News October 25, 2024
ராணுவத்தை திரும்ப பெறும் பணிகள் தொடக்கம்

எல்லையில் இருந்து இந்தியாவும், சீனாவும் தங்களது ராணுவத்தை திரும்பபெறத் தொடங்கியுள்ளன. சமீபத்தில் இருநாடுகளுக்கும் இடையே தீர்மானம் எட்டப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து டெம்சோக், டெப்சாங் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கட்டுமானங்கள் அகற்றப்பட்டு, இந்திய வீரர்கள் மேற்கு பகுதிக்கும், சீன வீரர்கள் கிழக்கு பகுதிக்கும் திரும்ப அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News July 9, 2025
வங்கியில் 2,500 காலியிடங்கள்.. ₹85,920 வரை சம்பளம்!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் உள்ள 2500 Local Bank Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 21 -30 வயதுக்குட்டப்பட்ட எந்த டிகிரி முடித்தவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். கணினி வழி தேர்வின் மூலம் தேர்ச்சி நடைபெறும். ₹48,480– ₹85,920 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் 24-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுக்கு <
News July 9, 2025
சுதந்திரத்துக்கு முன்பே இந்தியா – நமீபியா உறவு

1885-ன் பிற்பகுதியில் ஜெர்மனியின் காலனியாக இருந்த தென்மேற்கு ஆப்பிரிக்காவை, தென்னாப்பிரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. 1990-ல் சுதந்திரம் பெற்று ‘நமீபியா’ என அங்கீகாரம் பெற்றது. இதற்கான UN வாக்கெடுப்பில் இந்தியா தனது ஆதரவை தெரிவித்தது. தற்போது 28 லட்சம் மக்கள்தொகை கொண்ட அந்நாட்டில் இருந்து யுரேனியம் இறக்குமதி செய்வதை இந்தியா கையில் எடுத்துள்ளது. அங்கு கடும் வறட்சியும் உள்ளது.
News July 9, 2025
ஆஸி., லெஜெண்ட் பவுலர் காலமானார்

ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக கருதப்படும் கார்டன் ரோர்க்கி (87) காலமானார். 1959-ல் விளையாட தொடங்கிய இவர், தன் ஆக்ரோஷ பவுலிங் ஆக்ஷனால் எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்தார். ஆனால், இந்தியா டூரின் போது இவருக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிக்க, இவரது சர்வதேச கரியர் சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. இவரது மறைவுக்கு ரசிகர்கள், வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.