தியா- அமெரிக்கா இடையே நடந்துவரும் வர்த்தக பேச்சுவார்த்தை, இறுதிநிலையை எட்டியுள்ளது. இந்திய பொருள்கள் மீதான இறக்குமதி வரியை 26%-ஆக உயர்த்திய டிரம்ப், அதற்கு கொடுத்த 90 நாள் அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், IND-USA இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு இரவு 10 மணிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதர 14 நாடுகளுக்கான வரி உயர்வு ஆக., 1 முதல் அமலுக்கு வரவுள்ளது.
News July 8, 2025
செயற்குழு தீர்மானங்கள் செல்லாது: அன்புமணி

ராமதாஸ் தலைமையிலான செயற்குழு தீர்மானங்கள் செல்லாது என அன்புமணி தலைமையிலான நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் திமுக அரசை கண்டித்து ஜூலை 20-ல் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பாமகவின் செயல்பாடுகள் குறித்த அனைத்து அதிகாரங்களும் அன்புமணிக்கு மட்டுமே உண்டு எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.