News October 25, 2024
ராணுவத்தை திரும்ப பெறும் பணிகள் தொடக்கம்

எல்லையில் இருந்து இந்தியாவும், சீனாவும் தங்களது ராணுவத்தை திரும்பபெறத் தொடங்கியுள்ளன. சமீபத்தில் இருநாடுகளுக்கும் இடையே தீர்மானம் எட்டப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து டெம்சோக், டெப்சாங் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கட்டுமானங்கள் அகற்றப்பட்டு, இந்திய வீரர்கள் மேற்கு பகுதிக்கும், சீன வீரர்கள் கிழக்கு பகுதிக்கும் திரும்ப அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News November 22, 2025
ஆபரேஷன் சிந்தூரால் சீனாவுக்கு லாபம்: USA

இந்தியா – பாக்., போரை, சீனா சோதனை களமாக பயன்படுத்தி கொண்டதாக அமெரிக்க அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தங்களது நவீன ஆயுதங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை உலகிற்கு காட்டவும், பிறநாடுகளுக்கு ஆயுதங்களை விற்கவும் போரை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டதாக கூறியுள்ளது. சீனாவின் HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பு, PL-15 ஏவுகணைகள், J-10 போர் விமானங்களை பாக்., போரில் பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளது.
News November 22, 2025
EPS-க்கு அருகதை இல்லை: ரகுபதி

நிரந்தர டிஜிபி நியமிக்கப்படாதது குறித்து EPS விமர்சித்திருந்த நிலையில், பொறுப்பு டிஜிபி குறித்து பேச EPS-க்கு அருகதை இல்லை என்று அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார். பொறுப்பு டிஜிபி என்ற முறையை கொண்டு வந்ததே ADMK தான் என கூறியுள்ள அவர், BJP-க்காகவே திமுகவை EPS குறைசொல்வதாக குறிப்பிட்டார். டிஜிபி மூலம் TN-ல் அதிகாரத்தை கைப்பற்றலாம் என நினைக்கும் பாஜகவின் எண்ணம் எடுபடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
News November 22, 2025
FLASH: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

2 நாள்களாக குறைந்த தங்கம் விலை இன்று, ஒரேநாளில் சவரனுக்கு ₹1,360 அதிகரித்து அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த வார வர்த்தக முடிவில், 22 கேரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் ₹11,630-க்கும், 1 சவரன் ₹93,040-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை இந்த வாரம் சரிவை சந்தித்துள்ளது. கிலோவுக்கு ₹3,000 குறைந்து ₹1.72 லட்சத்திற்கு விற்பனையாகி வருகிறது.


