News November 22, 2025

இனி தனியாரும் அணு மின்சக்தியில் காலூன்றலாம்!

image

வரும் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், 10 புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயர்கல்வி, தேசிய நெடுஞ்சாலை, காப்பீடு என பல துறைகளில் மறுசீரமைப்பு கொண்டு வரப்பட உள்ளது. குறிப்பாக, இதுவரை அரசு மட்டுமே தொடங்கி நடத்தி வந்த அணு மின் நிலையங்களை, இனி தனியாரும் நடத்தும் வகையில் மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

News November 22, 2025

உலக VVIP-கள் கூடும் திருமணம்: யார் இந்த ராமராஜு?

image

டிரம்ப்பின் மகன் உள்ளிட்ட உலக பிரபலங்களே நேரில் வந்து வாழ்த்த, உதய்ப்பூர் பங்களாவில் தடபுடலாக தனது மகளின் திருமணத்தை நடத்துகிறார் தொழிலதிபர் ராமாராஜு. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Ingenus Pharmaceuticals நிறுவனத்தின் தலைவர் தான் ராமராஜு. அமெரிக்க மருத்துவ துறையில் இவர் நன்கு பரிச்சயமானவர். இவரது நிறுவனம் உலகின் பல நாடுகளில் கிளை பரப்பியுள்ளது.

News November 22, 2025

தமிழகத்தின் மூத்த கவிஞர் தமிழன்பன் காலமானார்

image

சாகித்ய அகாடமி விருது வென்ற தமிழகத்தின் மூத்த கவிஞர் தமிழன்பன்(92) காலமானார். மூச்சுத் திணறல் காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உயிர் பிரிந்தது. ஈரோடு சென்னிமலையில் பிறந்த அவர், ஓவியர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர் ஆவார். சென்னை தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ள அவர், தமிழில் எண்ணற்ற கவிதை தொகுப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளார். RIP

News November 22, 2025

கர்ப்பிணிகளுக்கு முற்றிலும் இலவசம்..!

image

பிரசவம் முடிந்து வீட்டிற்கு செல்லும் தாய்மார்களுக்கு தாய்-சேய் நல ஊர்தி சேவை திட்டத்தின் கீழ் இலவச ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கிறது. அரசு ஹாஸ்பிடலில் பிரசவம் பார்த்தால் மட்டுமே இந்த சேவை கிடைக்கும். அந்த மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டத்திற்கு செல்ல சேவை வழங்கப்படாது. இந்த சேவையை பெற, சிகிச்சை முடிந்து வீடு திரும்பும்போது 102 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம். அவசர நேரத்தில் உதவும் SHARE THIS.

News November 22, 2025

TN-ல் சட்டம், ஒழுங்கு சீரழிந்துள்ளது: அன்புமணி

image

சேலத்தில் திமுக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார். ஆளும்கட்சி நிர்வாகியே சுட்டுக்கொலை செய்யப்படும் அளவுக்கு TN-ல் சட்டம், ஒழுங்கு சீரழிந்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து துப்பாக்கி கலாச்சாரம் தலைவிரித்தாடுவதாக கூறியுள்ள அவர், தமிழக மக்களுக்கு என்னதான் பாதுகாப்பு உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.

News November 22, 2025

மல்லிகை விலை ₹4,000ஆக உயர்ந்தது!

image

சங்கரன்கோவில் மலர் சந்தையில் நேற்று ₹1,500-க்கு விற்கப்பட்ட மல்லிப்பூ இன்று(நவ.22) கிலோவுக்கு ₹4,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சபரிமலை சீசன் மற்றும் நாளை முகூர்த்த தினம் என்பதால் தோவாளை, ஆண்டிபட்டி, நிலக்கோட்டை, மதுரை, ஓசூர் உள்ளிட்ட மலர் சந்தைகளிலும், மல்லிகை மட்டுமல்லாமல் கனகாம்பரம், சம்பங்கி, முல்லை, அரளிப்பூ, செண்டுமல்லி, செவ்வந்தி உள்ளிட்ட பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

News November 22, 2025

டாக்டர் Fish பற்றி உங்களுக்கு தெரியுமா?

image

டாக்டர்கள் மட்டுமல்ல, சில சமயங்களில் மீன்கள் கூட நமக்கு சிகிச்சை அளிக்கும். எந்த மீன் என யோசிக்கிறீர்களா? மீன் ஸ்பாக்களுக்கு சென்றால் காலை கடிக்க விடப்படும் Garra rufa மீன்களே அவை. துருக்கியில் வெந்நீரூற்றுகளின் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மீன்களுக்கு பற்கள் கிடையாது. உதடுகள் மூலமே இறந்த செல்கள் மற்றும் ஒட்டுண்ணிகளை உண்ணும். உலகின் பல தோல் நோய்களுக்கு இது மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

News November 22, 2025

தனுஷின் திறமைக்கு ரசிகை: கீர்த்தி சனோன்

image

தனுஷின் திறமைக்கு நான் ரசிகை என கீர்த்தி சனோன் கூறியுள்ளார். பல படங்களை இயக்கியிருப்பதால் காட்சிகள் எப்படி திரையில் வெளிப்படும் என்ற புரிதல் தனுஷுக்கு இருப்பதாகவும், பல நுணுக்கங்களை அறிந்திருக்கும் தனுஷுடன் நடித்ததில் மகிழ்ச்சி எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், நல்ல சீன்களை நடித்து முடித்த பின் இருவரும் ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.

News November 22, 2025

புதிய பிரசாரத்தை முன்னெடுக்கும் சீமான்

image

2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி சீமான் புதிய பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார். நெல்லையில் நேற்று நடந்த கடலம்மா மாநாட்டு மேடைக்கு கையில் ரிமோர்ட்டுடன் சீமான் வந்தார். அப்போது பெரிய திரையில் வீடியோ காட்சிகளுடன் விளக்கி பேசிய அவர், இனிமேல் டிஜிட்டல் முறையிலும் பரப்புரை செய்யப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து, கட்சி நிர்வாகிகளும் டிஜிட்டல் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

News November 22, 2025

கிரிக்கெட் லெஜண்ட் பிரகாஷ் பண்டாரி காலமானார்

image

கிரிக்கெட், கோல்ப் உள்ளிட்ட போட்டிகளில் கலக்கிய லெஜெண்ட் பிரகாஷ் பண்டாரி(90) காலமானார். டெல்லியில் இருந்து டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராவார். 1955-ல் கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்று அசத்தியவர். பல இளம் வீரர்களை உருவாக்கியுள்ளார். அவரது சாதனையை போற்றும் வகையில் இன்று டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் இரங்கல் கூட்டம் நடைபெறவுள்ளது. #RIP

error: Content is protected !!