India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரிய வகை கனிமங்களை காந்தங்களாக மாற்றும் ₹7,280 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. EV வாகனங்கள், பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்பிற்கு இந்த காந்தங்கள் இன்றியமையாததாக உள்ளன. இந்த காந்த உற்பத்தியில் உலகளவில் சீனா முதலிடத்தில் உள்ளது. எனவே, சீனாவை சார்ந்திருப்பதை தவிர்க்கும் வகையில், ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் காந்தங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட உள்ளன.

*56-வது சர்வதேச திரைப்பட விழாவில் WAVES Film Bazaar பிரிவின் கீழ் சிறந்த திரைப்பட அடையாள விருதை ‘ஆக்காட்டி’ திரைப்படம் பெற்றுள்ளது. *விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பூக்கி’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. *பிரதீப் ரங்கநாதனின் ’LIK’ படத்தில் இருந்து நாளை சிங்கிள் ஒன்று வெளியாகிறது. *கார்த்தியின் ‘வா வாத்தியர்’ படத்தின் 2-வது பாடல் வெளியாகி பட்டையை கிளப்பியுள்ளது.

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

திருச்சியில் பிப்ரவரி 7-ம் தேதி நடைபெற உள்ள நாதகவின் மாநாட்டுக்கு உங்கள் பரம்பரையை அழைத்து வர வேண்டும் என தொண்டர்களுக்கு சீமான் அறிவுறுத்தியுள்ளார். மேலும், நடிகனுக்கு தான் கூட்டம் கூடுமா, தற்குறி பயதான் கூடுவானா, தத்துவகாரனுக்கும் கூட்டம் கூடும் என விஜய்யை மறைமுகமாக சாடினார்.234 தொகுதிகளிலும் போட்டியிடும் நாதக தமிழகத்தில் பெரிய கட்சி என்றும் சீமான் கூறியுள்ளார்.

கடந்த 7 மாதங்களில் மட்டும் 30,000 EV கார்களை விற்பனை செய்துள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு கார் விற்கப்பட்டுள்ளதாகவும், தங்களது 65% வாகனங்கள் இந்திய சாலைகளில் ஒவ்வொரு நாளும் பயணிப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும், வரும் 2027-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 250 சார்ஜிங் மையங்களை நிறுவ முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

‘சென்னை 28’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், இயக்குநர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி. பின்னர் ரஜினிகாந்துடன் அவர் நடித்த அனிமேஷன் படம் பாதியில் கைவிடப்பட்டது. தொடர்ந்து அஞ்சாதே, வெண்ணிலா வீடு என பல படங்களில் நடித்த அவர், கடைசியாக ’மிடில் கிளாஸ்’ என்ற படத்தில் நடித்து கவனம் பெற்றார். இந்நிலையில் தனிப்பட்ட வாழ்க்கைச் சூழலுக்காக சினிமாவிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

மழையினால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈட்டை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும் என EPS தெரிவித்துள்ளார். பருவமழைக்கு முன்பாக வாய்க்கால்களை அரசு தூர் வாராததே பயிர்கள் நீரில் மூழ்க காரணம் என்றும் அவர் சாடியுள்ளார். மேலும், அரசின் சார்பாக நெல் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ₹25,000 நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும் என CM ஸ்டாலினை அவர் வலியுறுத்தியுள்ளார்.

*ஆப்பிரிக்க நாடான கினி பிசாவ்வோவில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. *இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 17 பேர் பலி. *ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சார்கோசியின் சிறை தண்டனையை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. *உக்ரைன் விவகாரம் தொடர்பாக டிரம்ப் – புடின் ஆலோசகர்களின் தொலைபேசி அழைப்புகள் லீக்கானது. *பாலஸ்தீனின் மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

செல்போன்களில் 15 இலக்க IMEI நம்பர் உள்ளிட்ட அடையாளங்களை மாற்றுவது ஜாமினில் வெளிவர முடியாத குற்றம் என தொலைத்தொடர்புத் துறை(DoT) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை (அ) ₹50 லட்சம் அபராதம் (அ) இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இது தொடர்பாக செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனை மையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்களும் இந்த விவகாரத்தில் உஷாராக இருங்கள்.

நான் பயிற்சியாளராக நீடிக்க தகுதி உள்ளவனா, இல்லையா என்பதை BCCI தான் முடிவு செய்ய வேண்டும் என கம்பீர் தெரிவித்துள்ளார். இங்கு இந்தியாவின் கிரிக்கெட் தான் முக்கியம், தனிமனிதன் முக்கியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தென்னாப்பிரிக்கா உடனான தோல்விக்கு அனைத்து வீரர்களும் பொறுப்பேற்க வேண்டும்; ஆனால் துரதிர்ஷ்டவசமாக பழி என்னில் இருந்தே தொடங்குகிறது என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.