India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகளுக்கும், புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க கோரியும் பிரதமர் மோடியை, முதல்வர் ஸ்டாலின் இன்று சந்திக்கவுள்ளார்.
காலை 11 மணி அளவில் பிரதமரை சந்திக்கும் அவர், தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும்படி வலியுறுத்தி, கோரிக்கை மனு ஒன்றை அளிக்க உள்ளார். பிரதமரை சந்தித்து முடித்ததும் நாளை மாலையே முதல்வர் சென்னை திரும்புகிறார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ’வாழை’ திரைப்படம் வரும் அக்டோபர் 11ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியான வாழை திரைப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. மாரி செல்வராஜ் அவரது வாழ்வின் சோகத்தையும், மகிழ்ச்சியையும், பார்த்த அனுபவத்தையும் இப்படத்தின் மூலம் பகிர்ந்திருந்தார். ஓடிடி-யில் பார்க்க யாரெல்லாம் வெயிட்டிங்?
இலங்கையில் இன்று முதல் பழைய விசா நடைமுறை அமலாக உள்ளது. அதன்படி மக்கள் பழைய நடைமுறைப்படி 24 மணி நேரத்திற்குள் விசா பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு முன் VFS என்ற நிறுவனத்திற்கு விசா வழங்கும் வசதி வழங்கப்பட்டதால், வெளிநாட்டினர் விசா பெறுவதில் சிக்கல் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்க அதனை மாற்றியமைத்து உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் இன்று தொடங்க உள்ளது. கடந்த 41 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் கூட இந்தியா தோற்றதில்லை. கடைசியாக 1983இல் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிராக தோல்வியடைந்தது. இதன் பின் நடைபெற்ற 9 டெஸ்டில் 5ல் வெற்றி, 4 போட்டி டிராவில் முடிந்துள்ளது. இந்தியாவின் வெற்றிநடை தொடருமா?
*உண்மையான காதல் ஒருபோதும் மகிழ்ச்சியான முடிவைக் கொண்டிருக்காது, ஏனெனில் உண்மையான காதலுக்கு முடிவே இல்லை.
*முயற்சி செய்பவருக்கு சாத்தியமற்றது என்று எதுவுமில்லை.
*என் உடலை புதைத்து, எந்த நினைவுச்சின்னத்தையும் கட்டாதீர்கள். என் கைகளை வெளியே வைத்திருங்கள், அதனால் உலகத்தையே வென்றவர் இறந்தபோது அவர் கையில் எதுவுமே இல்லை என்று மக்களுக்குத் தெரியட்டும்.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி தர்மபுரி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
▶ குறள் பால்: அறத்துப்பால் ▶ அதிகாரம்: மக்கட்பேறு. ▶ குறள் எண்: 65 ▶ குறள்: மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. ▶ பொருள்: தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்.
காம்தார் நகர் முதல் தெருவுக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை என பெயர் சூட்டிய முதல்வர் ஸ்டாலினுக்கு, இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில், ”என் நண்பன் பாலுவின் நினைவாக, அவன் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு எஸ். பி. பாலசுப்பிரமணியம் சாலை என பெயரை மாற்றி வைத்ததற்காக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, தமிழ்நாடு மக்கள் மற்றும் திரையுலகம் சார்பில் நன்றி” என தெரிவித்துள்ளார்.
▶ செப்.27 (புரட்டாசி 11) ▶வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 – 10:15 AM & 4:45 – 5:45 PM ▶ கெளரி நேரம்: 12:00 AM – 1:00 AM & 6:30 – 7:30 PM ▶ ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶ எமகண்டம்: 3:00 – 4:30 PM ▶ குளிகை: 9:00 AM – 10:30 AM ▶ திதி: நவமி▶ பிறை: தேய்பிறை ▶ சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: மேற்கு ▶ பரிகாரம்: தைலம் ▶ சந்திராஷ்டமம்: மூலம் ▶ நட்சத்திரம் : புனர்பூசம் அ.கா 4.32 வரை ▶ யோகம் : மரண யோகம்.
இன்று (செப். 27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Sorry, no posts matched your criteria.