News April 6, 2024

அண்டை நாடுகளை இந்தியா ஆக்கிரமிக்காது

image

இந்தியா தனது அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தவோ, ஆக்கிரமிக்கவோ செய்யாது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், அண்டை நாடுகள் தொடர்பாக இந்தியா ஆரம்பம் முதல் ஒரே கொள்கையை கடைபிடித்து வருவதாகவும், அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறினார். அதேநேரத்தில் இந்தியா தனக்கு எதிரான செயல்களை அமைதியாக வேடிக்கை பார்க்காது என்றும் அவர் தெரிவித்தார்.

Similar News

News August 25, 2025

பொது அறிவு வினா- விடை பதில்கள்!

image

காலை 11 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விக்கு <<17510524>>இங்கே <<>>கிளிக் செய்யவும்.
1. மத்திய பிரதேசம்.
2. தொடை எலும்பு (Femur)
3.1982
4. அரசமரம்
5. சாய்னா நேவால் (2012)
எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க?

News August 25, 2025

விஜய் மீது மிக அசிங்கமான தாக்குதல்.. கேட்கவே காது கூசுது

image

ஸ்டாலினை ‘அங்கிள்’ எனக் கூறியதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து, விஜய்யை நடிகைகளுடன் இணைத்து பேசி, திமுக MLA கே.பி.சங்கர் அநாகரிகமாக விமர்சித்துள்ளார். விஜய்க்கு த்ரிஷா கூட போலாமா, கீர்த்தி சுரேஷ் கூட போலாமா என்றுதான் தெரியும். மக்களின் கஷ்ட நஷ்டங்கள் எதுவும் தெரியாது; ஜெயலலிதா போல் ஸ்டாலின் இருந்திருந்தால், துணியை உருவி ஓட விட்டிருப்பார் என்று மோசமாக பேசியுள்ளார்.

News August 25, 2025

ஆம்புலன்ஸ் தாக்குதலுக்கு EPS தான் காரணம்: எழிலன்

image

இபிஎஸ் பொறுப்பின்றி பேசியதால் தான் திருச்சியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அதிமுகவினர் தாக்கியதாக திமுக மருத்துவரணி செயலாளர் எழிலன் தெரிவித்துள்ளார். முதலமைச்சராக இருந்த ஒருவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது காழ்ப்புணர்ச்சியை காட்டுவது எந்த வகையில் நியாயம் என கேட்ட அவர், EPS பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க வந்தவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் தான் ஆம்புலன்ஸ் அங்கு சென்றது எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!