News January 25, 2026
அதிக தொகுதிகளை கேட்பது ஏன்? விஜய பிரபாகரன் விளக்கம்

2026 தேர்தல் நெருங்கிய நிலையில், தேமுதிக இன்னும் கூட்டணியை இறுதி செய்யவில்லை. திமுக, அதிமுக என இரு கட்சிகளிடமும் பேசி வரும் தேமுதிக, அதிக தொகுதிகளை கேட்பதால் கூட்டணி இறுதியாகவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களுக்கான உரிமையையே கூட்டணி கட்சிகளிடம் கேட்பதாகவும், உங்களை ஆட்சியில் அமர வைக்கவே 20-30 தொகுதிகளை கேட்பதாகவும் விஜய பிரபாகரன் விளக்கமளித்துள்ளார். DMDK கேட்கும் தொகுதிகள் கிடைக்குமா?
Similar News
News February 20, 2026
காங்., + விஜய் + விசிக உறுதியாகிவிட்டது: நாஞ்சில்

கூட்டணி ஆட்சி என அறிவித்தும் தவெகவுடன் யாரும் கூட்டணி வைக்க முன்வரவில்லை என விமர்சனங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், இதற்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், தவெகவுடன் காங்கிரஸ் இணைவது உறுதியாகிவிட்டது எனவும், விசிகவும் இணைவார்கள் எனவும் கூறியுள்ளார். மேலும், ஆட்பெரும் சேனையோடு விஜய் அணி திரட்டிக் கொண்டிருக்கிறார் எனவும், அதை எதிர்கொள்ள முடியாமல் திமுக திக்குமுக்காடும் என்றும் கூறியுள்ளார்.
News February 20, 2026
AI பயன்படுத்தினால் மட்டுமே பதவி உயர்வு.. புது ரூல்ஸ்

AI-ஐ பயன்படுத்தினால் குறைத்து மதிப்பிட்ட காலம் எல்லாம் கடந்துவிட்டது. தற்போது AI-ஐ வைத்து வேலை செய்தால் மட்டுமே புரமோஷன் என சொல்லும் அளவுக்கு காலம் மாறிவிட்டது. Accenture நிறுவனம்தான் இதுபோன்ற ஒரு விதியை கொண்டுவந்துள்ளது. அதன்படி, ஊழியர்கள் அன்றாடம் இதை செய்கிறார்களா என்பதை கண்காணிக்க குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், AI தெரியாதவர்கள் வேலையிழக்கும் சூழலும் உருவாகியிருக்கிறது. உங்கள் கருத்து?
News February 20, 2026
வாசனை திறனை இழந்தார் நடிகர் மம்மூட்டி..

நடிகர் மம்மூட்டி நடத்தும் கேர் & ஷேர் இன்டர்நேஷனல் பவுண்டேசனின் 16-வது ஆண்டு விழா கொச்சியில் நடைபெற்றது. இதில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச ‘Cochlear Implant’ திட்டத்தை தொடங்கிவைத்து பேசிய அவர், நீண்ட காலமாக வாசனை திறனை தான் இழந்திருந்ததாக பேசியுள்ளார். தற்போது அதிலிருந்து மீண்டு வருவதாகவும், ஒரு விஷயம் இல்லாமல் போனால்தான் அதன் அருமை தெரிகிறது என்றும் எமோஷனலாக பேசியுள்ளார்.


