News September 29, 2025
லடாக்கில் அமைதி நிலவும் வரை பேச்சுவார்த்தை நடக்காது

லடாக்கில் அமைதி நிலவும் வரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என லே தலைமை கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும், மக்களிடையே நிலவும் பீதி, கோபம், துன்பங்களை களைய மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. அதேபோல், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை விடுவிக்க வேண்டும் என கார்கில் ஜனநாயக கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News September 30, 2025
நோட் பண்ணிக்கோங்க.. நாளை முதல் UPI-ல் இந்த சேவை கட்!

நண்பர் ஒருவரிடம் இருந்து பணம் பெற, UPI-ல் Money Request பண்ணும் ஆப்ஷன் இருந்தது. அதனை நாளை (அக்டோபர் 1) முதல் நீக்குவதாக NPCI தெரிவித்துள்ளது. இது, Phonepe, Google Pay, Paytm என அனைத்து UPI ஆப்களிலும் அமலுக்கு வருகிறது. இந்த சேவை பல இடத்தில் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வந்தாலும் தற்போது அதிகரித்துவரும் பண மோசடிகளை கருத்தில் கொண்டு இத்தகைய முடிவுகளை எடுக்கப்பட்டு உள்ளது.
News September 30, 2025
மூலிகை: ஜாதிக்காயின் மருத்துவ குணங்கள்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள், கரும் தழும்புகள் மீது பூச அவை மறையும் *அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு ஆகியவற்றை பொடி செய்து உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டால், கொப்புளங்கள் தணியும் *நரம்பு தளர்ச்சியை போக்க, ஜாதிக்காய் உதவும் *ஜாதிக்காயின் விதைகளின் மேலுள்ள ‘ஜாதிபத்ரி’ திசு வயிற்றுப் போக்கு, உப்புசம் ஆகியவற்றை போக்கும். SHARE.
News September 30, 2025
அதிமுக ஆட்சியில் EPS Eye மூடியிருந்ததா? அன்பில் மகேஸ்

கரூர் சம்பவத்திற்கு அமைக்கப்பட்ட ஆணையத்தை Eyewash என <<17867314>>EPS விமர்சித்த<<>> நிலையில், அதற்கு அன்பில் மகேஸ் பதிலடி கொடுத்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து விசாரிக்க இதே Rtd நீதிபதி அருணா ஜெகதீசனை நியமித்த போது, EPS Eye மூடியிருந்ததா என கேள்வி எழுப்பினார். ஜெயலலிதா சிறை சென்ற போது, OPS தலைமையில் கண்ணீரோடு பதவியேற்ற உத்தமரா இன்று அழுகையை பற்றிப் பேசுவது எனவும் விமர்சித்துள்ளார்.