News August 31, 2025
டாஸ்மாக் கடைகளில் நாளை முதல் அமலாகிறது

TASMAC கடைகளில் மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் நாளை முதல் அமலாகிறது. வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வீசியெறியும் காலி மது பாட்டில்களால் விலங்குகள் பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க கஸ்டமரிடம் பாட்டிலுக்கு ₹10 கூடுதலாக பெற்று, பாட்டிலை திருப்பி தரும்போது ₹10 ஒப்படைக்கும் திட்டத்தை அரசு அறிவித்தது. இந்நிலையில், இந்த திட்டம் சிவகங்கை, மதுரை, காஞ்சி, திருவள்ளூரில் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
Similar News
News September 4, 2025
தமிழ்நாட்டின் ஆற்றலை எடுத்துரைத்த ஸ்டாலின்

முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சென்றுள்ள CM ஸ்டாலின், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கேதரின்வெஸ்டை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் கல்வி, ஆராய்ச்சி, பசுமை பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டதாக அவர் X தளத்தில் குறிப்பிட்டுள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொழில் நுட்பம், உற்பத்தி உள்ளிட்டவையில், தமிழ்நாடு வலுவாக உள்ளது குறித்து எடுத்துரைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
News September 4, 2025
தமிழக அரசில் 1,794 பணியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. கல்வித்தகுதி: தொழிற்கல்வி. வயதுவரம்பு: 18 – 32. தேர்வு முறை: எழுத்து தேர்வு. சம்பளம்: ₹18,800 – ₹59,900. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.2. தேர்வு நாள்: நவ.16. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News September 4, 2025
சட்டமன்றம், நாடாளுமன்றத்தின் வேலை என்ன? சீமான்

TET தேர்வு, கச்சத்தீவு என எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் தலையிட்டு முடிவெடுக்க வேண்டும் என்றால், சட்டமன்றம், நாடாளுமன்றம் எதற்கு என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களாட்சி என்பது இங்கு சொல்லாட்சியாக மட்டும்தான் உள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். மருத்துவம், ஆசிரியர் உட்பட அனைத்துக்கும் தகுதி தேர்வு உள்ள நிலையில் நாட்டை ஆளும் தலைவர்களுக்கு எந்த தேர்வும் இருப்பது இல்லையே ஏன் எனவும் கேட்டுள்ளார்.