India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாலியல் குற்றவாளி <<18327094>>எப்ஸ்டீன்<<>> தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வெளியிடும் சட்டத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். இந்த விவகாரத்தில் டிரம்ப், மஸ்க், கிளிண்டன் உள்பட பலரும் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், சட்டம் போட்டு டிரம்ப் சிக்கலில் மாட்டிக்கொண்டாரா என கேள்வி எழுந்துள்ளது. அதேநேரம் சட்டத்தின் Loop holes-ஐ கொண்டு முழு ஆவணங்களையும் வெளியிடாமல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கோவைக்கு PM மோடி வந்து சென்ற ஈரம் காய்வதற்குள், நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்து, மத்திய பாஜக அரசு அடுத்த துரோகத்தை செய்துள்ளதாக CM ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்த தனது X பதிவில், கனமழையால் ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் அழுகுரல் ஏன் PM-க்கு கேட்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகை சோனம் கபூர் தான் மீண்டும் கர்ப்பமடைந்ததை போட்டோ ஷூட் நடத்தி மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். பிங்க் நிற ஆடையில், கூலிங் கிளாஸுடன் கூலாக போஸ் கொடுத்த அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். நீண்ட நாள் காதலரான தொழிலதிபர் அகுஜாவை 2018-ல் திருமண செய்த நடிகை சோனம் கபூருக்கு 2022-ல் அழகான ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. சோனம் கபூரை நாமும் வாழ்த்தலாமே!

தான் தொடங்கியுள்ள புதிய கட்சிக்கு ’திராவிட வெற்றிக் கழகம்’ என பெயர் வைத்துள்ளார் மல்லை சத்யா. இந்த பெயரை எங்கோ கேட்டதுபோல இருக்கிறதே என சற்று ரீவைண்ட் செய்து பார்த்தபோது ஒன்று புலப்பட்டது. சமீபத்தில் பிக்பாஸ் அபிராமி ‘திராவிட வெற்றிக் கழகம்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். கொடியை டிகோட் செய்த நெட்டிசன்கள், ‘இதையா 15 நாள்களாக குழு அமைத்து முடிவு செய்தார்’ என கமெண்ட் அடிக்கின்றனர்.

PM மோடியின் பொருளாதார, கலாச்சார சிந்தனைகளை காங்கிரஸ் MP சசிதரூர் சமீபத்தில் பாராட்டி இருந்தார். இது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தான் சார்ந்த கட்சியின் கொள்கைகளை விட, இன்னொரு கட்சியின் கொள்கைகள் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுகிறது என நினைத்தால், அவர் ஏன் பாஜகவில் சேரக்கூடாது என காங்கிரஸ் MP சந்தீப் தீக்ஷித் கேள்வியெழுப்பியுள்ளார்.

தென் தமிழகம் மற்றும் காவிரி படுகையில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை தொடரும் என IMD தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை தொடர்கிறது. நாளை(நவ.21) நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. குடையை ரெடியா வையுங்கள் மக்களே..!

2000-ல் பிரிக்கப்படாத பிஹார் தேர்தலில் 324 இடங்களில் லாலுவின் கூட்டணி 159 தொகுதிகளில் வென்றிருந்தது. மறுபக்கம், நிதிஷ் இடம்பெற்ற NDA கூட்டணி 151-ஐ வென்றது. ஆனால் இரு கூட்டணிகளும் மெஜாரிட்டியை(163) பிடிக்கவில்லை. இருப்பினும், நிதிஷ் குமாரை CM ஆக்கினார் கவர்னர் வினோத். அதன்பிறகு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், 7 நாள்களில் CM பதவியை நிதிஷ் ராஜினாமா செய்தார்.

PM கிசான் திட்டத்தின் 21-வது தவணையான ₹2000-ஐ விவசாயிகளுக்கு நேற்று PM மோடி விடுவித்தார். ஆனாலும், சில விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே இத்திட்டத்தில் இணைந்து பணம் வராமல் இருந்தால் 1800-180-1551 எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். அல்லது <

ரொனால்டோவை வெள்ளை மாளிகைக்கு அழைத்து டிரம்ப் தங்க சாவியை பரிசளித்தார். சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், FIFA தலைவர் கியானி இன்ஃபான்டினோ ஆகியோருடன் டிரம்ப் ஏற்பாடு செய்திருந்த விருந்திலும் ரொனால்டோ கலந்து கொண்டார். ரொனால்டோ வெள்ளை மாளிகைக்கு வந்தது மகிழ்ச்சி எனவும், தனது மகன் அவரது தீவிர ரசிகன் என்றும் டிரம்ப் தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து ரொனால்டோ நன்றி தெரிவித்துள்ளார்.

மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா திராவிட வெற்றிக் கழகம்(DVK) என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மதிமுகவில் துணைப் பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யா, வைகோவுக்கு அடுத்த நிலையிலிருந்து கட்சியை வழிநடத்தினார். கருப்பு, சிவப்பு வண்ணத்துடன் கூடிய கட்சியின் கொடி அறிமுக விழாவில் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.