India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தவெக மாநாட்டில் CM ஸ்டாலினை ‘அங்கிள்’ என விஜய் அழைத்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய CPM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், கொள்கை அடிப்படையில் விமர்சிப்பதற்கு பதிலாக தரம் தாழ்ந்த வகையில் பேசுவது கண்டிக்கத்தக்கது என்றார். நடிகர் என்ற நிலையில் இருந்து, தலைவர் என்ற நிலைக்கு அவர் இன்னும் உயரவில்லை என்றும் விமர்சித்தார். விஜய் பேசியது சரியா?
இன்று கனமழை அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், சென்னை, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், விடுமுறை விடப்படுமா என பள்ளி மாணவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஆனால், சூழ்நிலையை பொறுத்துதான் விடுமுறை குறித்த முடிவு எடுக்கப்படும். மழை பெய்யும் மாவட்டங்களில் குடை, ரெயின்கோட் உள்ளிட்டவற்றை மாணவர்கள் எடுத்து செல்லவும்.
✦முதுகெலும்பு நரம்புகள், தோள்கள் & முதுகை வலுப்படுத்த உதவும்.
✦தோள்பட்டை வலியால் அவதிப்படுபவர்களுக்கு இந்த யோகா உதவும்,
➥படத்தில் உள்ளது போல, காலை முட்டி போட்டு, முதுகை நேராக வைத்து படி உட்காரவும்.
➥மெதுவாக மெல்ல பின்னோக்கி சாய்ந்து, தலை- கழுத்து- முதுகு தரையில் படும்படி(படத்தில் உள்ளபடி) படுக்கவும்.
➥இந்த நிலையில் 15- 20 வினாடிகள் வரை இருந்துவிட்டு, பிறகு பழைய நிலைக்கு திரும்பவும்.
தமிழ்நாட்டில் உள்ள தனது ரசிகர்களை பிழிந்து பணம் சம்பாதித்ததை தவிர விஜய் மக்களுக்கு என்ன செய்துள்ளார் என எச்.ராஜா கேள்வி எழுப்பினார். பாஜக கொள்கை ரீதியான எதிரி என்றால், உங்களுக்கு என்ன கொள்கை இருக்கிறது? என கேட்டார். பாஜகவை பற்றி தவறாக விமர்சனம் செய்ய வேண்டாம் என அவரை எச்சரிக்கிறேன் என்றார். மேலும், வாக்கு வேண்டுமென்றால் தமிழ்நாட்டின் அரசியல் பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்றும் சாடினார்.
காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது. சுமார் 5 லட்சம் பேர் அங்கு உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாகவும், இஸ்ரேலின் தடை உத்தரவு காரணமாக காசாவுக்குள் உணவைக் கொண்டு செல்ல முடியாத சூழல் நிலவுவதாகவும், ஐ.நா நிவாரண உதவி பிரிவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மறுத்த இஸ்ரேல் அரசு, உணவு பஞ்சம் என்பது ஹமாஸ் அமைப்பால் பரப்பப்பட்ட பொய் என பதிலடி கொடுத்துள்ளது.
காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது. சுமார் 5 லட்சம் பேர் அங்கு உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாகவும், இஸ்ரேலின் தடை உத்தரவு காரணமாக காசாவுக்குள் உணவைக் கொண்டு செல்ல முடியாத சூழல் நிலவுவதாகவும், ஐ.நா நிவாரண உதவி பிரிவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மறுத்த இஸ்ரேல் அரசு, உணவு பஞ்சம் என்பது ஹமாஸ் அமைப்பால் பரப்பப்பட்ட பொய் என பதிலடி கொடுத்துள்ளது.
புராணங்களின் படி, பார்வதி நீராடச் சென்றபோது, வெளியே விநாயகர் காவலுக்கு நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த சிவனை, விநாயகர் உள்ளே செல்ல விடாமல் தடுக்க, கோபமடைந்த சிவன் விநாயகரின் தலையைத் துண்டித்தார். தலை துண்டிக்கப்பட்ட இடமாக கருதி, உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலில் இருந்து 20 கி.மீட்டர் தொலைவில் முன்கடியா என்ற கிராமத்தில் தலையில்லாத விநாயகர் கோயில் அமைந்துள்ளது. SHARE IT.
‘அங்கிள்’ என ஸ்டாலினை தவெக தலைவர் விஜய் பேசியிருப்பது சரியில்லை என்றும், விஜய்யை ‘பூமர்’ மாதிரி பேசுகிறீர்கள் என்று யாராவது சொன்னால் அவரது மனது கஷ்டப்படாதா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். நெல்லையில் பாஜக பூத் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் NDA கூட்டணியை வெற்றிப் பெற செய்து, EPS-யை CM ஆக்கும் பொறுப்பு நமக்கு இருப்பதாக அண்ணாமலை தெரிவித்தார்.
TVK மாநாட்டில் விஜய் விதை நெல் கதை கூறினார். இக்கதையை சீமான் 2021 தேர்தலின் போது தெரிவித்ததாகவும், <<17483040>>அதனை விஜய் காப்பியடித்தாகவும் விமர்சனங்கள் எழுந்தன.<<>> இதுபற்றி பேட்டியளித்த சீமான், கதையாக இருந்தாலும், முதலில் கூறியது நான் என்றும், இளவரசன் கதையாக தான் கூறியதை, தளபதி கதையாக விஜய் சொல்லிவுள்ளதாகவும் தெரிவித்தார். அண்ணனிடம் கற்றதை தம்பி சொல்கிறார். நானும் எங்கேயே கற்றதுதானே, அதில் தவறில்லை என்றார்.
நீண்ட நேரம் இரவில் உணவு இல்லாமல் இருந்த உடல், காலை உணவின் மூலம் புதிய சக்தி பெறுகிறது. ஆதலால் தான் காலை உணவு முக்கியமென மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆரோக்கியமான காலை உணவு உடலுக்கு தேவையான புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஆகிய சத்துக்களை வழங்குகிறது. அதே சமயம் தேவையற்ற காலை உணவும் உடலை கெடுக்கிறது. அவை என்னென்ன என்பதை மேலே கொடுத்துள்ளோம். அதனை Swipe செய்து பார்க்கவும்.
Sorry, no posts matched your criteria.