News March 9, 2026
நாங்குநேரியில் பாதிக்கப்பட்டவருக்கு திமுகவினர் ஆறுதல்

நாங்குநேரியில் 9 பேர் கும்பல் நடத்திய தாக்குதலில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் வெட்டுப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர் சசிகுமார் வீட்டிற்கு திமுக சார்பில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் கிரகாம்பெல் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும் அரசின் சார்பில் வழங்கப்படும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
Similar News
News April 6, 2026
நெல்லை அருகே பரிதாப பலி

பாவூர்சத்திரம் காமராஜ் நகர் வடக்கு பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (78), மரவேலை செய்து வந்தார். இவர் நேற்று (ஏப்.05) தனது சைக்கிளில் கீழப்பாவூரில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி அருகே சென்று கொண்டிருந்த போது மேலப்பாவூர் ஊரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராம்குமார் (19) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென மோதியது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சோமசுந்தரம் பரிதாபமாக உயரிழந்தார்.
News April 6, 2026
நெல்லை: குண்டர் சட்டத்தில் இருவர் கைது

மானூர் சுப்பையாபுரம் பகுதியைச் சேர்ந்த பொன் பாண்டி (20), சத்திரம் புதுக்குளம் சீனிவாச பெருமாள் (21) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் எஸ் பி பிரசன்ன குமார் பரிந்துரைப்படி மாவட்ட கலெக்டர் உத்தரவை அடுத்து இருவரும் நேற்று (ஏப்05) குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
News April 6, 2026
மாவட்ட அளவில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.5) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.


