India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சர்வதேச எண்ணெய் சந்தை நிலவரப்படி, மாத தொடக்க நாளான இன்று (டிச.1) கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ₹10.50 குறைந்துள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ₹1,739.50-க்கு விற்கப்படுகிறது. அதேநேரம், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லாமல் ₹868.50-க்கே விற்பனை செய்யப்படுகிறது.

ராஜ்யசபா MP விவகாரத்தில் அதிமுக தேமுதிகவை ஏமாற்றவில்லை என பிரேமலதா கூறியுள்ளார். அதிமுகவிடம் MP பதவியை 2025-ல் கேட்டதாக கூறிய அவர், அதிமுகவில் இருந்து 2026-ல் தருவதாக உறுதியளித்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், MP சீட் விவகாரத்தை அதிமுக ஏமாற்றிவிட்டதாக பேசி வந்த இவர், இப்படி அந்தர் பல்டி அடித்திருப்பது கூட்டணி கணக்குக்கு தானா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவுடன், தொலைபேசியில் பேசியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். உரையாடலின் முழு விவரங்களை வெளியிட மறுத்த டிரம்ப் ‘பேச்சுவார்த்தை நன்றாக நடந்தது என சொல்ல மாட்டேன். அதேநேரம் மோசமாகவும் நடக்கவில்லை. அது ஒரு வெறும் தொலைபேசி அழைப்பு’ என்று மட்டும் கூறியுள்ளார். இதனால் இருநாடுகள் இடையே <<18429070>>போர் பதற்றம்<<>> தொடர்ந்து நீடித்தே வருகிறது.

அதிகப்படியான மது அருந்துவது, கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது போன்றவற்றால் கல்லீரல் கொழுப்பு நோய் (Fatty liver) ஏற்படுகிறது. இதற்கு பப்பாளி மற்றும் அதன் விதைகளை உட்கொள்வது நன்மை பயக்கும். பப்பாளியை தேனுடன் சேர்த்து சாப்பிடுவது பலனளிக்கும். அரைத்த பப்பாளி விதைகளை தண்ணீரில் கரைத்து குடிப்பது, கல்லீரலில் கொழுப்பு சேராமல் தடுக்க உதவும். SHARE பண்ணுங்க.

பல டாப் ஹீரோக்கள் எத்தனை வயதானாலும் சரி, ஹீரோவாகவே நடிப்பர். ஆனால் மம்முட்டி சமீபமாக வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து அசத்தி வருகிறார். ‘களம் காவல்’ படத்தில் வில்லனாக நடிக்கும் அவர், ‘ஹீரோவாக நடிப்பதில் உற்சாகமில்லை, சீனியர், வில்லன் பாத்திரங்களில் தான் நடிப்பு திறமையை காட்ட அதிக வாய்ப்புகள் உள்ளன’ என்று தெரிவித்துள்ளார். ஸ்டார் இமேஜை விட நடிகராக இருப்பதே பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

டிட்வா புயல் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை தொடரும். எனவே, பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் குடை, ரெயின் கோட் போன்றவற்றை எடுத்துச் செல்லவும்.

திமுக கூட்டணியில் மதிமுக மதில் மேல் பூனையாகத்தான் எப்போதும் இருப்பதாக மல்லை சத்யா தெரிவித்துள்ளார். மதிமுகவுடன் பேச்சுவார்தை நடத்தியதை எல்.முருகன் மறைமுகமாக தெரிவித்துள்ளதாக கூறிய அவர், நிச்சயமாக மதிமுக கூட்டணி மாறுவதற்கான சூழல் இருப்பதாக பேசியுள்ளார். மேலும், துரைவைகோ அவ்வளவு பரிசுத்தமானவர் என்றால் MP பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனித்து நின்று தேர்தலை சந்திக்க வேண்டும் என விமர்சித்துள்ளார்.

SA-வுக்கு எதிரான முதல் ODI-யில் சதம் அடித்த கோலி ஆட்டநாயகனாக தேர்வானார். இதன் மூலம், சர்வதேச அளவில் 3 வகை கிரிக்கெட்டிலும் சேர்த்து 70 முறை ஆட்டநாயகன் விருதை அவர் வென்றுள்ளார். ODI-யில் 44 முறை, T20-யில் 16 முறை, டெஸ்டில் 10 முறை ஆட்டநாயகனாக கோலி தேர்வாகியுள்ளார். இந்த பட்டியலில் சச்சின் 76 ஆட்டநாயகன் விருதுகளுடன் முதல் இடத்தில் உள்ளார். கடவுளின் ரெக்கார்டை கிங் முந்துவாரா?

நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு, டிச.1-ம் தேதி (இன்று) நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து, அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும். இந்த விடுமுறையை ஈடு செய்ய டிச.13-ம் தேதி பணி நாளாக இருக்கும். மேலும், மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டின் கடைசி மாதம் வந்தாச்சு. இந்த 11 மாதம் உங்களின் வாழ்க்கையை ஒருமுறை திரும்பி பாருங்கள். நடந்த நல்ல விஷயங்களுக்கு நன்றி சொல்லுங்கள். என்ன தவறிழைத்தீர்கள், எதில் முன்னேற்றம் காண வேண்டும் என கவனியுங்கள். ஒரு வருடம் வீணாகிவிட்டதே என வருந்த வேண்டாம். 2025-ன் கடைசி பக்கத்தை எப்படி முடிக்க வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். முடிவெடுங்கள்.. செயலில் இறங்குங்கள். ஹேப்பி டிசம்பர்!
Sorry, no posts matched your criteria.