News October 10, 2024
அரசு பஸ் மோதி தொழிலாளி உயிரிழப்பு

பண்ருட்டி லட்சுமி நாராயணபுரத்தை சேர்ந்தவர் தொழிலாளி ஏழுமலை (52). இவர் இன்று இரவு 7.30 மணியளவில் அதே பகுதியில் உள்ள சென்னை மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பண்ருட்டி நோக்கி வந்த அரசு பஸ் அவர் மீது மோதியதில் உடல் நசுங்கிய ஏழுமலை அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 12, 2025
கடலூர் மாவட்டத்தில் 19,908 பேருக்கு தேர்வு

கடலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு வரும் நவ.15 & 16 ஆகிய 2 நாட்களுக்கு நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டத்தில் தாள்-1 தேர்வு மையங்களில் 4,191 பேரும், தாள்- 2 தேர்வு மையங்களில் 15,717 பேரும் என மொத்தம் 65 தேர்வு மையங்களில் 19,908 பேர் எழுத உள்ளனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருவதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று தெரிவித்துள்ளார்.
News November 12, 2025
கடலூர்: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு

கடலூர் மக்களே, உங்கள் பகுதியில் SIR படிவம் வழங்கும் போது நீங்கள் வீட்டில் இல்லையா? இதனால் உங்கள் ஓட்டுரிமை பறிபோய்விடும் என்ற கவலை உள்ளதா? கவலை வேண்டாம். <
News November 12, 2025
கடலூர்: தவறி விழுந்து பேருந்து ஓட்டுநர் பலி

சங்கிலி குப்பத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (40). தனியார் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவர், நேற்று இரவு ராமாபுரம் பைபாஸ் சாலை வழியாக டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மணிகண்டன் உடலை கைப்பற்றிய முதுநகர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


