News August 23, 2025
காசாவில் கடும் உணவு பஞ்சம்: ஐ.நா அறிவிப்பு

காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது. சுமார் 5 லட்சம் பேர் அங்கு உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாகவும், இஸ்ரேலின் தடை உத்தரவு காரணமாக காசாவுக்குள் உணவைக் கொண்டு செல்ல முடியாத சூழல் நிலவுவதாகவும், ஐ.நா நிவாரண உதவி பிரிவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மறுத்த இஸ்ரேல் அரசு, உணவு பஞ்சம் என்பது ஹமாஸ் அமைப்பால் பரப்பப்பட்ட பொய் என பதிலடி கொடுத்துள்ளது.
Similar News
News January 15, 2026
₹1,000 உரிமைத் தொகை.. முக்கிய அறிவிப்பு வந்தது

₹1,000 மகளிர் உரிமைத் தொகை இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை பெற்று வருபவர்கள், வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகையை பெற முடியாது என அரசு தெரிவித்துள்ளது. இந்த உதவித் தொகையானது தகுதிக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகிறது. உரிமைத்தொகை மட்டுமல்லாது, வேறு எந்தவித உதவித்தொகை பெறுபவராக இருந்தாலும் வேலைவாய்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது.
News January 15, 2026
டெட் ரிசல்ட்டை உடனே வெளியிடுங்க: அன்புமணி

முதுநிலை ஆசிரியர் தேர்ச்சி பட்டியல், டெட் தேர்வு முடிவுகளை TRB உடனே வெளியிட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியம் நினைத்தால், இந்த தேர்வுகளின் முடிவுகளை ஒரே மாதத்தில் வெளிவிட்டு விட முடியும். ஆனால், தேர்வு நடந்து இரு மாதங்கள் ஆகியும், இதுவரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதற்கு முக்கிய காரணம், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அலட்சியமே என்று குற்றம் சாட்டினார்.
News January 15, 2026
மக்கள் நாயகன் காலமானார்.. பொங்கல் நாளில் அஞ்சலி

ராணுவ வீரர் பிரமோத் ஜாதவ், தனது மனைவியை பிரசவத்திற்கு அழைத்து சென்றபோது நிகழ்ந்த விபத்தில் கடந்த 5 நாள்களுக்கு முன்பு உயிரிழந்தார். பிரமோத்துடன் பணிபுரிந்த ராணுவ வீரர்கள் சங்கராந்தி நாளில், அவரது வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மேலும், பிரமோத்தின் போட்டோவுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பிரமோத் உடலுக்கு அவரது மனைவி <<18829931>>ஸ்டெச்சரில் சென்று இறுதி அஞ்சலி<<>> செலுத்தியிருந்தார்.


