News February 27, 2026

அங்கன்வாடி உதவியாளர்கள் ஓய்வூதியம் ₹3,000 ஆக உயர்வு

image

அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் & தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு சிறப்பு ஓய்வூதியத்தை ₹2,000-லிருந்து ₹3,000 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பணி நிறைவின்போது வழங்கப்படும் ஒட்டுமொத்த தொகை ₹1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவோர் உயிரிழக்க நேரிட்டால், இறுதிச் சடங்கு செலவினங்களுக்காக உடனடி நிவாரணமாக ₹20,000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 28, 2026

ஏன் பிப்.28 தேசிய அறிவியல் தினமானது தெரியுமா?

image

1928-ம் ஆண்டு இதே நாளில்தான் இயற்பியலாளர் திருச்சியை சேர்ந்த சர் சி.வி. ராமன், ராமன் விளைவை(Raman Effect) கண்டுபிடித்தார். அவர் ஒளியின் சிதறல் கோட்பாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாளான இன்று(பிப்ரவரி 28) நாடு முழுவதும் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. நாட்டில் அறிவியல் மனப்பான்மை, ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் தினமாக இந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

News February 28, 2026

இபிஎஸ்ஸுக்கு இனி எந்த பிரச்னையும் இல்லை!

image

தொண்டர்களை ஒன்றிணைத்து அதிமுகவை மீட்போம் என்று முழங்கிய சசிகலா, பண்ருட்டி ராமச்சந்திரன் தனி கட்சியை தொடங்கிய நிலையில், ஓபிஎஸ் உள்ளிட்டோர் மாற்றுக்கட்சியில் இணைந்துவிட்டனர். இதனால், அதிமுக கட்சி விதிகளின்படி இவர்களால் எந்தவொரு உரிமையும் கோர முடியாது. இதனால், ‘அதிமுக பொதுச் செயலாளர்’ என்ற பதவிக்கும், அரசியல் ரீதியாகவும் இபிஎஸ்ஸுக்கு இனி எந்த தொந்தரவும் கிடையாது என கூறப்படுகிறது.

News February 28, 2026

விரைவில் கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம்..

image

2025 – 26 அரவை பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு கிரயத் தொகை வழங்க ஏதுவாக ₹86.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சிறப்பு ஊக்கத்தொகை விரைவில் வரவு வைக்கப்படவுள்ளது. 2024 -25 அரவைப் பருவத்தில் கரும்பு டன் ஒன்றுக்கு ₹349 என்ற உயர்த்தப்பட்ட சிறப்பு ஊக்கத்தொகை, 90,652 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருந்தது.

error: Content is protected !!