News May 8, 2025

மகளிர் தொகை: புதிய ரேஷன் அட்டைதாரருக்கு முன்னுரிமை

image

மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் மாதந்தோறும் பெண்களுக்கு ₹ 1,000 மாநில அரசு வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் வருகிற ஜூன் மாதம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. அப்போது புதிதாக ரேஷன் அட்டைகள் வாங்கிய குடும்ப பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. திமுக அரசின் ஆட்சியில் 18.46 லட்சம் புதிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு அரசு முன்னுரிமை அளிக்கலாம் எனத் தெரிகிறது.

Similar News

News July 11, 2025

குஜராத் பாலம் விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆனது

image

குஜராத் மாநிலத்தில் மாஹி ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள காம்பிரா-முக்பூர் பாலத்தின் ஒரு பகுதி நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது. அதில் வந்த பல வாகனங்கள் ஒன்றின்பின் ஒன்றாக ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மாயமான 4 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்து தொடர்பாக 4 பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

News July 11, 2025

ஜூலை 11…வரலாற்றில் இன்று!

image

1710 – முதல் இந்திய விடுதலை வீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாள். * 1966 – திரைப்பட இயக்குநர் பாலாவின் பிறந்தநாள். *1982 – இத்தாலி மேற்கு ஜெர்மனியை 3-1 என்ற கோல்கணக்கில் தோற்கடித்து கால்பந்து உலகக்கோப்பையை வென்றது. *1991 – ஹஜ் பயணிகளை ஏற்றிச் சென்ற நைஜீரிய விமானம் சவூதி அரேபியாவில் விபத்துக்குள்ளானதில் 261 பேர் உயிரிழந்தனர். *2006 – மும்பை ரயில் குண்டுவெடிப்புகளால் 209 பேர் உயிரிழந்தனர்.

News July 11, 2025

தலையில் அதிக எண்ணெய் வைத்தாலும் ஆபத்து..!

image

தினமும் தலைமுடியில் அதிக எண்ணெய் தேய்த்தால் அது முடியின்கால்களை அடைத்துவிடுமாம். இதனால் தலைமுடி நன்றாக வளர்வதில் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளதாம். அதைப்போன்று அதிக எண்ணெய் இருக்கும்போது தூசியும், அழுக்கும் தலையில் சேருவதால் அரிப்பு, பொடுகு அதிகரிக்குமாம். ஆகையால் சிறிதளவு தேங்காய் எண்ணெயை தலை முழுவதும் படும்படி நன்றாக மசாஜ் செய்து, எண்ணெய் பிசுக்கு போகும் படி கழுவினாலே போதுமானதாம்.

error: Content is protected !!