News May 14, 2024

இபிஎஸ் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

image

இபிஎஸ் மீதான அவதூறு வழக்கு விசாரணை ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின்போது, தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை இபிஎஸ் தெரிவித்தார். இதனை எதிர்த்து தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் இன்று ஆஜரானார். எனினும், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Similar News

News March 17, 2026

சென்னை: போக்சோவில் போலீஸ்காரருக்கு இரட்டை ஆயுள்!

image

ராணிப்பேட்டையைச் சேர்ந்தவர் மகேஷ்(27) புழல் சிறையில் போலீஸாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2020ஆம் ஆண்டு, இவருக்கு முகநூல் மூலமாக 16 வயது சிறுமி பழக்கமானார். அச்சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் உறவு வைத்த மகேஷ், திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால், அச்சிறுமி தீக்குளித்து உயிரிழந்தார். இந்த வழக்கில் மகேஷுக்கு இரட்டை ஆயுள், ரூ.1,10,000 அபராதம் விதித்து நேற்று(மார்ச் 16) நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

News March 17, 2026

நோன்பு: தவெக இடம் மாற்றத்திற்கு காரணம் என்ன?

image

நாளை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொள்கிறார். கடந்த முறை சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக கூட்டம் கூடியதால் நெருக்கடி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் தான் மாமல்லபுரத்தில் இந்த முறை இந்நிகழ்ச்சி மாற்றப்பட்டுள்ளதாக தவெகவினர் கூறுகின்றனர்.

News March 17, 2026

தவெகவுடன் பேரம் பேசும் பாஜக: செல்வப்பெருந்தகை

image

அதிமுக கூட்டணியில் இன்னும் தெளிவான சூழல் இல்லை என செல்வப் பெருந்தகை விமர்சித்துள்ளார். தவெக போன்ற கட்சிகளுடன் திரைமறைவு பேரங்கள் நடப்பதாகத் தெரிவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் பாஜகவின் அவுட் ஆஃப் கண்ட்ரோலில் தமிழகம் இருப்பதை CM ஸ்டாலின் நிரூபித்து வருவதாகவும், தமிழகத்தில் மதவாத சக்திகள் நுழைவதைத் தடுக்க, காங்கிரஸ் களப்பணியாற்றும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!