News October 22, 2025

வேலூரில் 4 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி

image

வேலூர்: குடியாத்தம் அடுத்த கூடநகரம் ஏரி 174 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சுமார் 26 மில்லியன் கன அடி தண்ணீர் கொள்ளளவு கொண்டதாகும். தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு கூடநகரம் ஏரி நிரம்பி வழிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பூக்களை தூவி வரவேற்று மகிழ்ந்தனர். மேலும் நீர்வளத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Similar News

News February 14, 2026

வேலூர்: சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு சிறை

image

வேலூர் பொய்கை பகுதியை சேர்ந்த ரமேஷ்(38) தொழிலாளி. இவர் கடந்த 2022ம் ஆண்டு 17 வயது பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வேலூர் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். இவ்வழக்கு வேலூர் கோர்ட்டில் நடந்து வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ராதாகிருஷ்ணன் ரமேஷுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, 2 லட்சம் அபராதம் விதித்து நேற்று (பிப்.13) உத்தரவிட்டார்.

News February 14, 2026

குடியாத்தம் அருகே பயங்கர தீ விபத்து!

image

குடியாத்தம் ஒலக்காசி ரோடு பகுதியில் கோட்டீஸ்வரன் என்பவர் தென்னை நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு நேற்று திடீரென தென்னை நாரில் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தில் நார் தொழிற்சாலையில் இருந்த எந்திரங்கள், தென்னை நார் உள்ளிட்டவை எரிந்து சேதமானது.

News February 14, 2026

வேலூர் மாவட்ட காவல்துறையின் இரவு ரோந்து விவரம்!

image

வேலூரில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே.வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி நேற்று (பிப்-13) இரவு – இன்று காலை வரை ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர்!

error: Content is protected !!