News December 4, 2025

அநாகரிக அரசியல் எப்போது நிறுத்தப்படும்? அண்ணாமலை

image

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற போலீசார் மறுத்துவருவதால் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. இதனிடையே தமிழக மக்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்தும் தங்கள் அநாகரிக அரசியல் நாடகங்களை DMK எப்போது நிறுத்தப் போகிறது என அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இனியாவது கோர்ட்டின் உத்தரவை மதிப்பார்களா, அல்லது தங்கள் வழக்கமான பிரிவினை நாடகங்களை தொடர போகிறார்களா எனவும் கேட்டுள்ளார்.

News December 4, 2025

புடின் விமானத்தின் பிரமிக்க வைக்கும் அம்சங்கள்

image

ரஷ்ய அதிபருக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது தான் ‘Flying Kremlin’ விமானம். இதில் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு, ரேடார் – ஜாமிங் டெக்னாலஜி, வானில் இருந்தபடியே அணு ஆயுத தாக்குதல்களுக்கான உத்தரவு பிறப்பிக்கும் கட்டளை மையம் என பல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஜிம், பெட்ரூம், சமையலறை என Kremlin மாளிகையில் இருப்பதை போன்ற சொகுசு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

News December 4, 2025

வீட்டில் இருந்தே செய்யலாம்.. தமிழக அரசு அறிவிப்பு

image

இனி பத்திரப்பதிவு செய்வதற்காக சார்பதிவாளர் அலுவலகங்களில் காத்திருக்க தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்வதற்கு ‘ஸ்டார் 3.0’ திட்டம் மூலம் புதிய மென்பொருளை அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த புதிய முறையில், சொத்து வாங்குவோர், விற்போர் அவர்களின் விவரங்களை உள்ளிட்ட பிறகு OTP வரும். இதனை பதிவு செய்த பிறகு விரல் ரேகையை பதிவு செய்து பத்திரத்தை பதிவு செய்துகொள்ளலாம். SHARE IT.

News December 4, 2025

BREAKING: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த TN அரசு

image

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் இன்று இரவு 10:30 மணிக்குள் தீபத்தை ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், இப்போது SC-யில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 4, 2025

அரசு அனுமதி மறுப்பது ஏன்? அமைச்சர் விளக்கம்

image

திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தில் தீபத்தை ஏற்றினால் போதும் என 2014-ல் வழங்கப்பட்ட தீர்ப்பையே தமிழக அரசு பின்பற்றுவதாக அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார். ஆனால் பிரச்னையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், இந்துத்துவா அமைப்புக்கள் செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அதேநேரம் தமிழக அரசு எப்போதும் சட்டத்தின்படியே நடக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

News December 4, 2025

CINEMA 360°: ₹100 கோடி வசூலை தாண்டிய தனுஷ் படம்

image

*விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘கொம்புசீவி’ படத்தின் 2-வது பாடல் வெளியாகியுள்ளது. * தனுஷின் ‘தேரே இஷ்க் மே’ படம் உலகளவில் ₹100 கோடியை தாண்டி வசூலித்துள்ளது. *பிரபுதேவா நடிக்கும் ‘மூன்வாக்’ படத்தில் 5 பாடல்களை ஏ.ஆர். ரகுமான் பாடியுள்ளார். *ஐஸ்வர்யா ராஜேஷின் PAN இந்தியா படத்திற்கு ‘ஓ சுகுமாரி’ என பெயரிடப்பட்டுள்ளது.

News December 4, 2025

அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. அறிவித்தது அரசு

image

பள்ளிகளுக்கு 12 நாள்கள் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிச.10 முதல் 23-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதையடுத்து, டிச.24 முதல் ஜன.4 வரை மாணவர்களுக்கு லீவுதான். இதில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளும் அடங்கும். மொத்தமாக 12 நாள்கள் விடுமுறை கிடைப்பதால் அதனை கொண்டாட முன்கூட்டியே திட்டமிடுங்கள். வெளியூர் செல்ல அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. SHARE IT.

News December 4, 2025

ஆறுகள் இல்லாத நாடுகள்

image

ஆறுகள் இல்லாமல் நாடுகளா? என்ன வியப்பாக இருக்கிறதா? ஆம், பல நாடுகளில் ஆறுகள் என்பதே கிடையாது. பெரும்பாலும் பருவகால ஆறுகள் மட்டுமே உள்ளன. அதாவது, மழைக்காலங்களில் நிரம்பும் ஓடைகள். எந்தெந்த நாடுகளில் நிரந்தரமான ஆறுகள் கிடையாது என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News December 4, 2025

திருப்பரங்குன்றத்தில் இன்று தீபம் ஏற்றப்படுமா?

image

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் இன்று இரவு 10:30-க்குள் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் 2-வது முறையாக போலீசார் தீபம் ஏற்ற மனுதாரருக்கு அனுமதி அளிக்கவில்லை. அரசு தரப்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் அனுமதிக்க முடியாது என போலீசார் தெரிவித்துள்ளனர். மலைக்கு செல்ல முயன்ற பாஜக, இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்தி கைது செய்ததால் பதற்றம் நீடிக்கிறது.

News December 4, 2025

குழப்பத்துக்கு காரணம் DMK கைக்கூலிகள்: அன்புமணி

image

பாமகவில் இப்போது எந்த குழப்பமும் இல்லை என அன்புமணி தெரிவித்துள்ளார். திமுகவின் கைக்கூலிகள் பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்ததாகவும், அது முற்றிலுமாக முறியடிக்கப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார். இன்னும் ஒருசில வாரங்களில் தமிழகத்தில் மெகா கூட்டணி அமையும் என்றும் அதில் பாஜக இடம்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!