News February 3, 2026
வேலூர்: தரம் கெட்ட செயலால் வீரர் பணியிடை நீக்கம்!

லத்தேரி பகுதியை சேர்ந்த தீயணைப்பு வீரர் சசிகுமார் (31). இவர் காட்பாடியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் நெருங்கி பழகி, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்த அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காட்பாடி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சசிகுமாரை கைது செய்தனர். இதை தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேலு சசிகுமாரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டு உள்ளார்.
Similar News
News February 4, 2026
சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்குப் பாராட்டு

வேலூர்: மாவட்ட தனிப்பிரிவில் சிறப்பாக பணியாற்றிய பேர்ணாம்பட்டு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் காட்பாடி தலைமை காவலர் கோபிநாத் ஆகியோரை நlமாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.மயிலுவாகனன் இன்று (04.02.2026) நேரில் அழைத்து பாராட்டி, பண வெகுமதி வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்ற வாழ்த்தினார். உடன் காவல் அதிகாரிகள் இருந்தனர்.
News February 4, 2026
காட்பாடியில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்

வேலூர் மாவட்டம் காட்பாடியில், அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் காட்பாடி தனியார் பல்கலைக்கழகம் பின்புறத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் (SDAT Ground) பிப்ரவரி 5 முதல் பிப்ரவரி 13 வரை (8 நாட்கள்) நடைப்பெற உள்ளது. இதில் இளைஞர்கள் கலந்துகொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 4, 2026
தனியார் பல்கலைக்கழகத்தில் உழவர் சங்கமம் நிகழ்ச்சி

காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நாளை (பிப்ரவரி 05) வேளாண் கல்லூரி சார்பில் உழவர் சங்கமம்-2026 முன்னிட்டு 2-நாள் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமை தாங்குகிறார். இதில் சிறப்பு விருந்தினராக இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் செல்வராஜன் பங்கேற்கிறார் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


