News August 23, 2025
வழக்கு சாட்சி: குழந்தைகளை பாதுகாக்க அரசு புதிய முடிவு!

வழக்குகளில் சாட்சியாக உள்ள குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதுகாப்பது தொடர்பாக குழு அமைக்க TN அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விதிமுறைகளை வகுக்க பல துறைகள் அடங்கிய குழு ஒன்றை விரைவில் அமைக்க உள்ளதாம். கோவையில் 8 வயது மகளின் கண்முன்னே அவரது தாய் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொலையை நேரில் பார்த்த குழந்தை உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.
Similar News
News January 20, 2026
மாதம் ₹2,000.. தமிழக அரசு அறிவிப்பு

‘அன்புக்கரங்கள்’ திட்டம் மூலம் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் TN அரசு ₹2,000 வழங்குகிறது. 18 வயது நிறைவடையும் வரை தொகை வழங்கப்படுவதோடு, உயர்கல்விக்கும் அரசு உதவி செய்யும். பெற்றோர் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் நோய்களுடன் வாழ்ந்தாலோ (அ) மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறனாளியாக இருந்தாலோ கூட இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். தாலுகா ஆபீஸை அணுகுங்கள். SHARE.
News January 20, 2026
சூடுபிடிக்கும் தங்கம் திருட்டு வழக்கு: 21 இடங்களில் ரெய்டு

<<18345270>>சபரிமலையில்<<>> தங்கம் திருடப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழகம், கேரளா, பெங்களூருவில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்புடைய 21 இடங்களில் ED அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். இதில், சென்னையில் தங்க முலாம் பூசும் நிறுவனம் தொடர்புடைய 6 இடங்களில் ED ரெய்டு நடைபெற்று வருகிறது.
News January 20, 2026
ஜன நாயகன் ரிலீஸ்: ஐகோர்ட் சரமாரி கேள்வி

ஜன நாயகன் வழக்கை விசாரித்த சென்னை HC அமர்வு, U/A சான்றிதழ் தர முடிவு செய்துவிட்டு அதனை மாற்றியது ஏன் என தணிக்கை வாரியத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், படத்தை பார்த்துவிட்டு யார் புகார் கடிதம் எழுதியது என்ற கேள்விகளையும் நீதிபதிகள் எழுப்பினர். மேலும், இன்றே தீர்ப்பளிக்கும் வேண்டும் என்ற SC-ன் உத்தரவையும் சுட்டிக்காட்டிய நிலையில், உணவு இடைவேளைக்குப் பிறகு விசாரணை தொடரவுள்ளது.


