India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராமதாஸ் <<17003761>>விமர்சித்து<<>> வந்தாலும், பாமகவின் செயல்பாடுகளில் செளமியா அன்புமணியின் பங்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பாமக மகளிரணி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அவருக்கு, ‘பெண்கள் பாதுகாப்பு திலகம்’ என்ற புதிய பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் மகளிரணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மகளிரை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

தவெக – காங்., கூட்டணி உருவாகுமா என அண்மைக்காலமாக அரசியல் களத்தில் பேசப்பட்டு வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இண்டியா கூட்டணி வலுவாக இருப்பதாக செல்வப் பெருந்தகை கூறியிருந்தார். இந்நிலையில், திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த <<18349738>>5 பேர் கொண்ட குழுவை<<>> காங்., அமைத்துள்ளது. இதன்மூலம், தவெக – காங்கிரஸ் கூட்டணி இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

Kinmemai என்பது ஜப்பானிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஒரு வகை பிரீமியம் அரிசி ஆகும். வழக்கமான அரிசியை விட இதில் அதிக ஊட்டச்சத்து, சுவை இருக்கிறதாம். இதை சமைப்பதற்கு முன் கழுவ வேண்டியதில்லை. இதனால் நேரமும், தண்ணீரும் மிச்சமாகிறது. 1 கிலோ அரிசியின் விலை ₹12,000-க்கு விற்கப்படுவதால் இதை பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். உலகின் காஸ்ட்லியான அரிசி என்ற கின்னஸ் சாதனையையும் இது படைத்துள்ளது.

இந்தியா – பாக்., போரை, சீனா சோதனை களமாக பயன்படுத்தி கொண்டதாக அமெரிக்க அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தங்களது நவீன ஆயுதங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை உலகிற்கு காட்டவும், பிறநாடுகளுக்கு ஆயுதங்களை விற்கவும் போரை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டதாக கூறியுள்ளது. சீனாவின் HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பு, PL-15 ஏவுகணைகள், J-10 போர் விமானங்களை பாக்., போரில் பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளது.

நிரந்தர டிஜிபி நியமிக்கப்படாதது குறித்து EPS விமர்சித்திருந்த நிலையில், பொறுப்பு டிஜிபி குறித்து பேச EPS-க்கு அருகதை இல்லை என்று அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார். பொறுப்பு டிஜிபி என்ற முறையை கொண்டு வந்ததே ADMK தான் என கூறியுள்ள அவர், BJP-க்காகவே திமுகவை EPS குறைசொல்வதாக குறிப்பிட்டார். டிஜிபி மூலம் TN-ல் அதிகாரத்தை கைப்பற்றலாம் என நினைக்கும் பாஜகவின் எண்ணம் எடுபடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

2 நாள்களாக குறைந்த தங்கம் விலை இன்று, ஒரேநாளில் சவரனுக்கு ₹1,360 அதிகரித்து அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த வார வர்த்தக முடிவில், 22 கேரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் ₹11,630-க்கும், 1 சவரன் ₹93,040-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை இந்த வாரம் சரிவை சந்தித்துள்ளது. கிலோவுக்கு ₹3,000 குறைந்து ₹1.72 லட்சத்திற்கு விற்பனையாகி வருகிறது.

2025 உலக குத்துச்சண்டை கோப்பை பதக்கப்பட்டியலில், இந்தியா, 9 தங்கப் பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து வரலாறு படைத்தது. குறிப்பாக, இறுதிப் போட்டியில், பெண்கள் 7 தங்கப் பதக்கங்களை வென்று ஆதிக்கம் செலுத்தினர். இந்த சாதனை, நாட்டில் பெண்கள் விளையாட்டு வளர்ச்சிக்கு பெரிய ஊக்கமாக உள்ளது. மேலே தங்கம் வென்ற பெண்கள் யார் என்று போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

<<18342042>>டெல்லி கார் குண்டுவெடிப்பில்<<>> முக்கிய குற்றவாளியான டாக்டர் முசாமில் ஷகீல், NIA விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்காக கடந்த 2 ஆண்டுகளாக தயாராகி வந்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அம்மோனியம் நைட்ரேட் போன்ற குண்டு தயாரிக்கும் பொருள்கள் மற்றும் ரிமோட்களை வாங்கியதாகவும், இதற்காக ₹26 லட்சத்தை திரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

சில விலங்குகளின் ஆயுள்காலம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. ஆழ்கடல் உயிரினங்கள் முதல் ஆமைகள் வரை, மனிதர்களை விட அதிக ஆயுளைக் கொண்டுள்ளன. அவை, என்னென்ன விலங்குகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

டெட் தேர்வு குறித்து CM ஸ்டாலினுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை செய்தார். ஆசிரியர்கள் அனைவரும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற SC-யின் தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீடு, ஆசிரியர்களின் அச்சம் ஆகியவை குறித்து அவர் எடுத்துரைத்தார். அதற்கு, ஆசிரியர் நலன் காத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரசு எந்த சூழ்நிலையிலும் ஆசிரியர்களை கைவிடாது என்றும் CM உறுதியளித்தார்.
Sorry, no posts matched your criteria.