News August 17, 2025
அரசியலுக்கு வர வாய்ப்பு: சோனியா அகர்வால்

விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு பல சினிமா பிரபலங்களின் அரசியல் விருப்பம் வெளிப்பட்டு வருகிறது. அதில் சிலர் தவெகவிலும் இணைந்தனர். அந்த வகையில், அரசியலில் நுழையும் வாய்ப்பு இருப்பதாக சோனியா அகர்வால் தெரிவித்துள்ளார். தவெகவில் இணைவீர்களா எனக் கேட்டதற்கு சிரித்துக் கொண்டே நழுவினார். இருப்பினும், சூழ்நிலையை பொறுத்து முடிவெடுப்பேன் எனவும் அவர் உறுதியளித்தார். சோனியா அரசியலுக்கு வரலாமா?
Similar News
News August 18, 2025
ED-ஆல் முடியாததால் ECI இறங்கியுள்ளது: தேஜஸ்வி

பிஹார் தேர்தலில் வாக்குகளை திருட பாஜக முயற்சிப்பதாக தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார். அமலாக்கத்துறை, CBI, வருமான வரித்துறை தோல்வியை சந்தித்ததால் பாஜக தேர்தல் ஆணையத்தை களமிறக்கிவிட்டுள்ளதாகவும், வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் மூலம் தேர்தல் ஆணையம் வாக்குகளை திருட முயற்சிப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், 65 மக்களின் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News August 18, 2025
ராதாகிருஷ்ணன் என்றால் அர்ப்பணிப்பு: PM மோடி

NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள CP. ராதாகிருஷ்ணனுக்கு PM மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒரு MP-யாகவும், கவர்னராகவும் ராதாகிருஷ்ணனுக்கு அதிக அனுபவம் உள்ளதாகவும், பொது வாழ்வில் அவர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதாகவும் PM கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் NDA அதிக MP-க்களை கொண்டுள்ளதால், ராதாகிருஷ்ணனே துணை ஜனாதிபதி ஆவார் என்றே கூறப்படுகிறது.
News August 18, 2025
மத்திய அரசின் உயரிய பொறுப்புகளில் தமிழர்கள்!

நாட்டின் 2-வது உயரிய பொறுப்பான துணை ஜனாதிபதிக்கான ரேஸில் சி.பி.ராதாகிருஷ்ணனை பாஜக களமிறக்கியுள்ளது. ஏற்கெனவே, மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சராக ஜெய்சங்கர், தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளத்துறை இணையமைச்சராக எல்.முருகன் ஆகியோர் பதவி வகிக்கின்றனர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு(1952–1962) பிறகு தமிழகத்தை சேர்ந்த ஒருவர் துணை ஜனாதிபதியாகும் வாய்ப்பு அமைந்துள்ளது.