News February 24, 2025
₹1000 மகளிர் உரிமைத் தொகை.. தகுதியான பயனாளிகள் நீக்கம்?

மகளிர் உரிமைத்தொகை பெற்றுவந்த தகுதியான பயனாளிகள், திடீரென நீக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அதிக வருமானம் பெறுவோர் போன்ற தகுதியில்லாதோர், இறந்தோரின் பெயர்கள் அவ்வப்போது நீக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. எனினும், தகுதியானவர்களுக்கு நிறுத்தப்பட்டது ஏனென்று கேள்வி எழுப்பும் பாதிக்கப்பட்டோர், கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அலைந்தும், காரணத்தையும் அதிகாரிகள் தெரிவிப்பதில்லை என்றும் கூறுகின்றனர்.
Similar News
News February 25, 2025
PF பயனாளர்களுக்கு அதிக வட்டி?

PF சந்தாதாரர்களுக்கு இந்த வாரம் இனிப்பான செய்தி ஒன்று வெளியாகவிருக்கிறது. நடப்பு நிதியாண்டுக்கான PF வட்டி எவ்வளவு வழங்கலாம் என்று மத்திய அரசு ஆலோசனையில் ஈடுபடவுள்ளது. கடந்த ஆண்டு அதிக வட்டியான 8.25% வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டும் அதே அளவு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டில், முதலீடு செய்யப்பட்ட PF தொகை அதிக லாபம் கொடுத்திருப்பதால் அதிக வட்டிக்கு வாய்ப்புண்டு.
News February 25, 2025
100 நாள் வேலை: நிதி வந்தவுடன் வங்கிக் கணக்கில் ஊதியம் வரவு

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி வலியுறுத்தியுள்ளார். 100 நாள் வேலையில் 86% பெண்களும், 27% தாழ்த்தப்பட்ட சமுதாயனத்தினரும் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், பயனாளிகளுக்கான ஊதிய நிலுவை ₹2,400 கோடியை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டார். மத்திய அரசு நிதியை விடுவித்ததும் உடனடியாக அவர்களுக்கு அத்தொகை வரவு வைக்கப்படும் என்று உறுதியளித்தார்.
News February 25, 2025
மகளிர் பிரிமீயர் லீக்: சூப்பர் ஓவரில் உ.பி. வாரியர்ஸ் வெற்றி

மகளிர் பிரிமீயர் லீக் டி20 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில், உ.பி. வாரியர்ஸ் சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய பெங்களூரு 180/6 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் எல்லிஸ் பெர்ரி 90 ரன்கள் குவித்தார். தொடர்ந்து விளையாடிய உ.பி. வாரியர்ஸ் 180 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் ஓவரில் உ.பி வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.