India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வஜித் ஜாய்க்கு எதிராக, அந்நாட்டின் குற்றவியல் தீர்ப்பாயம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. வங்கதேசத்தில் இளைஞர்கள் போராட்டம் வெடித்த போது, இணைய சேவைகளை தடைசெய்த குற்றத்துக்காக இந்நடவடிக்கையை எடுப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக இதே வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, இன்னும் சற்றுநேரத்தில் நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் REPO RATE குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார். 3 நாள்களாக நடைபெற்ற MPC கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அவர் வெளியிட உள்ளார். இதில், ரெப்போ விகிதத்தை 0.25 புள்ளிகள் குறைக்கவும் (அ) 5.5% அளவிலேயே தொடரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ரெப்போ விகிதம் குறைந்தால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும்.

நேற்றிரவு இந்தியாவில் தரையிறங்கிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். பின்னர், விமான நிலையத்தில் இருந்து புடின், தான் வழக்கமாக பயணிக்கும் காரில் ஏறாமல், பிரதமர் மோடி காரில் பயணித்தார். இருவரும் ஒரே காரில் பயணம் செய்தது, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. புடின் வருகை தொடர்பான போட்டோக்களை மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

விமானப்படையில் Flying and Ground Duty பணிகளில் 340 காலிப்பணியிடங்கள் உள்ளன. வயது வரம்பு: 20 – 26 வயது வரை. தகுதி: திருமணம் ஆகாதவர்களாக இருக்க வேண்டும். தொழில்நுட்ப பிரிவில் தரைத்தளப் பணிக்கு பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தேர்வு: உடற்தகுதி, உளவியல் சோதனை, மருத்துவ பரிசோதனை. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.14. விண்ணப்பிக்க இங்கே <

உணவின் தொடக்கம் இந்த மண். பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் நம்பி இருப்பது இந்த மண்ணைதான். ஆனால், நாம் மண் பற்றி சிந்திக்கிறோமா? இல்லை! அதை சிந்திப்பதற்கான நாள்தான் இன்று. குறைந்து வரும் மண்வளம், மாசுபாடு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே உலக மண் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னெடுக்க காரணமாக இருந்த தாய்லாந்து மன்னர் பூமிபாலின் பிறந்தநாளில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

அரை நூற்றாண்டுகளாக தமிழ் சினிமாவில் முக்கிய அங்கமாக விளக்கி வந்த <<18470141>>AVM சரவணன்(86)<<>> நேற்று மறைந்தார். நேற்று நேரில் செல்ல முடியாத திரை பிரபலங்கள் பலரும் இன்று அவரது குடும்பத்தினருக்கு சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில், எரிமேடையில் AVM சரவணன் உடலை பார்த்தபோது, எனக்கான காசோலையில் கையொப்பமிட்ட கையை பார்த்து கண்ணீர் முட்டியது என கவிஞர் வைரமுத்து வேதனையுடன் X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

<<18463810>>திருப்பரங்குன்றத்தில்<<>> தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான சம்பவங்கள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. திமுகவின் லோக்சபா குழு தலைவர் டி.ஆர். பாலு மற்றும் ராஜ்யசபா குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

அம்மா என அதிமுகவினரால் அழைக்கப்படும் ஜெயலலிதா மறைந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனினும், தன்னுடைய மக்கள் பணிகளின் மூலம் அவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மாணாக்கருக்கு இலவச லேப்டாப், அம்மா உணவகம், லாட்டரி சீட்டு ஒழிப்பு, தாலிக்கு தங்கம், அனைத்து மகளிர் காவல் நிலையம் என அவர் செயல்படுத்திய திட்டங்கள் ஏராளம். அவரின் நலதிட்டங்களை நினைவுக்கூர்ந்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லண்டனில் நடக்கும் கிளாசிக் செஸ் தொடரில் முதலிடத்தை பிடித்துள்ளார் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா. மொத்தம் 119 பேர் பங்கேற்ற இந்த போட்டியில், இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா உள்பட பிரனவ் ஆனந்த், இனியன் விளையாடினர். இந்நிலையில், 9 சுற்றுகள் முடிவில் செர்பியாவின் வெலிமிக் ஐவிக், இங்கிலாந்தின் அமீத் காசி, பிரக்ஞானந்தா தலா 7 புள்ளிகளை கொண்டிருந்ததால் மூவரும் முதலிடத்தை பகிர்ந்துகொண்டனர்.

World of Statistics-ன் புதிய தரவரிசை, 2025-ம் ஆண்டில் உலகின் டாப் 10 கவர்ச்சிகரமான உச்சரிப்புகள் பெயரிடப்பட்டுள்ளது. இதில், பல்வேறு நாடுகளின் உச்சரிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாட்டு மக்கள் பேசுவது பிறரை ரசிக்க வைக்குமாம். அவை எந்தெந்த நாடுகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
Sorry, no posts matched your criteria.