India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பச்சரிசி, உளுந்து & ஜவ்வரிசி ஒன்றாக ஒரு மணிநேரம் ஊற வைத்து, நீரை வடித்து, வடை மாவு பதத்திற்கு அரைத்து எடுத்து வைக்கவும். பாசிப்பருப்பை மலர வேக வைத்து வடிக்கவும். அத்துடன், கெட்டியான பதத்தில் பனை வெல்லப் பாகு, ஏலக்காய், தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக பூரண உருண்டைகளைப் பிடிக்கவும். இதனை மாவில் தோய்த்து எடுத்து, சூடான எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுத்தால் சுவையான பாசிப்பருப்பு சுழியம் ரெடி.
ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி கிடந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 17ஆம் தேதி சுயிஷா சாவத் என்ற பெண் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லியில் இருந்து நியூயார்க் சென்றார். விமானத்தில் வழங்கப்பட்ட ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், விமான ஊழியர்களிடம் புகார் அளித்தார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.
அமைச்சரவையில் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக, செந்தில்பாலாஜி, கோவி. செழியன், ராஜேந்திரன், ஆவடி நாசர் ஆகிய 4 பேர் உள்ளே வந்துள்ளனர். அதே நேரம், குமரி (மனோ தங்கராஜ்), விருதுநகர் (மஸ்தான்), விழுப்புரம் (KKSSR) ஆகிய மாவட்டங்களில் மக்களின் முகமாக இருந்த 3 பேர் அவுட்டாகியுள்ளனர். இது அடுத்த தேர்தலில் திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தவெகவின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.27-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், இதுகுறித்து கட்சி நிர்வாகிகளிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், “நம் மாநாட்டுக்கு வாருங்கள் என யாருக்கும் அழைப்பு விடுக்க தேவையில்லை. விஜய் முகமே போதும். கூட்டம் தானாக சேரும். கடந்த மக்களவைத் தேர்தலில் 18 வயது நிரம்பிய பலர் ஓட்டு போடவில்லை. விஜய்க்குதான் எங்கள் முதல் ஓட்டு எனக் கூறி அவர்கள் வாக்களிக்கவில்லை” என்றார்.
கடும் எதிர்ப்பு காரணமாக, ‘லட்டு பாவங்கள்’ வீடியோவை பரிதாபங்கள் டீம் நீக்கியது. எனினும், அந்த யூடியூப் சேனல் மீது ஆந்திரா டிஜிபியிடம் தமிழக பாஜக புகார் அளித்தது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய அமர்பிரசாத், “லட்டு பாவங்கள் வீடியோவுக்காக எச். ராஜாவிடம் கோபி மற்றும் சுதாகர் மன்னிப்பு கேட்டனர். ஆதலால், அந்த யூடியூப் சேனல் மீதான புகாரை திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம்” எனக் கூறினார்.
இந்தியாவில் முதன்முதலில் துணை முதல்வராகப் பொறுப்பேற்றவர், பீகாரைச் சேர்ந்த அனுராக் நாராயணன் சின்ஹா. அவர் 1937-1939 வரையிலும், 1946-1952 வரையிலும் பீகாரின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார். ஆந்திராவின் நீலம் சஞ்சீவ ரெட்டி, மேற்கு வங்கத்தின் ஜோதிபாசு, கர்நாடகத்தின் சித்தராமையா, எடியூரப்பா, பீகாரின் சுஷில் குமார் மோடி என பல முக்கிய தலைவர்கள் துணை முதல்வராக பதவி வகித்திருக்கின்றனர்.
➤AUS அணிக்கு எதிரான 4ஆவது ODI போட்டியில், ENG அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ➤BAN அணிக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டார். ➤ மக்காவ் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்தியாவின் திரிஷா – காயத்ரி ஜோடி தோல்வியடைந்தது. ➤ 2024-25 உள்ளூர் கிரிக்கெட் சீசன் முடிவில் ஓய்வு பெறப்போவதாக பாக். நடுவர் அலீம் தார் (56) அறிவித்துள்ளார்.
தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறை துணை முதல்வராக பொறுப்பேற்றவர் ஸ்டாலின் தான். அவருக்கு அடுத்ததாக EPS ஆட்சியில் OPS துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். தற்போது 3ஆவது நபராக உதயநிதி இப்பதவியேற்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் துணை முதல்வர் பொறுப்பு குறித்து வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கேபினட் அமைச்சருக்கு இணையாக மதிக்கப்படக் கூடிய பொறுப்பாக துணை முதல்வர் பதவி இருக்கிறது.
தேர்தல் பத்திரம் என்ற பெயரில் மிரட்டி பணம் வசூலித்ததாக மத்திய சுகாதார அமைச்சரும், பாஜக தலைவருமான ஜெ.பி. நட்டா மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜனாதிகார சங்கர்ஷ பரிஷத் நிர்வாகி ஆதர்ஷ் அய்யர் தொடர்ந்த வழக்கில், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த விவகாரத்தில் <<14220415>>நிர்மலா சீதாராமன்<<>> உள்ளிட்டாேர் மீதும் FIR பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
➤தீவிரவாதத்திற்கு எதிரான போரின் இலக்குகளை அடைய ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவின் கொலை தேவைப்பட்டதென இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ➤கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்குதல் நடத்தும் ICBM ஏவுகணை சோதனையை சீனா நடத்தியது. ➤அமெரிக்காவில் ஏற்பட்ட ஹெலன் புயலில் சிக்கி 56 பேர் உயிரிழந்துள்ளனர். ➤இந்தியாவில் இஸ்லாமிய வெறுப்பின் மிக ஆபத்தான வெளிப்பாடாக இந்து மேலாதிக்கம் தொடங்கியுள்ளதென பாக். அரசு தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.