India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட சீன பூண்டுகள் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் பூண்டு கிலோ ரூ.450- ரூ.600 வரை விற்கப்படுவதால், விலை குறைந்த சீன பூண்டுகளை வாங்கி விற்பனை செய்கிறார்கள். சீன பூண்டுகளில் பூச்சிக் கொல்லி மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுவதாக 2014ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டாஸ்மாக் வருமானத்தை பெருக்குவதில் தான் தமிழக அரசு அக்கறை செலுத்துவதாக ஓபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். பூரண மதுவிலக்கு என வாக்குறுதியளித்துவிட்டு, தற்போது அதற்கு முரணாக செயல்படுவதாக சாடிய அவர், மதுவை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் மட்டுமே திமுக கவனம் செலுத்துகிறது என்றார். மேலும், மதுக்கடைகளின் எண்ணிக்கையை ஆண்டுதோறும் குறைக்க வேண்டும் எனவும் தனது அறிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கெஜ்ரிவால் CM பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. SC விதித்த நிபந்தனைகளின் படி அவர் முதல்வராக தனது கடமையை செய்ய முடியாத நிலையில், எதற்காக அந்த பதவியில் நீடிக்கிறார்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. கலால் முறைகேடு வழக்கில் SC இன்று ஜாமின் வழங்கிய நிலையில், முதல்வர் அலுவலகத்திற்கு செல்லவோ, கோப்புகளில் கையெழுத்திடவோ அவருக்கு SC தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்வி அடைந்துள்ளதாக ராமதாஸ் கூறியுள்ளார். 17 நாட்களில் 18 நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி ரூ.7,616 கோடிக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது ஒப்பீட்டளவில் மிக குறைவு என்றும், ஒப்பந்தம் செய்த நிறுவனங்களில் பெரும்பாலானவை ஏற்கனவே தமிழ்நாட்டில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழலை தமிழகத்தில் உருவாக்க அரசு முயற்சிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது. குரூப் 2 தேர்வு நடத்த ஏதுவாக பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதால், விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இன்று காலை 10 மணிக்கு <<14089466>>பொது அறிவு<<>> பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே 1) போலந்து 2) டாக்டர். ராதாகிருஷ்ணன் 3) மெர்குரி 4) இத்தாலி 5) ஜப்பான் 6) ஜி.வி.மாவ்லங்கர். இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
பெண்கள் பாலியல் மற்றும் குடும்ப வன்முறை குறித்து புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு நேராக செல்ல வேண்டியதில்லை. குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005-ன்படி, பெண்கள் காவல்நிலையத்திற்கு செல்லாமலேயே புகாரளிக்க முடியும். இமெயில் மூலமாகவோ அல்லது பதிவு செய்யப்பட்ட முகவரியிலிருந்து எழுத்து மூலமாகவோ காவல்நிலைய முகவரிக்கு புகார்களைத் தெரிவிக்கலாம்.
தமிழகத்தில் இன்று முதல் 7 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக RMC தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 15 முதல் 19ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் RMC கூறியுள்ளது. SHARE IT
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க லெமன் ஜூஸ் நல்லதுதான். இருப்பினும் அளவுக்கு அதிகமாக லெமன் ஜூஸ் குடிப்பது அழற்சி, நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். ஒரு நாளைக்கு 2-3 கிளாஸ் அளவு வரை மட்டுமே லெமன் ஜூஸ் அருந்த வேண்டும். சிட்ரஸ் பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள கூடாது. செம்பு பாத்திரங்களில் லெமன் ஜூஸை வைத்து குடிக்க கூடாது. லெமன் ஜூஸ் குடித்த பின் வாய்கொப்பளிப்பது பற்களின் ஈறுகளைப் பாதுகாக்கும்.
CPM மூத்த தலைவர் ஜெயராஜனின் 2 ஆண்டுகால இண்டிகோ விமான சபதத்தை சீதாராம் யெச்சூரி முடித்து வைத்துள்ளார். அதாவது, விமானத்தில் தகராறு செய்ததாக, ஜெயராஜனுக்கு 2 வாரங்களுக்கு இண்டிகோ நிறுவனம் தடை விதித்திருந்தது. இதைத் தொடர்ந்து, அந்நிறுவன விமானத்தில் இனி பயணிப்பதில்லை என அவர் சபதமிட்டார். இந்நிலையில், யெச்சூரியின் மறைவு செய்தி அறிந்து, வேறு வழியின்றி அந்நிறுவன விமானத்தில் அவர் டெல்லி சென்றார்.
Sorry, no posts matched your criteria.