India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மாதத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, US டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாற்றில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணிகளால், ரூபாயின் மதிப்பு 34 பைசாக்கள் சரிந்து ₹89.79 ஆக உள்ளது. அதேபோல், மும்பை பங்குச்சந்தை 65 புள்ளிகள் சரிந்து 85,642 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை 27 புள்ளிகள் சரிந்து 26,175 புள்ளிகளுடனும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் 10 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று(டிச.1) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

சினிமா பிரபலங்களில் சிலர் வெற்றிகரமான காதல் கதைகளைக் கொண்டிருந்தாலும், சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்துள்ளனர். அவர்கள் வாழ்க்கையில் பல்வேறு திருப்பங்களை கடந்து வந்துள்ளனர். திரைப்படங்களை கடந்து அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையின் பாதையை அவர்களே வடிவமைத்துள்ளனர். அவர்கள் யாரென்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க

EPS பெரிய தலைவர் இல்லை எனவும் அவரது கருத்துக்கு பதிலளிப்பது தேவையற்றது என்றும் செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார். ஏற்கெனவே EPS-க்கு தலைமை பண்பு இல்லை என கூறி வந்த நிலையில், தற்போது அவர் பெரிய தலைவர் இல்லை என சாடியுள்ளார். நேற்று கோபியில் பேசிய EPS, செங்கோட்டையன் <<18433060>>3 ஆண்டுகளாக அதிமுகவிலிருந்தபடி<<>> கட்சிக்கு துரோகம் செய்தார் எனவும், வரும் தேர்தலில் அவர் தோற்பது உறுதி என்றும் EPS எச்சரிதிருந்தார்.

EPS பெரிய தலைவர் இல்லை எனவும் அவரது கருத்துக்கு பதிலளிப்பது தேவையற்றது என்றும் செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார். ஏற்கெனவே EPS-க்கு தலைமை பண்பு இல்லை என கூறி வந்த நிலையில், தற்போது அவர் பெரிய தலைவர் இல்லை என சாடியுள்ளார். நேற்று கோபியில் பேசிய EPS, செங்கோட்டையன் <<18433060>>3 ஆண்டுகளாக அதிமுகவிலிருந்தபடி<<>> கட்சிக்கு துரோகம் செய்தார் எனவும், வரும் தேர்தலில் அவர் தோற்பது உறுதி என்றும் EPS எச்சரிதிருந்தார்.

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வரும் NIA, காஷ்மீரில் 8 இடங்களில் சோதனை நடத்தியுள்ளது. இந்த வழக்கில், ‘White Collor’ (படித்தவர்களே தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது) கும்பலின் மூளையாக செயல்பட்ட வாகே உள்பட 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், புல்வாமா, ஷோபியான் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த கும்பல் தொடர்புடைய இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

சம்பா பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், அதை மேலும் 15 நாள்களுக்கு நீடிக்க வேண்டும் என OPS வலியுறுத்தியுள்ளார். TN-ல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துவருவதால், பயிர் சாகுபடி சான்றிதழ் பெறுவதில் சிரமம் இருப்பதாக விவசாயிகள் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார். அவர்களின் கோரிக்கையில் 100% நியாயம் இருப்பதால் அதனை அரசு பரிசீலிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மோகன்-ஜி-யின் திரௌபதி -2 படத்தில் ‘எம்கோனே’ பாடலை பாடியதற்கு சின்மயி கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் அப்பாடலை பாடியதற்கு சின்மயி மன்னிப்பு கேட்டுள்ளார். ஜிப்ரான் அழைத்ததால் பாடலை பாடியதாகவும், அதை சுற்றியுள்ள விஷயங்களை இப்போதுதான் அறிவதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்பே தெரிந்திருந்தால் கொள்கை முரண் உள்ள அந்த பாடலை பாடியிருக்க மாட்டேன் எனவும் அவர் விளக்கியுள்ளார்.

டிச.5-ம் தேதி புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். ஆனால், அதற்கான அனுமதியை இதுவரை பெற முடியாமல் இருப்பது விஜய் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 முறை மனு அளித்தும் போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, புதுச்சேரி ஐஜி அலுவலகத்தில் அனுமதி கேட்டு புஸ்ஸி ஆனந்த் 3-வது முறையாக மனு அளித்துள்ளார். இன்னும் 4 நாள்களே இருக்கும் நிலையில், அனுமதி கிடைக்குமா?

உ.பி.,யில் சொந்த பந்தங்களின் ஆரவாரத்தில் பூஜா – விஷால் என்ற தம்பதிகளுக்கு நவம்பர் 26-ம் தேதி காலை திருமணம் நடந்துள்ளது. புகுந்த வீட்டுக்கு சென்ற 20 நிமிடத்திலேயே, என்ன காரணம் என கூறாமல் இந்த திருமணம் பிடிக்கவில்லை என பூஜா விடாப்பிடியாக கூறியுள்ளார். ஊராரை கூட்டி, 5 மணி நேரமாக பேசி பார்த்தும் பூஜா மனம் மாறாததால், விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டு, அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார் விஷால்.
Sorry, no posts matched your criteria.