News April 6, 2024
அண்டை நாடுகளை இந்தியா ஆக்கிரமிக்காது

இந்தியா தனது அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தவோ, ஆக்கிரமிக்கவோ செய்யாது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், அண்டை நாடுகள் தொடர்பாக இந்தியா ஆரம்பம் முதல் ஒரே கொள்கையை கடைபிடித்து வருவதாகவும், அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறினார். அதேநேரத்தில் இந்தியா தனக்கு எதிரான செயல்களை அமைதியாக வேடிக்கை பார்க்காது என்றும் அவர் தெரிவித்தார்.
Similar News
News February 22, 2026
BREAKING: தேர்தலில் அபார வெற்றி.. பிரபலங்கள் வாழ்த்து

தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் இன்று காலையில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. ரஜினி, மாரிசெல்வராஜ், மிஷ்கின், விஷால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர். இந்நிலையில், ‘நலம் காக்கும்’ அணி சார்பில் போட்டியிட்ட ஜி.கே மணியின் மகன் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு திரைத்துறையினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
News February 22, 2026
தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் கூட்டணி

தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்தியாவை உள்ளடக்கிய புதிய சர்வதேச கூட்டணியை உருவாக்க உள்ளதாக இஸ்ரேல் PM நெதன்யாகு அறிவித்துள்ளார். தீவிரவாத கொள்கைகளை கொண்ட நாடுகளுக்கு எதிராக, ஒரே சிந்தனை உடைய நாடுகளை ஒருங்கிணைக்க Hexagon of Alliances என்ற புதிய முன்னெடுப்பை இஸ்ரேல் எடுத்துள்ளதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார். பிப்.25-ல் PM மோடி இஸ்ரேல் செல்லும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News February 22, 2026
நீங்கள் சிகரெட் பிடிப்பவரா?

புகை பிடிப்பதால் கேன்சர் வரும் என சிகரெட் அட்டைகளில் போட்டிருந்தாலும், நமது மக்கள் அதில் கவனம் செலுத்த மாட்டார்கள். இருப்பினும் புகை பிடிப்பது எலும்புகளையும் பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எளிமையாக உடையும் அளவிற்கு எலும்பின் வலிமையை புகைப்பழக்கம் குறைப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், எலும்பு உருவாவதற்கு காரணமான ஹார்மோன்களையும் அது சிதைப்பதாகவும் கூறுகின்றனர்.


