India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அல்லு அர்ஜுனை வைத்து அட்லி இயக்கும் படத்தின் ஷூட்டிங், கதை விவாதம் என்ற பெயரில் ஒத்திவைக்கப்பட்டுக்கொண்டே போகிறதாம். ஃப்ளாப் பட்டியலில் தானும் சேரக்கூடாது என்பதற்காக அலர்ட் மோடில் இருக்கும் அட்லி, கதை விவாதக் குழுக்களை உருவாக்கி ஒவ்வொரு விவாதத்திற்கும் ஆஜராகிவருகிறாராம். ஏற்கெனவே கொடுத்த தேதிகளில் ஷூட்டிங் வைக்காததால், ‘எஸ்கேப் ஆகிவிடலாமா’ என்று தீபிகா படுகோன் யோசிப்பதாக கூறப்படுகிறது.
இந்திய அரசியல் வரலாற்றில் அதிக தொண்டர்கள் பங்கேற்ற மாநாடு(14.78 லட்சம்) என தவெகவின் மதுரை மாநாடு சாதனை படைத்திருப்பதாக Times of India தெரிவித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பாஜக (11.86 லட்சம்), சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சி(11.03 லட்சம்), தெலுங்கு தேசம் கட்சி(10.55 லட்சம்), பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி(5.13 லட்சம்) ஆகியவை இருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளது. விஜய்க்கு கூடிய கூட்டம் ஓட்டாகுமா?
வழக்குகளில் சாட்சியாக உள்ள குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதுகாப்பது தொடர்பாக குழு அமைக்க TN அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விதிமுறைகளை வகுக்க பல துறைகள் அடங்கிய குழு ஒன்றை விரைவில் அமைக்க உள்ளதாம். கோவையில் 8 வயது மகளின் கண்முன்னே அவரது தாய் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொலையை நேரில் பார்த்த குழந்தை உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.
திமுக கூட்டணியில் பாமக இணைவதற்கு விசிக எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், தைலாபுரத்திற்கே சென்று திருமா, ராமதாஸை சந்தித்ததாக தகவல்கள் கசிகின்றன. இச்சந்திப்பில் திமுக கூட்டணியில் பாமக இணைவதற்கு தடை போடமாட்டேன் என திருமா சொன்னதாகவும், பாமகவை பிளவுபடுத்தும் பாஜகவின் திட்டத்தை முறியடிக்கும் நோக்கில், திருமா இதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.
ரஜினியை போயஸ் கார்டனில் அவரது வீட்டில் சந்தித்தார் சிம்ரன். இது குறித்து X-ல் பதிவிட்டுள்ள அவர், சில சந்திப்புகள் பொன்னானவை என்றும், சூப்பர் ஸ்டாருடன் நேரம் செலவிட்டது மிகுந்த மகிழ்ச்சி எனவும் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார். ‘கூலி’, ‘டூரிஸ்ட் பேமிலி’ படங்களின் வெற்றி இந்த சந்திப்பை இனிமையாக்கி உள்ளதாகவும் அவர குறிப்பிட்டுள்ளார். பேட்ட ரஜினி, சிம்ரன் காம்போ யாருக்கெல்லாம் பிடிக்கும்?
இன்றைய நவீன காலத்தில் எப்போது பார்த்தாலும் மன அழுத்தமாக இருக்கிறது என்று புலம்புபவர்கள் அதிகம். ஆனால், வாரத்தில் ஒரு நாளாவது முழுமையாக சோம்பேறியாக இருந்தால் மன அழுத்தம் குறையுமாம். அதுமட்டுமல்லாமல், ரத்த அழுத்தம் சீராகி, மனநலம் மேம்படும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஓய்வு எடுப்பது நேரத்தை வீணடிப்பதல்ல; அது படைப்பாற்றலை அதிகரித்து, கவனத்தை கூர்மையாக்கி உழைப்புத் திறனையும் அதிகரிக்கிறதாம்.
பதவி பறிப்பு மசோதாவை மத்திய அரசு கொண்டுவர முயலும் நிலையில், CM-களின் கிரிமினல் வழக்குகளை ADR வெளியிட்டுள்ளது. இதில், தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி முதலிடம்(89), TN CM ஸ்டாலின் 2-வது இடம்(47), AP CM சந்திரபாபு 3-வது இடம்(19) வகிக்கின்றனர். மேலும், BJP ஆளும் MH-ல் CM பட்னவிஸ் 4 வழக்குகளுடன் 6-வது, KL CM பினராயி 8-வது இடத்தில் உள்ளனர். இந்த மசோதா சட்டமானால் இவர்களின் பதவிக்கு சிக்கல் ஏற்படும்.
BJP, DMK-வை விளாசும் விஜய், ஆரம்பம் முதலே அதிமுகவை பொருட்படுத்துவதில்லை. அத்துடன், 2026 தேர்தலில் DMK Vs TVK இடையேதான் போட்டி என்றும் கூறி வருகிறார். இந்நிலையில், அமைச்சர் முத்துசாமியும் DMK, TVK இடையேதான் போட்டி என கூறியுள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. முதல்வரை ‘Uncle’ என விஜய் கூறியது தவறு என்ற அவர், திமுகவை உயர்ந்த இடத்தில் பார்ப்பதற்கு விஜய்க்கு நன்றி தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் பற்றிய கேள்விக்கு CSK கேப்டன் ருதுராஜ் தோனியின் பெயரை கூற மறுத்திருக்கிறார். ஜூனியர் அகாடமி வீரர்களுடன் உரையாடிய அவர் தோனி, ரிஷப் பண்ட்-ஐ விட தானே சிறந்த கீப்பர் என நகைச்சுவையாக கூறினார். மேலும் அணியில் யாராவது டக் அவுட் ஆகினால் கன்னத்தில் அறைந்துவிடுவேன் என சிறுவர்களிடம் கலகலத்தார். தோனி ஓய்வு பெற்றால் ஒரு வேளை CSK கீப்பர் ருதுராஜ் தானா?
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட்டை ‘டாக்ஸிக்’ உலகம் என விமர்சித்திருந்தார் அனுராக் காஷ்யப். இந்நிலையில், பாலிவுட் உலகம் தன்னை தொடர்ந்து புறக்கணித்ததாக கூறியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தனது குடிப்பழக்கத்தை பாலிவுட் குறைகூறிக் கொண்டே இருந்ததாக கூறிய அவர், தென்னகத்தின் அன்பால் குடியை நிறுத்தியது மட்டுமல்லாமல், உடற்பயிற்சியை தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.