News April 26, 2025

மத்தியஸ்தம் செய்யத் தயார்.. ஈரான் அறிவிப்பு

image

இந்தியாவும், பாகிஸ்தானும் எங்களின் சகோதர நாடுகள் எனத் தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையீது அப்பாஸ் அராச்சி, இரு நாடுகளிடையே பதற்றத்தை தணிக்க மத்தியஸ்தம் செய்யத் தயார் என்றும் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதி நீர் நிறுத்தம், அட்டாரி – வாகா எல்லை மூடல், தூதர்கள் வெளியேற்றம், துப்பாக்கிச்சூடு என இந்தியாவின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் போர் பதற்றம் நிலவுகிறது.

News April 26, 2025

இந்தியா, பாக். துப்பாக்கி சண்டை.. எல்லையில் பதற்றம்

image

இந்தியா, பாக். ராணுவம் இடையே எல்லையில் 2வது நாளாக துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. பஹல்காம் தாக்குதலை பாக். தீவிரவாதிகள் நடத்தியதாக இந்தியா சந்தேகிக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அச்சத்தில் உள்ள பாக், எல்லையில் உள்ள இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.

News April 26, 2025

பாகிஸ்தானுடன் எத்தனை பார்டர் கிராஸிங் உள்ளன?

image

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பெரும் பதற்றம் நிலவுகிறது. உடனடியாக இந்திய அரசு, வாகா – அத்தாரி எல்லையை மூடி உத்தரவிட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே 3 முக்கிய ரோட் பார்டர் கிராஸிங் உள்ளன. ➙வாகா எல்லை ➙கர்தர்பூர் எல்லை ➙கந்தா சிங் வாலா எல்லை ஆகியவை உள்ளன. இதில் கர்தர்பூர் எல்லை இன்னும் சீக்கியர்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

News April 26, 2025

BREAKING: வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1,000 உயர்வு

image

தங்கம் விலை அதிகரித்தபோதிலும், வெள்ளி விலை கடந்த 2 வாரமாக மாறாமல் இருந்தது. 1 கிராம் ரூ.111ஆகவும், 1 கிலோ ரூ.1.11 லட்சமாகவும் விற்கப்பட்டது. இந்நிலையில், வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்தது. கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.112-க்கு விற்கப்படுகிறது. இதேபோல், 1 கிலோ வெள்ளி ரூ.1,000 அதிகரித்து, ரூ.1.12 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. SHARE IT.

News April 26, 2025

ஐசிசி மகளிர் உலகக்கோப்பை.. பாகிஸ்தான் நிலைப்பாடு?

image

செப்டம்பரில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் மகளிர் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என அணியின் ஓபனர் குல் ஃபெரோசா கூறியுள்ளார். இதே கருத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் முன்வைத்திருந்தது. மேலும் பஹல்காம் தாக்குதல் நடைபெற்றுள்ள நிலையில், பொதுவான மைதானங்களிலேயே இரு அணிகளும் பங்கேற்கும் வகையிலான ஹைபிரிட் மாடலின் படியே பாக். அணி தொடர்ந்து விளையாடவுள்ளது.

News April 26, 2025

வெளிப்படையான விசாரணைக்கு தயார்: பாக். PM

image

பஹல்காம் தாக்குதல் குறித்து வெளிப்படையான, நடுநிலையான, நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அனைத்து வகையிலான தீவிரவாதத்திற்கும் எதிராகவே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல் சிந்து நதிநீரை நிறுத்தினால் கடும் பதிலடி கொடுக்கப்படும் எனவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 26, 2025

பிரபல இயக்குநரும், நடிகருமான நாகேந்திரன் காலமானார்!

image

பிரபல இயக்குநர் நடிகர் நாகேந்திரன் காலமானார். இவர் சரோஜா போன்ற படங்களில் நடித்துள்ளார். விமல் நடிப்பில் 2015-ல் வெளிவந்த ‘காவல்’ படத்தின் மூலம் நாகேந்திரன் இயக்குநராக அறிமுகமாகினார். இவர் தற்போது மரணமடைந்துள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிவிட்டுள்ளார். நாகேந்திரனின் மறைவிற்கு திரைத்துறை பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். #RIP.

News April 26, 2025

ஏவுகணை சோதனை: எச்சரிக்கும் பாகிஸ்தான்?

image

இந்தியா INS விக்ராந்தை அரேபியக் கடலில் கராச்சியை நோக்கி நிறுத்தியதை தொடர்ந்து, பாகிஸ்தான் மறைமுக எச்சரிக்கை ஒன்றை கொடுத்துள்ளது. இன்றும், நாளையும் அந்நாட்டு கடற்படை அரேபிய கடலில் ஏவுகணை சோதனை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. அப்போது, விமானங்கள் மற்றும் கப்பல்கள் அப்பகுதிகளில் இருந்து விலகி இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

News April 26, 2025

அமர்நாத் யாத்திரைக்கு பிரச்னை இல்லை: பியூஷ்

image

பஹல்காம் தாக்குதல் பரபரப்புக்கு இடையே அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். காஷ்மீரை அதன் வளர்ச்சி பாதையில் இருந்து யாராலும் ஒருபோதும் தடுக்கவே முடியாது எனவும் அவர் உறுதிபட கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை கோவிலுக்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் புனித பயணம் செல்வது வழக்கம்.

News April 26, 2025

EPFO-ல் வந்த முக்கிய மாற்றம்.. கவனிச்சிக்கோங்க!

image

EPFO-ல் முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக Ministry of Labour and Employment தெரிவித்துள்ளது. அதாவது, ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாறும் போது, இனி ஈசியாக PF கணக்கை மாற்ற முடியும். முன்னர், பணி மாறும் போது Ex- நிறுவனத்திடம் ஒப்புதல் பெற வேண்டும். இனி அந்த சிக்கல் இல்லை. இதற்காக Form-13-ல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தானாகவே, PF கணக்கு, புதிய நிறுவனத்தின் கணக்கிற்கு மாறிவிடும்.

error: Content is protected !!