News April 2, 2025

விண்வெளியில் ஆல்கஹால் மேகம்: சரக்குமழை பொழியுமா?

image

விண்வெளியில் பல ஆச்சரியங்கள் உள்ளன. அக்விலா விண்மீன் தொகுப்பில் 10,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஆல்கஹால் மேகம் இருக்கிறதாம். 400 குவிண்டிலியன் லிட்டர் மெத்தில் ஆல்கஹாலை கொண்டுள்ள இது, சூரிய மண்டலத்தை விட 1,000 மடங்கு பெரியது. பூமியில் உள்ள ஒவ்வொருவரும் தினமும் 3 லட்சம் லிட்டர் குடித்தாலும் அதனை காலி செய்ய 1 பில்லியன் ஆண்டுகளாகும். பூமியில் இருந்து தொலைவில் இருப்பதால் சரக்கு மழை பொழிய வாய்ப்பில்லை.

News April 2, 2025

உல்லாச வாழ்க்கை.. தலையில் கல்லை போட்டு கொலை

image

சென்னை அனகாபுத்தூரில் பாக்யலட்சுமி (33) என்பவர் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையான பாக்யலட்சுமிக்கு முதல் திருமணம் நடைபெற்று 2 குழந்தைகள் உள்ளன. கணவரைப் பிரிந்து தற்போது ஞான சித்தன் என்பவருடன் வசித்து வந்த நிலையில், அவர் வேறொரு நபருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஞான சித்தன், பாக்யலட்சுமியை கொன்றுவிட்டு போலீசில் சரண் அடைந்துள்ளார்.

News April 2, 2025

‘அர்ஜுன் ரெட்டி’ நடிகையிடம் அத்துமீறிய இயக்குநர்

image

அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த ஷாலினி பாண்டே, 22 வயதில் தனக்கு நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். தெலுங்கு பட ஷூட்டிங்கின்போது கேரவனில் உடை மாற்றிக் கொண்டிருந்த நேரத்தில், கதவை தட்டாமல் இயக்குநர் உள்ளே நுழைந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். கோபத்தில் அந்த இயக்குநரை வெளியே போகச் சொல்லி, தான் கத்தியதாகவும் ஷாலினி பாண்டே தெரிவித்துள்ளார். எந்த இயக்குநராக இருக்கும்?

News April 2, 2025

கோடை விடுமுறை.. விமான பயணிகளுக்கு குட் நியூஸ்

image

கோடை விடுமுறையை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து 206 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. பயணிகளின் கூட்டத்தை சமாளிக்க கோடை காலம் முழுவதும் 42 சர்வதேச, விமானங்கள், 164 உள்நாட்டு விமானங்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை 50,000த்தில் இருந்து 60,000ஆக அதிகரித்துள்ளதால் விமான சேவைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

News April 2, 2025

அப்பாவான ரெடின் கிங்ஸ்லி!

image

பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி – நடிகை சங்கீதா ஆகியோருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023ஆம் ஆண்டு இத்தம்பதிகள் காதலித்து பெரியோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அண்மையில் சங்கீதாவுக்கு நடந்த வளைகாப்பு போட்டோஸ் வைரலானது.

News April 2, 2025

காதல் விவகாரத்தால் கல்லூரி மாணவி ஆணவக்கொலை

image

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வித்யா என்ற கல்லூரி மாணவி வீட்டில் பீரோ விழுந்ததால் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால் அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காதலன் வெண்மணி அளித்த புகரின் பேரில் மாணவியின் உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் காவல்துறை நடத்திய விசாரணையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணனே தங்கையை ஆணவக்கொலை செய்தது அம்பலமாகி உள்ளது.

News April 2, 2025

ட்ரம்புக்கு எதிராக 25 மணி நேரம் பேசிய எம்.பி.

image

அமெரிக்க செனட் சபையில் அதிபர் டிரம்புக்கு எதிராக ஜனநாயக கட்சி எம்.பி. கோரி புக்கர் 25 நேரம் பேசி அரங்கத்தை அதிர வைத்தார். டிரம்பின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக அதிரடியான கருத்துகளை அவர் முன் வைத்தார். செனட் சபை வரலாற்றில் அதிக நேரம் பேசிய ஸ்ட்ரோம் தர்மண்ட் சாதனையை கோரி முறியடித்துள்ளார். 1957ல் செனட் சபையில் 24 மணி நேரம் 18 நிமிடங்கள் ஸ்ட்ரோம் பேசியிருந்தார்.

News April 2, 2025

காய்கறிகளின் விலை உயர்வு

image

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. ₹12க்கு விற்கப்பட்ட ஒரு தக்காளி தற்போது ₹24க்கும், வெங்காயம் ₹5 உயர்ந்து ₹25க்கும், உதகை கேரட் ₹15 உயர்ந்து ₹50க்கும், பீன்ஸ் ₹20 உயர்ந்து ₹100க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், அவரைக்காய், சுரைக்காய் உள்ளிட்டவைகளின் விலையும் உயர்ந்துள்ளது. மாநில முழுவதும் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்ட மறுநாளே விலையும் அதிகரித்துள்ளது.

News April 2, 2025

கச்சத்தீவை பெற இன்று தனித் தீர்மானம்

image

கச்சத்தீவை திரும்பப் பெற அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வலியுறுத்தி, சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். இலங்கை கடற்படையால் மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்கிட கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக அமையும் என்றும், இலங்கை செல்லும் பிரதமர் மோடி, மீனவர் பிரச்னை குறித்து அந்நாட்டு அரசுடன் பேச வேண்டும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News April 2, 2025

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி காலமானார்!

image

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தியான நிலம்பென் பாரிக் (92) காலமானார். மகாத்மா காந்தியின் மகன் ஹரிதாஸ் காந்தியின் பேத்தி இவர். குஜராத்தில் வசித்து வந்த இவர், பழங்குடியின பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்தார். காந்திக்கும் அவரின் மூத்த மகனுக்கும் இடையே இருந்த சிக்கலான உறவு குறித்து இவர் எழுதிய ‘காந்தி’ஸ் லாஸ்ட் ஜிவெல்: ஹிராலால் காந்தி’ மிக பிரபலம். RIP நிலம்பென் பாரிக்.

error: Content is protected !!