India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்தியாவில் 28.3 கோடி பேர் கடனில் இருப்பதாக மத்திய இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். லோக்சபாவில் பதிலளித்த அவர், கடந்த 7 ஆண்டுகளில் கடன் வாங்குவோர் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். 2025-ல் மொத்த வீட்டு கடன் ₹15.7 லட்சம் கோடியாக உள்ளது என்று கூறிய அவர், ஒரு நபரின் சராசரி கடன் சுமை ₹3.4 லட்சத்தில் இருந்து, ₹4.8 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தியன் 2, கேம் சேஞ்சர் என தொடர் தோல்வியால் துவண்டுள்ள ஷங்கர், மணிரத்னம் பாணியில் வரலாற்று கதையை தேர்ந்தெடுத்துள்ளார். இதன்படி, ‘வேள்பாரி’ நாவலை படமாக எடுத்து, அடுத்த ஆண்டு வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மெயின் ஹீரோவாக சூர்யா (அ) விக்ரமை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. யார் பொருத்தமாக இருப்பார்கள்?

திருப்பரங்குன்றம் விவகாரத்தில், மேல்முறையீடு என்ற பெயரில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் குற்றம் சாட்டியுள்ளார். தீபம் ஏற்ற அனுமதியளித்திருக்க வேண்டும். ஆனால், சிறுபான்மையினர் ஓட்டுக்காக அனுமதியளிக்கவில்லை. இதை கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை (டிச.7) போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

பக்தியை வைத்து பகை வளர்க்க கூடாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றிய பின், மேலும் 5 இடங்களில் தீபம் ஏற்றுவோம் என்றால் ஏற்க முடியுமா? அதுபோல, திருப்பரங்குன்றத்தில் ஒரு இடத்தில் தீபம் ஏற்றிய பின் இன்னொரு இடத்தில் தீபம் எதற்கு? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக ஆட்சியின்போதும், தீபம் ஏற்றக்கூடாது என்றே அவர்கள் தெரிவித்து வந்ததாக விமர்சித்தார்.

ரயில் பெட்டியின் 5 எண்களில், முதல் 2 எண்கள் ரயில் உருவான ஆண்டை குறிக்கிறது. கடைசி 3 எண்கள், கோச்சை குறிக்கிறது. 001-200: AC கோச், 201-400: 2nd Sleeper, 401-600: ஜெனரல், 601-700: Second Sitting, 701-800: லக்கேஜ், 801+: பேன்ட்ரி, ஜெனரேட்டர் கோச் ஆகும். உதாரணத்திற்கு, ‘08453’ என்றால் 2008-ல் உருவான ரயில், ஜெனரல் பெட்டி என அர்த்தம். மேலே உள்ள Photo எதை குறிக்கிறது என கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.

லாட்டரி மார்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், புதுச்சேரியில் டிச.14-ல் புதிய கட்சியை தொடங்கவுள்ளார். இந்நிலையில், விஜய்யுடன் கூட்டணி சேர தாங்கள் ஒரு முன்னெடுப்பை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு தவெக விரும்பினால் கூட்டணி அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கெனவே, புதுச்சேரியில் உள்ள முக்கிய அரசியல் புள்ளிகளை சார்லஸ் இழுக்க முயற்சித்தபோது, அவர்களில் சிலர் தவெகவில் இணைந்ததாக கூறப்பட்டது.

BSF, CISF, CRPF, ITBP, SSB, SSF உள்ளிட்ட படைப் பிரிவுகளில் காலியாகவுள்ள 25,487 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்பு: 18 – 23. தமிழ் உள்பட 13 பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டு, உடற்தகுதி, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை மூலம் தேர்வு செய்யப்படுவர். சம்பளம்: 21,700 – ₹69,100. விண்ணப்பிக்க விரும்புவோர், இங்கே <

அமமுகவில் இருந்து அடுத்தடுத்து பல நிர்வாகிகள் மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் R.சுரேஷ், அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார். முன்னதாக அமமுகவினர் அதிமுகவில் இணைந்து வருவது குறித்து பேசிய டிடிவி தினகரன், விசுவாசம் இல்லாதவர்கள் கட்சி மாறி வருவதாக சாடியிருந்தார்.

கல்வியால் அனைத்து ஒடுக்குமுறைகளையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர் என CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அன்று அவரை அடக்க நினைத்த அதே ஆதிக்க கூட்டம் இன்று அவரைத் துதிப்பதுபோல நடிப்பதாக கூறிய அவர், இதுதான் அம்பேத்கரின் வெற்றி எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அவரது வாழ்க்கையே ஒரு பாடம் எனவும், அந்த பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய்யின் மெளனம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்நிலையில், ‘ஜோசப் விஜய்’ என்ற அடையாளத்தை வைத்து ஏற்கெனவே பாஜக, விஜய்யை விமர்சிப்பதால், இரு மதங்கள் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் ஏதும் பேச வேண்டாம் என விஜய் எண்ணுவதாக தவெகவினர் கூறுகின்றனர். கோர்ட்டில் இவ்வழக்கு செல்வதை பொறுத்து, விஜய் விரைவில் விரிவான அறிக்கையை வெளியிடுவார் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.