News February 14, 2026
குடியாத்தம் அருகே பயங்கர தீ விபத்து!

குடியாத்தம் ஒலக்காசி ரோடு பகுதியில் கோட்டீஸ்வரன் என்பவர் தென்னை நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு நேற்று திடீரென தென்னை நாரில் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தில் நார் தொழிற்சாலையில் இருந்த எந்திரங்கள், தென்னை நார் உள்ளிட்டவை எரிந்து சேதமானது.
Similar News
News February 16, 2026
வேலூர்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

வேலூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு<
News February 16, 2026
வேலூரில் இன்று டாஸ்மாக் அடைப்பு!

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று (பிப்.16) மயானக் கொள்ளை திருவிழா நடைபெற உள்ளது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகள் வீதியுலா நடைபெறும். குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பழைய குற்றவாளிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் வகையில், 16 டாஸ்மாக் கடைகள் மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
News February 16, 2026
வேலூரில் குடிபோதையில் எல்லை மீறிய அட்டூழியம்!

காட்பாடி, சேனூரில் தனியார் பள்ளி அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இந்த பள்ளி எதிரே 5 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி காவலாளி திருமூர்த்தி (55) பள்ளி முன்பு மது அறுத்த வேண்டாம் என எச்சரித்தார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் ராஜாவை சரமாரியாக தாக்கி காலை முறித்து ஆட்டோவில் தப்பி ஓடினர். இது குறித்து விருதம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


