News September 30, 2025

சீனா வரை அதிர்வலையை ஏற்படுத்திய கரூர் சம்பவம்

image

கரூரில் பலியானோருக்கு சீனா இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் குவோ ஜியான்குன், பலியானோருக்கு ஆழ்ந்த இரங்கல் எனவும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும் கூறியிருக்கிறார். சீனாவின் இரங்கல் செய்தி மூலம் கரூர் பெரும் துயரச் சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருப்பது அறியமுடிகிறது. இதுகுறித்து உங்கள் கருத்து?

Similar News

News December 12, 2025

Pregnancy Test: ஹாஸ்டலில் மாணவிகளுக்கு கொடுமை!

image

புனே பழங்குடியினர் விடுதியில் நடந்த சம்பவம் பலரையும் அதிரவைத்துள்ளது. விடுதியில் தங்கியிருக்கும் பெண்கள், லீவு முடிந்து வந்தால், கர்ப்ப பரிசோதனை செய்ய விடுதி நிர்வாகிகள் வற்புறுத்தியுள்ளனர். பரிசோதனையை செய்ய மறுத்தால், விடுதிக்குள் அனுமதி மறுக்கப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறும் நிலையில், தற்போதும் இந்நிலை தொடர்வதாக மாணவிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

News December 12, 2025

திருப்பரங்குன்றத்தால் திருப்பம் வரும்: நயினார்

image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வாக்குவங்கிக்காகவே கோர்ட் தீர்ப்பை திமுக மதிக்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். கருத்து கணிப்புகளில் கூட திமுக ஆட்சி மிகவும் பின் தங்கியுள்ளதாக கூறிய அவர், 2026 தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி தான் வெற்றிபெறும் என்று குறிப்பிட்டார். திருப்பரங்குன்றம் விவகாரத்தால், இந்த ஆட்சிக்கே திருப்பம் வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News December 12, 2025

மக்கள் நாயகன் காலமானார்

image

‘பறவை மனிதர்’ என அன்போடு அழைக்கப்பட்ட ஜோசப் சேகர் காலமானார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனது வீட்டின் மொட்டை மாடியில் இவர் அளிக்கும் உணவுக்காகவே தினந்தோறும் ஆயிரக்கணக்கான பறவைகள் குறிப்பாக கிளிகள் தேடி வரத்தொடங்கின. 20 ஆண்டுகளாக இந்த உன்னத பணியை செய்து வந்த அவர், கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்களுக்கும் உணவு அளித்து மக்களின் நாயகன் ஆனார். ஜோசப் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

error: Content is protected !!