India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்தியாவில் 7 சீட்களை கொண்ட முதல் SUV EV காரை (XEV 9S) மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வேரியண்ட்களுக்கு ஏற்றவாறு 3 வகையான பேட்டரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காரின் தொடக்கவிலை ₹19.95 லட்சமாகும் (ex-showroom). பாதுகாப்பிற்காக 7 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதிக பேட்டரி திறன் கொண்ட வேரியண்ட் 0 -100 kph வேகத்தை 7 விநாடிகளில் அடையும். 20 நிமிடங்களில் 80% சார்ஜ் ஏறும் வசதியும் உள்ளது.

புயல் எதிரொலியாக நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை(நவ.28) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள <<18406009>>CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.<<>> அதி கனமழையால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு பெற்றோர், மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். விடுமுறை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வாய்ப்புள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயர் இடம்பெறாது என்ற தகவலை ECI விளக்கியுள்ளது. டிச.4-ம் தேதிக்குள் SIR படிவத்தை ஒப்படைக்காத நபர்களின் பெயரும், 3 முறை வீட்டுக்கு சென்றும் படிவத்தை வழங்காதவர்களின் பெயரும் பட்டியலில் இடம்பெறாது என தெரிவித்துள்ளது. அவர்கள் டிச.9 முதல் ஜன.8 வரை Form 6 உடன் உறுதிமொழிப் படிவத்தை கொடுத்து புதிதாக விண்ணப்பிக்கலாம். அதையும் தவறவிட்டால் ஓட்டு போட முடியாது.

பெற்றோர்களே, குழந்தைகள் கேட்கும் அனைத்திற்கும் நீங்கள் ’NO’ என சொன்னால் அது அவர்களை விரக்திக்கு உள்ளாக்கும். இதனால் ’NO’ என சொல்வதற்கு பதிலாக இந்த முறைகளை நீங்கள் கையாளலாம். ➤அவர்கள் கேட்பதை கொடுக்கமுடியவில்லை என்றால், அதற்கு பதிலாக வேறு விஷயத்தை கொடுங்கள் ➤அவர்களது கவனத்தை திசைதிருப்ப முயற்சியுங்கள் ➤’NO’ சொல்வதற்கான காரணத்தை விளக்குங்கள் ➤பொய் கூற வேண்டாம். அனைத்து பெற்றோருக்கும் SHARE IT.

வேலைக்காகவும், படிப்புக்காகவும், தமிழக மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வது அதிகரித்து வருகிறது.
அந்தவகையில், எந்தெந்த நாடுகளில் தமிழர்கள் அதிகமாக வாழ்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? இதற்கான பதிலை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், தமிழர் அதிகம் வாழும் நாடுகள் எதுவென்று, நாம் எதிர்பார்த்ததுதான். பாருங்க, SHARE பண்ணுங்க.

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன், அண்ணா, MGR மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, தவெகவின் முன்னணி தலைவர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர். செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர் விஜய்யுடன் இணைந்துள்ளதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஒரு மாதத்திற்கு நீங்கள் இரவுநேர உணவை 7 மணிக்குள் சாப்பிட்டு பாருங்கள். உங்கள் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இரவு தாமதமாக சாப்பிடுவது, செரிமானம் உள்பட பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. தொடர்ந்து சீக்கிரமாக சாப்பிட்டு வந்தால், உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதை தனுஷ் தவறவிட்டதாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ் கூறிய கதையில் நடிக்க ரஜினி விரும்பியுள்ளார். தனுஷ் நடிப்பில் கவனம் செலுத்தியதால் அப்படத்தின் பணிகள் கைவிடப்பட்டன. சமீபத்தில் <<18291964>>சுந்தர்.சி<<>> விலகலால் ரஜினி தரப்பு மீண்டும் தனுஷை அணுகியுள்ளது. எனினும் உடனடியாக ஷூட்டிங்கை தொடங்க முடிவெடுத்ததால் தனுஷிற்கு பதிலாக ராம்குமாருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

SIR படிவத்தில் உறவினர்கள் பெயர் கட்டாயமில்லை என TN தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். 2002, 2005 வாக்காளர் பட்டியலில் பெயரை கண்டறிய இயலாவிட்டால், பிற விவரங்களை நிரப்பினால் போதும் என்றும் கூறியுள்ளார். மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால், படிவம் 6 உடன் உறுதிமொழியை இணைத்து பட்டியலில் புதிதாக பெயரை சேர்க்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

BSNL தனது வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர்களை அள்ளி வீசி வருகிறது. அந்த வகையில், ₹199-க்கு ரீசார்ஜ் செய்தால், 28 நாள்களுக்கு தினமும் 2GB டேட்டா வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, தினமும் 100 SMS, அன்லிமிடெட் கால்ஸ் உள்ளிட்ட சேவைகளும் இதில் அடங்கும். பிற நெட்வொர்க்குகளில் தினமும் 2GB டேட்டா சேவையை பெற ₹350 வரை செலவிட வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. SHARE IT
Sorry, no posts matched your criteria.