India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஆட்சி விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நெல்லை மாநாட்டில் நேற்று பேசிய அமித்ஷா, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியே அமையும் என மீண்டும் திட்டவட்டமாக கூறினார். இந்நிலையில், திருச்சியில் பரப்புரை மேற்கொண்ட இபிஎஸ், அதற்கு மாறாக பேசியுள்ளார். அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என ஆணித்தரமாக அவர் தெரிவித்துள்ளார். இதை எப்படி பார்க்குறீங்க?
இயக்குநர் பாரதிராஜா நடிக்கும் புதிய படத்திற்கு ‘புலவர்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் படத்தின் பர்ஸ்ட் லுக்கை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரவி முருகையா இப்படத்தை இயக்குகிறார். ‘புலவர்’ படம் க்ரைம் கதைக்களத்தை மையமாக கொண்டது. ‘கடைசி விவசாயி’ படத்தை தயாரித்த சூப்பர் டாக்கீஸ் நிறுவனமே இப்படத்தையும் தயாரித்துள்ளது. விரைவில் புலவரை திரையரங்குகளில் எதிர்பார்க்கலாம்.
4 ஆண்டுகள் கடுமையாக உழைத்து குடும்பக் கடனை அடைத்தார் சென்னையை சேர்ந்த இளைஞர். இனி ரிலாக்ஸ் ஆகலாம் என நினைத்தவருக்கு, காத்திருந்தது அதிர்ச்சி. ஆம், ஊரையே கூட்டி, அவருக்கு தடபுடலாக கல்யாணம் செய்தனர் பெற்றோர். அதற்கு ₹17 லட்சம் கடன் வாங்கினார்களாம். இப்போது அந்த கடனை அடைக்க ஓயாது ஓடிக் கொண்டிருக்கும் அவர், ‘கல்யாணம் பண்ண இப்படி பணத்தை வேஸ்ட் பண்ணாதீங்க’ என அட்வைஸ் செய்துள்ளார். உங்க அனுபவம் எப்படி?
டெல்லியில், மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை சந்தித்த கவர்னர் RN ரவி, TN விவசாயிகள், கைவினை கலைஞர்களுக்காக கோரிக்கை விடுத்ததாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கவர்னர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக போட்டி அரசு நடத்துவதாக திமுக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், விவசாயிகளின் நலனுக்காக மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாக கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன?
அதிகமான தொண்டர்கள் கூடிய அரசியல் மாநாடு, <<17494428>>தவெகவின் மதுரை மாநாடுதான்<<>> என ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தனது அடுத்த நகர்வுக்கு தயாராகி வருகிறார் விஜய். விக்கிரவாண்டி, மதுரையை தொடர்ந்து தவெகவின் அடுத்த மாநாடு கோவையில் நடைபெற உள்ளதாம். இது கொங்கு மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் அதிமுகவுக்கும், கொங்குவை கைப்பற்ற துடிக்கும் திமுகவுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
உங்கள் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகுதா? அப்போது, இந்த 6 பொருள்களை அவர்களின் உணவு பழக்க வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். மஞ்சள், சக்கரைவள்ளிக் கிழங்கு, வெள்ளைப்பூண்டு, ப்ரோக்கோலி, காளான், கீரை வகைகளை குழந்தையின் Diet-ல் சேர்த்தால் கட்டாயம் 1 மாதத்தில் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். SHARE.
வாடிக்கையாளர்கள் கடனை செலுத்த தவறினால் நகைகளை ஏலம் விடுவதே நடைமுறை. அதற்கு முன் உரிமையாளரிடம் முறையாக அறிவித்திருக்க வேண்டும். ஏல இருப்பு விலை(RESERVE PRICE) நகையின் மதிப்பில் 90% இருக்க வேண்டும். 2 ஏலங்கள் தோல்வியுற்ற பிறகு இருப்பு விலையை 85% ஆக குறைக்கலாம். ஏலத்தில் கூடுதலாக கிடைக்கும் தொகையை 7 நாள்களுக்குள் கடன் வாங்கியவரிடம் கொடுக்க வேண்டும். SHARE IT.
அனைத்து சமூகத்தினரும் தூய்மை பணி செய்ய முன்வர வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார். சென்னையில், பணியின்போது மின்சாரம் தாக்கி பலியான தூய்மை பணியாளர் வரலட்சுமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய அவர், வரலட்சுமியின் குழந்தைகளின் கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும் எனவும் சென்னையில் விரைவாக மின்சார கேபிள்களை புதை வடிவில் மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
<<17478371>>ரேஷன் கார்டுக்கு ₹5,000 <<>>வழங்க TN முடிவு செய்திருப்பதாக 2 நாள்களாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து பேசிய கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர், தீபாவளி பரிசாக மோடி ஜிஎஸ்டி குறைப்பை வெளியிட இருப்பதால், அதற்கு போட்டியாக தமிழக அரசும் தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளார். பொங்கலுக்கு 2 மாதங்களுக்கு முன்பே தீபாவளி நேரத்தில் பொங்கல் பரிசாக ₹5,000 வழங்கும் அறிவிப்பை TN அரசு வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை NDA துணை ஜனாதிபதி வேட்பாளர் CP ராதாகிருஷ்ணன் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். இது பற்றி X தளத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா, CP ராதாகிருஷ்ணன் அனுபவமிக்க தலைவர் எனவும் நிர்வாகத் திறன் கொண்டவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். சிபிஆர் தேச நலனுக்காக அளப்பரிய தொண்டாற்றுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.