India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல், கூவத்தூரில் ஊர்ந்து போன கரப்பான் பூச்சியின் பெயரையா வைப்பது என உதயநிதி வினவியுள்ளார். 3 மாதங்களுக்கு முன் பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என இபிஎஸ் சொன்னார். ஆனால், சேலத்தில் ரெய்டு நடந்த மறுநாளே, கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் பேசலாம் என்கிறார். இன்னும் ஒரு ரெய்டு விட்டால் அதிமுகவை பாஜகவுடன் இணைத்துவிடுவார் எனவும் உதயநிதி கலாய்த்துள்ளார்.
தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார். அண்மையில் விக்கிரவாண்டி அல்லது நாகை மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் எனத் தகவல் வெளியானது. இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் ஒரு தொகுதியில் போட்டியிடக் கூடும் என மாவட்ட தலைவர் சிவா கூறியுள்ளார். ஆனால் தவெக தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை தனிப்படை போலீசார் ஹைதராபாத்தில் நேற்று கைது செய்தனர். இன்று அவர் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் நடிகை கஸ்தூரிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர், ’கஸ்தூரியின் கைது பழிவாங்கும் நடவடிக்கை, அவரை மட்டும் தனிப்படை அமைத்து கைது செய்தது உள்நோக்கம் கொண்டது’ என கூறினார்.
IND-AUS இடையிலான முதல் BGT டெஸ்ட் போட்டி வரும் நவ.22ஆம் தேதி பெர்த்தில் தொடங்க உள்ள நிலையில், பயிற்சி போட்டியில் போது பந்து முழங்கையில் பலமாக தாக்கியதில் IND வீரர் கே.எல்.ராகுல் காயமடைந்தார். இந்நிலையில் அவர் காயத்தில் இருந்து மீண்டு பயிற்சி செய்யும் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பயிற்சி போட்டியின் போது ஏற்பட்ட காயத்தால் கில் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என BCCI தெரிவித்துள்ளது.
டெல்லி ஆம் ஆத்மி மூத்த அமைச்சர் கைலாஷ் கெலாட் திடீரென ராஜினாமா செய்துள்ளார். அதேபோல் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் அவர் விலகியுள்ளார். இதுதொடர்பாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கட்சி தோல்வி அடைந்து விட்டதாகவும், மக்களுக்கு சேவை என்பதிலிருந்து விலகி அரசியல் நோக்கங்களுக்கு கட்சி திரும்பி உள்ளதாகவும் சாடியுள்ளார்.
சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்கையில் அதற்கு தனுஷ்தான் காரணமென்று தொடர்ந்து குற்றச்சாட்டு எழுவதுண்டு. இந்நிலையில், திருமண ஆல்பத்தில் “நானும் ரவுடிதான்” படத்தின் வீடியோவை பயன்படுத்திய விவகாரத்தில் தனுஷ் மீது முன்னணி நடிகை நயன்தாரா பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கு தனுஷ் தரப்பில் பதிலோ, விளக்கமோ இன்னும் அளிக்கப்படவில்லை. இதனால் சினிமா வட்டாரத்தில் இதுவும் சர்ச்சையாக மாறியுள்ளது.
தனுஷ்- நயன்தாரா விவகாரம் விவாதப் பொருளாக மாறியிருப்பது திமுகவின் திசைதிருப்பும் வேலை என ADMK நிர்வாகி காயத்ரி ரகுராம் குற்றஞ்சாட்டியுள்ளார். இவர்களின் சண்டை பற்றி பேசுவதுதான் நாட்டிற்கு முக்கிய தேவையா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், PTR சைலண்ட் மோடுக்குச் சென்றதால் மக்கள் திண்டாடுவதாகவும், ஒரு செங்கலை வைத்து உதயநிதி ஏமாற்றிவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
மைசூரை 1902 -1940 வரை ஆட்சி செய்த மகாராஜா 4ஆவது கிருஷ்ணராஜ உடையார் அரண்மனையில் மடப்பா என்ற தலைமை சமையல் கலைஞர் பணியாற்றினார். மன்னனுக்குப் புது இனிப்பை கொடுக்க நினைத்தவர் சர்க்கரை, கடலை மாவு, நெய், ஏலக்காயை சேர்த்து ஒரு இனிப்பை செய்தார். அதை சுவைத்த மன்னன் பெயர் என்னவென கேட்க, நளபாகம் என்றார் மடப்பா. இதனைக் கேட்டு, ராஜ்ஜியத்தின் பெயரையும் சேர்த்து ‘‘மைசூர் பாகு” என மன்னர் பெயர் சூட்டினார்.
Hypersonic ஏவுகணைகள், ராணுவத்தின் தாக்குதல்ளை தொலைதூரங்களிலும் துல்லியமாக நிகழ்த்தும் வல்லமை கொண்டவை. இந்தியா உருவாக்கியுள்ள இந்த missile 1500 கி.மீ தூரம் வரை செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 6,125 km/h வேகத்தில் இருந்து 24,140 km/h வரை வேகமாக செல்லும் இவற்றை கண்டறிவதும், தாக்குவதும் கடினமானது என்கிறார்கள். உலகில் இந்த ஏவுகணை USA, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியாவிடம் மட்டுமே உள்ளன.
1) உலகின் மிகப்பெரிய பவளப்பாறை சாலமன் தீவில் உள்ளது 2) TDS விரிவாக்கம்: Tax Deducted at Source 3) உலக வரலாற்றில் பழமையானதாக கருதப்படும் மரம் – பேரீச்சை மரம் 4) ரத்த அழுத்தத்தை அளக்க உதவும் கருவி – Spygmomano Meter 5) கிளியின் அறிவியல் பெயர் – சிட்டாசிஃபார்ம்ஸ் 6) ‘பரதகண்ட புராதனம்’ என்ற நூலின் ஆசிரியர் ராபர்ட் கால்டுவெல் 7) உலோகங்களின் அரசன் – இரும்பு 8) ரஷ்ய நாணயத்தின் பெயர் – ரூபிள்.
Sorry, no posts matched your criteria.