India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
RED WINE குறித்து The Journal of Nutrition, Health, Aging என்ற புத்தகத்தில் ஆய்வு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், தினமும் சிறிதளவு RED WINE அருந்துவது உடலில் கெட்ட கொழுப்பை குறைப்பதற்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் RED WINE-ஐ அளவுக்கு அதிகமாக அருந்துவது கொழுப்பை அதிகரிக்கச் செய்து விடும் என்றும், இதனால் இதயத்துக்கு நல்லதல்ல, பாதிப்பு ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹாலிவுட்டின் பிரபல நடிகரும் சண்டை பயிற்சியாளருமான ரிச்சர்ட் நார்ட்டன்(75) காலமானார். ஹாலிவுட்டின் முக்கிய நடிகர்கள், நடிகைகளுக்கு ஸ்டண்ட் பயிற்சி கொடுத்தவர் நார்ட்டன். ஜாக்கி சான், சமோ ஹங், சிந்தியா ரத்ரோக் போன்ற பெரிய தற்காப்பு நடிகர்களுடனும் இவர் திரையில் மல்லுக்கட்டியுள்ளார். The Condemned, Mad Max: Fury Road, Suicide Squad, Furiosa:A Mad Max Saga ஆகியவை இவரது லேட்டஸ்ட் படங்களில் முக்கியமானவை.
திருவண்ணாமலை கிரிவல பாதையில் சாமியார் ஒருவர் நிர்வாணமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தி.மலையில் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் மட்டுமன்றி, வெளிமாநில பக்தர்களும் கிரிவலம் செல்வது வழக்கமாகும். இந்நிலையில் இன்று அங்கு சாமியார் ஒருவர் ஆடையின்றி நிர்வாணமாக சென்றார். இதை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சியான நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவருக்கு புத்தாடை வாங்கி அணிவித்து அனுப்பி வைத்தனர்.
வேலை, பதவி உயர்வு, திருமணம் என பொய் வாக்குறுதி அளித்து, பெண்ணிடம் ஒருவர் உடலுறவு வைத்தால் என்ன தண்டனை என்பது குறித்து BNS சட்டத்தின் 69ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ளது. சட்டப்படி இது குற்றம் என்றும், இக்குற்றத்தில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் எனவும், பிணையில் வெளிவர முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்க.
தமிழகத்தில் நாளை (மார்ச் 31), ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். ஷவ்வால் மாதப் பிறை தென்படாததால், ரம்ஜான் கொண்டாடப்படுமா என்ற சந்தேகம் நிலவி வந்தது. இந்நிலையில், தற்போது அந்தப் பிறை தென்பட்டதால் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மூட்டை அரிசி வாங்குவதை மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இதை வைத்து ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. 26 கிலோ மூட்டையில் கால் கிலோ வரை பிளாஸ்டிக் அரிசியை கலந்து விற்கிறது. வேக வைக்கும் போதும், சுத்தம் செய்யும் போதும் பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடித்து தவிர்த்து விட வேண்டும். இல்லையேல் அதை சாப்பிடும் ஆபத்து உள்ளது. உங்களுக்கு இந்த அனுபவம் உண்டா?
திமுகவுக்கு ஆதரவாக தான் செயல்படுவதாக தவெகவின் ஆதவ் அர்ஜுனா கூறியதற்கு, பதிலளித்துள்ள அண்ணாமலை, திமுகவுக்கு எதிராக பேசி அதிக அவதூறு வழக்குகளை எதிர்கொண்டிருப்பவன் தான் என்றும், சிலரை போல மாமனார் காசில், வாழ்பவனல்ல, லாட்டரி விற்ற காசில் அரசியலுக்கு வந்தவனல்ல என்றார். மேலும், பவருக்காக தான் அரசியலுக்கு வரவில்லை எனவும், மக்களுக்காக தான் வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கிரகங்களின் நகர்வுகளின்படி, வரும் ஏப்ரல் மாதம் 4 ராசிக்காரர்கள் அடித்து தூள் கிளப்பப் போவதாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய ராசிகள்தான் அவை. தொழிலில் சிறந்து விளங்குவீர்கள். பயணம் ஆதாயம் தரும். ஆரோக்கியம் மேம்படும். மன அழுத்தம் குறையும். ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபட இது சரியான நேரம். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
2022 முதல் 2025ம் நிதியாண்டு வரை திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை (ITR-U )தாக்கல் செய்ய IT அவகாசம் அளித்திருந்தது. இந்த அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. நாளைக்குள் தாக்கல் செய்தால், 2022-23க்கு 50% கூடுதல் வரி மற்றும் வட்டி, 2023-24, 2024-25க்கு 25% கூடுதல் வரி மற்றும் வட்டி. அதன்பிறகு தாக்கல் செய்தால் 2024-25 தவிர்த்து அனைத்து கணக்குக்கும் கூடுதலாக 50% வரி மற்றும் வட்டி செலுத்த வேண்டும்.
ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்புக்கு சட்டம் மூலம் உத்தரவாதம் தரப்பட்டுள்ளது. ரயில் பயணத்தின் போது மது அருந்தக் கூடாது, அதேபோல் மது அருந்திவிட்டு இடையூறு செய்யக் கூடாது என்று ரயில்வே சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறும் பயணிகளுக்கு ரயில்வே சட்டத்தின் 145ஆவது பிரிவின்கீழ் அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Sorry, no posts matched your criteria.