News February 16, 2026
ராணிப்பேட்டை: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது VAO வேலையாகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றால், மாவட்ட நிர்வாகத்திடமும் (04172271000), லஞ்சம் கேட்டாலும் (044-22311049) புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News February 20, 2026
ராணிப்பேட்டையில் அதிர்ச்சி; அடுத்தடுத்து திருட்டு!

ராணிப்பேட்டை, போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் பல்வேறு கடைகள் உள்ளன. இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் தங்களுடைய கடைகளை மூடி விட்டு வியாபாரிகள் வீட்டுக்கு சென்று விட்டனர். காலை கடைகளை திறக்க வந்தபோது, அடுத்தடுத்து 4 கடைகளின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, கடையில் ரூ.50 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் 3 கடைகளில் திருட முயன்றதும் தெரிய வந்தது.
News February 20, 2026
ராணிப்பேட்டைக்கு வந்தது சூப்பர் அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், (பழைய BSNL அலுவலக வளாகம்) இன்று (பிப். 20) காலை 10:00 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ITI, டிப்ளமோ, பி.இ மற்றும் நர்சிங் முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். தனியார் துறையில் வேலை கிடைத்தால் அரசு வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது. விவரங்களுக்கு: 04172-291400 தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க.
News February 20, 2026
ராணிப்பேட்டை போலீசார் அதிரடி!

ஆற்காடை சேர்ந்த வசந்த் (37), 2010-ம் ஆண்டு வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு காணாமல் போனார். பெற்றோர் ஆற்காடு டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மாயமான வசந்த் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அவர் கர்நாடகா போலீசாரிடம் 2025-ல் சரணடைந்தார். இந்நிலையில் நேற்று வசந்தை கியூ பிரிவு போலீசார் ராணிப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


