News September 30, 2025

லண்டனில் காந்தி சிலை அவமதிப்பு

image

லண்டனின் டவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள காந்தி சிலையை அவமதித்ததற்கு அங்குள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இது அகிம்சை மற்றும் காந்தியின் மரபு மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல் என்றும் எதிர்ப்பை X தளத்தில் பதிவு செய்துள்ளது. இந்த வெட்கக்கேடான செயல், காந்தியின் பிறந்தநாளுக்கு 3 நாள்களுக்கு முன்பு நடத்தப்பட்ட நாசவேலை என்றும் கடுமையாக இந்திய தூதரகம் விமர்சித்துள்ளது.

Similar News

News December 9, 2025

இண்டிகோ பிரச்னை எப்போது தீரும்? அமைச்சர் விளக்கம்

image

இண்டிகோ பிரச்னை சீராகி வருவதாக மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். லோக்சபாவில் பேசிய அவர், விமானங்களின் ரத்து, தாமதம் கணிசமாக குறைந்துள்ளதாகவும், விரைவில் நிலைமை முழுவதும் சீராகும் என்றும் குறிப்பிட்டார். விசாரணைக்கு பின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர், ரீபண்ட், பேகேஜ்களை வழங்குவது, பயணிகள் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

News December 9, 2025

விஜய் குறிப்பிட்ட ‘வகையறா’ என்றால் என்ன?

image

தமிழகத்தையும், புதுச்சேரியையும் பிரித்து பார்க்கும் ‘வகையறா’ நாம் அல்ல என விஜய் இன்று பரப்புரையில் பேசியிருந்தார். இந்த வகையறா என்ற சொல், பெருமளவில் தென்மாவட்டங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சமூகம், ஒரு வம்சம், குலதெய்வ வழிபாடு முதலியவற்றின் அடிப்படையில் வகையறா என்ற பெயர் வழங்கப்படுகிறது. மேலும் அகராதியின்படி, வகையறா என்றால் முதலியன, தொடர்புடையவர்கள் என்றும் பொருள்படும்.

News December 9, 2025

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரிய விஜய்

image

மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, விஜய் தனது பரப்புரையை தொடங்கினார். மத்திய அரசுக்கு இருப்பதுபோல் தமிழகம் தனி மாநிலம், புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்ற வேறுபாடு தனக்கு கிடையாது என விஜய் கூறியுள்ளார். மக்கள் சந்திப்பில் பேசிய அவர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி 16-வது முறையாக தீர்மானம் அனுப்பியும், மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என அவர் விமர்சித்தார்.

error: Content is protected !!