News February 24, 2026
தென்காசி: உடும்பு வேட்டையில் ஈடுபட்டவர் கைது

தென்காசி மாவட்ட வனத்துறை அலுவலர் ராஜ்மோகன் உத்தரவின் பேரில் வனத்துறையினர் வேட்டையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஆலங்குளம் பகுதியில் உடும்பு வேட்டை நடைபெறுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆலங்குளம் வனத்துறையினர் சோதனைகள் மேற்கொண்டதில் ஐந்தாம்கட்டளை பகுதியை சார்ந்த காசி என்பவர் உடும்பு வேட்டையாடியது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டார்.
Similar News
News February 27, 2026
சங்கரன்கோவிலில் போட்டியிட முன்னாள் MLA விருப்பமனு

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பிப்.20 – மார்ச் 2 வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என திமுக அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் MLA முத்துச்செல்வி விருப்ப மனு அளித்தார்.
News February 27, 2026
சங்கரன்கோவில்: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

திருவேங்கடம் அக்ரஹாரம் தெரு குகன்பாறை கிராமத்தை சேர்ந்தவர் வைரமுத்து (30). இவர் திருவேங்கடத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலையில் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு சங்கரன்கோவில் GH-க்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.
News February 27, 2026
தென்காசி பைக் விபத்தில் ஒருவர் பலி

தென்காசி மாவட்டம், புளியரை பகுதியை சார்ந்த ஓட்டுநர் காளிராஜ். கடந்த 2 தினங்களுக்கு முன்பு செங்கோட்டையிலிருந்து புளியரை நோக்கி பைக்கில் சென்ற பொழுது சாலையில் இருந்த தடுப்பு வேலியில் பைக் எதிர்பாராமல் மோதியதில் பலத்த காயமடைந்தார்.உடனே அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லபட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து போலீசார் விசாரணை.


