News March 18, 2024
காலையில் டீ, காபிக்கு பதில் இதை அருந்தலாம்

காலையில் டீ, காபிக்கு பதிலாக மோரில் இஞ்சி, கருமிளகு, சீரகம் போன்றவற்றை சேர்த்து அருந்தலாம். ஒரு கிளாஸ் மோர் அருந்துவது சூட்டை தணித்து உடலை வறண்ட நிலையில் இருந்து பாதுகாக்கிறது. வெண்ணெய் நீக்கப்பட்ட தயிரில் மோர் தயாரிப்பது நல்லது. மோர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வாயுப்பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
Similar News
News October 15, 2025
BREAKING: TVK மாவட்ட செயலாளர் ஜாமின் தள்ளுபடி

கரூரில் விஜய் பிரசாரம் நடைபெற்றபோது ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு இடையூறு செய்ததாக. தவெக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து ஜாமின் கேட்டு அவர் கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஏற்கெனவே கரூர் மாவட்ட செயலாளர் மதியழகனின் ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
News October 15, 2025
தண்ணீர் குடிக்காவிட்டால் தலைவலி ஏற்படுமா?

அன்றாடம் போதுமான அளவு தண்ணீர் குடிக்க தவறினால் நமக்கு தலைவலி ஏற்படும் என்பது உண்மையா? ஆம். நம் உடலில் நீரிழப்பு ஏற்பட்டால் தலைவலி ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் மூளை சுருங்குவதோடு, நரம்புகளில் அழுத்தம் உண்டாகி சோர்வு, தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் ஏற்படும். எனவே, அன்றாடம் சராசரியாக 3 லிட்டர் தண்ணீர் மற்றும் ஜூஸ் உள்ளிட்ட நீர்ச்சத்து நிறைந்த பானங்களை அருந்தலாம்.
News October 15, 2025
தீபாவளிக்கு 4 நாள்கள் விடுமுறையா? வந்தது அப்டேட்

தீபாவளி பண்டிகைக்கு மேலும் ஒருநாள்(அக்.21) விடுமுறைவிட அரசு பரிசீலனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்வி, வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ளோர் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதனிடையே, போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க வெள்ளி, செவ்வாய் அன்றும் சேர்த்து 5 நாள்கள் விடுமுறை விட அரசுக்கு, அரசு ஊழியர்கள் சங்கம் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தது.